மகாவித்துவான் சரித்திரம் – 2 (7அ)

ஒரு சமயத்தில் ஆறுமுகத்தாபிள்ளை, தம்முடைய குடும்ப சம்பந்தமாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரமொன்று எழுதிக் கொடுக்கும்படி நேர்ந்தது. அதிற் கையெழுத்துப்போடத் தொடங்குகையில் அவர், "ஆறுமுகம் பிள்ளை யென்று போடவா? ஆறுமுகத்தா பிள்ளை யென்று போடவா?" என்று கேட்டனர். இவர், "ஆறுமுகம் பிள்ளை யென்றால்  அத்துக் கெட்டுவிடுமே; ஆறுமுகத்தா பிள்ளை யென்றே போடலாம்" என்றனர். கேட்டவர்கள் மகிழ்ந்தார்கள்.

வீரத் துறவியும் வீரக் கவிஞரும்

-நல்லி குப்புசாமி செட்டியார் திரு நல்லி குப்புசாமி செட்டியார், சென்னையில் ‘நல்லி சில்க்ஸ்’ என்ற பிரமாண்டமான  பட்டு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருபவர். வெற்றிகரமான வணிகராக மட்டுமல்லாது, கலை இலக்கிய செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் கொண்டவராகவும் திகழ்பவர்;  25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருப்பவர்; பாரதி அன்பர்; மொழிபெயர்ப்புத் துறையை மேம்படுத்த ‘நல்லி திசை எட்டும்’ என்ற காலாண்டிதழை நடத்தி வருபவர்; பத்மஸ்ரீ,  கலைமாமணி விருதுகளைப் பெற்றவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே... சிகாகோவில் நடைபெற்ற … Continue reading வீரத் துறவியும் வீரக் கவிஞரும்

பாஞ்சாலி சபதம் – 1.1.24

பீமனைத் தொடர்ந்து விஜயனும், நகுல சகாதேவரும் தங்கள் தனையனை எதிர்த்து வாதிடுகின்றனர். இதுகாறும் அண்ணனை எதிர்த்துப் பேசியிராத அவர்கள் இவ்வாறு பேசுவது நெஞ்சம் கொதித்ததால் என்கிறார் மகாகவி பாரதி. அவற்றுக்குப் பதில் அளிக்கும் தருமன், கைப்பிடி கொண்டு சுழற்றுவோனின் லாவகத்துகேற்பச் சுழலும் சக்கரம் போன்றது மானுட வாழ்க்கை என்கிறான். “தோன்றி அziவது வாழ்க்கை” என்ற தத்துவத்தை முன்வைக்கும் தருமன், தந்தை சொல் கேட்பது ராமன் காட்டிய வழி என்கிறான்....

ஸ்வதந்திர கர்ஜனை – 2(11)

வயதில் முதியவரும் கூட்டத்தின் தலைவரும் பஞ்சாப் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவருமான லாலாஜியை சார்ஜண்ட் சாண்டர்ஸ் என்பான் தடிகொண்டு பலம் கொண்டமட்டும் தாக்கினான். அவன் அடித்த அடிகள் அவர் மார்பில் விழுந்தன. தொண்டர்கள் லாலாவை தடியடியிலிருந்து காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. மிருக வெறியோடு சார்ஜண்ட் சாண்டர்ஸ் அடித்த அடியில் லாலா நினைவை இழந்தார். தொண்டர்கள் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சில நாள்களில் லாலாஜி உயிரிழந்தார்...

சுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷர்

தமிழகத்தின் ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவரான (டி.ஜி.பி) திரு. ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்தபோது, அத்துறையை வெளிப்படையான அமைப்பாக மாற்றினார். நேர்மையின் சின்னமாக அரசு அதிகாரிகள் விளங்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். சந்தனக் கடத்தல் கும்பல் தலைவன் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படைக்கு தலைவராக இருந்தபோது மலைவாழ் மக்களுக்கு சேவை செய்யும் சேவகர்களாக காவல்துறையினரை மாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் 15வது ஜெயந்தியின்போது திரு. ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ். எழுதிய கட்டுரை இங்கே…

பாஞ்சாலி சபதம் – 1.1.23

அஸ்தினாபுரம் செல்வது என்ற தனையன் தருமனின் முடிவைk கேட்டவுடன் பீமன் கோபாவேசம் கொள்கிறான். துரியன் சூதுப்படி நாம் அஸ்தினாபுரம் செல்வதென்றால் படையெடுத்துச் செல்வோம் என்கிறான்; தம்பி அர்ஜுனனிடம் வில்லைப் பூட்டுக என்கிறான். பாண்டவர்களுக்கு சூதில் விருப்பமில்லை என்பதை மகாகவி பாரதி இப்பாடல்களில் காட்டுகிறார்... “இரு நெருப்பினிடையினில் ஒரு விறகா?” என்ற இனிய உவமையை இங்கு எடுத்தாள்கிறார்.

விநாயக சதுர்த்தி

புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகளுள் ஒன்று இது. இதில் செவிவழிக் கதை ஒன்றை சிறுகதைக்குள் நுழைக்கும் புதுமைப்பித்தன், நாத்திகவாதம் செய்யும் கதாபாத்திரமாக தன்னையே இருத்திக் கொள்கிறார். தமிழக வழக்கப்படி கதையில் வரும் மனைவி பக்திமான் தான் வேறென்ன?

இன்னொரு விவேகானந்தர்!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள நீதியரசர் திரு. வெ.இராமசுப்பிரமணியன், இலக்கிய ஆர்வலர்; நாட்டுநலம் விழையும் நற்பண்பாளர்; சிறந்த மேடைப் பேச்சாளர். அன்னாரது இக்கட்டுரை, தினமணி நாளிதழில் (12.01.2014) விவேகானந்தரின் 151வது ஜெயந்தியை ஒட்டி வெளியானதாகும்.

பாஞ்சாலி சபதம் – 1.1.22

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கை முன்வைத்து, தங்கள் பெரிய தந்தையார் மன்னர் திருதராஷ்டிரனின் அழைப்பை ஏற்பதாக அறிவிக்கிறான் தருமன். துரியன் சூது செய்யினும் மன்னரின் அழைப்பை ஏற்பது தங்கள் கடன் என்று தருமன் சொல்வதாகக் கூறுகிறார் மகாகவி பாரதி.

மகாவித்துவான் சரித்திரம் – 2 (6ஈ)

தாம் சொன்ன பொருளைச் செட்டியார் சிறிதும் பாராட்டவில்லையேயென்ற வருத்தம் மேற்சொன்ன மாணவருக்கு இருந்தது. எழுந்து செல்லுகையில் அம்மாணவரை நோக்கி இவர், "செட்டியார் மதிக்கவில்லையென்ற வருத்தம் உமக்கு இருப்பதாகத் தெரிகிறது. உண்மைப் பொருளுக்கு எப்பொழுதும் மதிப்புண்டு. அவர் மதியாவிட்டால் அதற்கு இழிவொன்றுமில்லை. பிறருடைய மதிப்பையும் அவமதிப்பையும் கவனிக்கக் கூடாது'' என்று ஆறுதல் கூறினார்.

பாரதத்தின் ஞானதீபம்

திரு. வ.வே.சு., சென்னை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர், பாரதி அன்பர். சென்னையில் வானவில் பண்பாட்டு மன்றம் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருபவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…

பாஞ்சாலி சபதம் – 1.1.21

அமைச்சர் விதுரன் தனது அரசனின் தூதையும் கடமையாகச் சொல்ல வேண்டும்; சூது நல்லதல்ல என்று அறிவுரைக்கவும் வேண்டும் என்ற இருதலைக்கொள்ளி எறும்பாகிறார். சூது நல்லதல்ல என்று மன்னர் பலமுறை கூறியும் இணங்காத துரியனின் தீய உள்ளத்தைக் கூறும் அமைச்சர், ‘இதில் நீயே முடிவெடு’ என்கிறார் தருமனிடம்....

ஸ்வதந்திர கர்ஜனை- 2(10)

இந்தியர்களின் ஒரே கோரிக்கை ‘பரிபூரண சுதந்திரம்’, இதற்கு மாற்றாக எந்தவித சீர்திருத்தங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே சைமன் கமிஷனை இந்தியா முழுவதும் எதிர்ப்போம் என்றது சென்னை காங்கிரஸ். அதற்குப் பிறகு இந்திய அரசியலில் ஒரு பரபரப்பு நிலவியது. இங்கிலாந்திலிருந்து வரும் சைமன் கமிஷனை எதிர்ப்போம் என்று இந்தியாவில் இருந்த எல்லா கட்சிகளும், தமிழ்நாட்டில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி என்ற ஒன்றைத் தவிர, மற்ற அனைவரும் ஒரே குரலில் ‘எங்கள் கோரிக்கை பரிபூரண சுயராஜ்யமே தவிர சீர்திருத்தங்கள் அல்ல, ஆகவே சைமனை எதிர்ப்போம் என்று உரக்கக் கூவினர்.

நாடு முன்னேற விவேகானந்தர் வேண்டும்!

பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா (86), மதுரையில் வசிப்பவர்; தமிழ் மேடைப் பேச்சாளர்களுள் முத்திரை பதித்த பட்டிமண்டப நாவலர்; நகைச்சுவை மிகுந்த தனது பேச்சால் உலகத் தமிழர்களைக் கவர்ந்து வருபவர். மதுரையில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணர்- சுவாமி விவேகானந்த பக்தர்களின் 18-வது மாநில மாநாட்டில் திரு.சாலமன் பாப்பையா ஆற்றிய உரையின் சுருக்கம் இது....

பாஞ்சாலி சபதம் – 1.1.20

துரியனின் சூதுச் சூழ்ச்சியை அறிந்த தருமன் திகைப்படைந்து சித்தப்பனிடம் இதற்கு நீங்களே ஒரு வழி கூறுங்கள் என்கிறான். ‘வெல்லக் கடவர் எவரென்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?’ என்று வினவுகிறான்...