திரு. பொன். பாண்டியன் குடியாத்தத்தில் வசிக்கிறார்; அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...
Author: vamumurali
பாஞ்சாலி சபதம் – 1.2.11
நல்லமைச்சனுக்கு அழகு மன்னருக்கு வரும் இடர் உரைத்தல். அதன்படி, சூதாட்டத்தின் திசைவழி பாண்டவர்களை அழிப்பதே என்பதை உணர்ந்த அமைச்சரும் சித்தப்பனுமான விதுரன், மன்னர் திருதராஷ்டிரனுக்கு இதனை இத்துடன் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறான். கெட்ட எண்ணம் கொண்ட துரியனால் குருகுலம் அழியப்போகிறது. அதைத் தடுக்காமல், “கேட்குங் காதும் இழந்துவிட்டாயோ?” என்கிறான். “நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம் - நேரு மென்று நினைத்திடல் வேண்டா” என்று அறுதியிட்டு உரைக்கிறான். இவை அனைத்தும் விழலுக்கு இறைந்த நீரென்று தெரிந்திருந்தும் கூட. சூதாட்டச் சருக்கம் இங்கே நிறைவெய்துகிறது....
குருவிப் பாட்டு
மகாகவி பாரதியின் கவிதைகள் பல இன்னமும் கண்டறியப்படாமல் உள்ளதை இப்பாடல் காட்டுகிறது. பாரதி ஆய்வாளர் திரு. ரா.அ.பத்மநாபன் ‘பாரதி புதையல்’ எனும் நூலில் வெளியிட்டிருக்கிற கட்டுரையுடன் கூடிய மகாகவியின் இனிய கவிதை இது… இந்தப் பாட்டு புதுச்சேரியில் ‘சரஸ்வதி விலாச சபை’ என்ற இளைஞர் சங்கத்தில் 1909இல் பாரதியாரே பாடியது.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவேகானந்தரின் சிந்தனைகள்
கோவையைச் சார்ந்த மேலாண்மைத் துறை பேராசிரியரும் பாஜக மாநிலத் துணத் தலைவருமான பேரா. ப.கனகசபாபதி அவர்களின் சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...
பாஞ்சாலி சபதம் – 1.2.10
விதிவழியில் சூதாட்டம் தொடங்கிவிட்டது. உடனே மகாகவி பாரதியில் கவிதை சந்தம் மாறுகிறது. சூதாட்டத்துக்கே உரித்த துள்ளலான நடையில் தருமனின் வீழ்ச்சியைப் பதிவு செய்கிறார் கவி. சகுனி சார்பாக பணயம் வைக்கும் துரியனிடம் “ஒருவனாடப் பணயம்-வேறே ஒருவன் வைப்ப துண்டோ?” என்று தருமன் கேட்டாலும், மருகன் என்பதால் தனக்கு உரிமையுண்டு என்கிறான் துரியன். அடுத்து மணிமாலை தொடங்கி, ஆடை- ஆபரணங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள், சேவகர்கள், பணிப்பெண்கள், தொண்டர்கள் எனப் பலவற்றை பணயம் வைத்து இழக்கிறான் தருமன். கடைசியில் பணயம் வைக்க ஏதுமில்லாத நிலையில், 'நா டிழக்க வில்லை, -தருமா!நாட்டை வைத்தி'டென்றான்’ சகுனி.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(14)
இந்திய நாட்டில் பழம்பெரும் ஸ்தாபனமாக விளங்குவது காங்கிரஸ். அதன் வயது இப்போது ஐம்பது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தபோதும், எத்தனையோ பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தபோதும், ஆண்டுதோறும் நடத்துகின்ற மாநாட்டை மட்டும் நடத்தத் தவறியதே இல்லை. அது எங்கள் தேசிய கடமையாக இருந்து வந்திருக்கிறது. ‘காங்கிரஸ்’ எந்த ஜாதியாருக்கோ, மதத்தாருக்கோ அல்லது வேறு எந்த பிரிவினருக்கோ பிரதிநிதியாக இல்லை. இந்திய மக்கள் அனைவருக்கும், நிலவும் அத்தனை கொள்கைகளுக்கும், எல்லா உரிமைகளுக்கும் பிரதிநிதியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.....
பாஞ்சாலி சபதம் – 1.2.9
சகுனியின் ஏளனத்தை அடுத்து சூதாட தருமன் சம்மதிக்கிறான். அப்போது முந்தைய வழக்கத்தை தொடர்வது மரபு என்ற வாதத்தை மகாகவி பாரதி கண்டிக்கிறார். ”முன்பி ருந்ததொர் காரணத் தாலே, மூடரே,பொய்யை மெய்என லாமோ?” என்கிறார். இறுதியில் “மதியி னும்விதி தான் பெரி தன்றோ?” என்று புலம்பலுடன் இக்கவிதையை நிறைவு செய்கிறார்...
தமிழகத்திற்கு எழுச்சி தரும் ரத யாத்திரை
இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் திரு. மயில்சாமி அண்ணாதுரை, கோவை மாவட்டம், கோதவாடி என்ற கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர். தனது கடும் உழைப்பால் முன்னேறி, பெங்களூரிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) ‘சந்திரயான்’ திட்ட இயக்குனராகச் செயலாற்றியவர். 2013-இல் கோவையில், சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்க விழாவில் பேசிய அன்னாரது கருத்துகள் இங்கே....
மகாவித்துவான் சரித்திரம் – 2(8)
ஒருநாள் நாங்கள் பாடங்கேட்டுக் கொண்டிருந்த பொழுது சென்னையிலிருந்த சுப்பராய செட்டியாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், "நான் திருச்சிராப்பள்ளியில் தங்களிடம் படித்துக் கொண்டிருக்கையில் வெஸ்லியன் மிஷன் ஸ்கூலில் எனக்கு வேலை கிடைத்தது. முதல் மாதச் சம்பளமாகிய ரூபாய் பதினைந்தைத் தங்களிடம் கொடுத்து வந்தனம் செய்து பெற்றுக்கொண்ட பொழுது தாங்கள் இந்தப் பதினைந்தைத் திரும்பவைத்தால் என்ன தொகையோ அதனைப்பெற்று வாழ்ந்திருக்க வேண்டுமென்று அருளிச்செய்தீர்கள். அந்தப்படியே தங்களுடைய பெருங்கருணையினால் எனக்கு இன்று ரூ. 50 சம்பளம் ஏற்பட்டது" என்று தெரிவித்திருந்தார். இவருடைய நல்வாக்குப் பலிதமாகுமென்பதைச் சிலராற் கேட்டிருந்த நாங்கள் அக்கடிதத்தால் அச்செய்தி உண்மையென்று அறிந்து மகிழ்ந்தோம்....
விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம்!
அமரர் மௌலானா வஹிதுதீன் கான் (1925- 2021), பாரதத்தின் இஸ்லாமியப் பேரறிஞர்களுள் முதன்மையானவர். உத்தரப்பிரதேசத்தின் அஸம்கார் பகுதியில் வாழ்ந்தவர். திருகுர்ஆனுக்கு நவீன நோக்கில் உரை எழுதியவர்; முஸ்லிம் மார்க்க சிந்தனையாளர்களால் மிகவும் போற்றி மதிக்கப்படுபவர். பாரதம் உயர வேண்டுமானால் இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற சமரசக் கருத்தை ஓயாமல் முன்வைத்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம்- 1.2.8
சூதாட்டத்தின் தீமையைக் கூறும் தருமனிடம், ‘சாத்திரம் பேசாதே, மன்னர்களை சூதாட அழைத்தால் மறுப்பது மரபல்ல’ என்கிறான் சகுனி.
பொன்னை விரும்பும் பூமியிலே…
ஜாவர் சீதாராமனின் திரைக்கதை வசனத்தில், கே.சங்கரின் இயக்கத்தில், 1962-இல் வெளியான திரைப்படம் ஆலயமணி. முக்கோணக் காதல்கதைதான்; ஆனால், பண்பாடு மீறாத கதைக்களம். படத்தில் உள்ள ஏழு பாடல்களையும் கவியரசு கண்ணதாசனே எழுதி இருக்கிறார். அத்தனையும் தமிழ்த் திரையுலகின் சொத்து. விதிவசமாக காதலை தியாகம் செய்து நாயகனை கணவனாக ஏற்கும் மனைவியாக சரோஜாதேவி நடித்திருக்கும் இப்படத்தின் நாயகன் சிவாஜி கணேசன். ஊனமுற்ற தன்னை கண்போலக் காக்கும் மனைவியைப் பற்றி கணவன் பாடுவதாக அமைந்த அற்புதமான பாடல் இது...
ஓர் ஒப்பற்ற மகான்
பூஜ்யஸ்ரீ சுவாமி கௌதமானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி; சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இரண்டாவது கட்டுரை இங்கே....
பாஞ்சாலி சபதம் – 1.2.7
தோலுக்காக பசுவினைக் கொல்வாருண்டோ? சூது அத்தகையதுதான் என்கிறான் தருமன். அவனுள்ளம் இது பீடன்று என மறுக்கிறது. அறநூலோர் வெறுக்கும் சூதினை நெஞ்சிலிருந்து நீக்குக என்று மாமன் சகுனியிடம் மன்றாடுகிறான் தருமன்...
கடல் – கண்ணிகள்
‘இதுவரை அச்சேறாத பாரதியார் கவிதை’ என்று குறிப்பிட்டு 1966 தினமணி ஞாயிறு மலர் ஒன்றில் ‘கடல் – கண்ணிகள்’ என்ற தலைப்பில் வெளியான கவிதை - மனிதனும் கடலும் உரையாடுவதாக அமைந்த 44 வரி படைப்பு இது.