பாஞ்சாலி சபதம் – 2.1.8

சகாதேவனை அடுத்து அசுவ சாஸ்திர வல்லுநனான நகுலனையும் சூதில் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். அப்போது தனது பாதை தவறு என்று சிறு ஞானோதயம் தருமனுக்கு ஏற்படுகிறது. அதை உணர்ந்த சகுனி, “சிற்றன்னை மாத்ரிக்குப் பிறந்தவர்கள் என்பதால் சகாதேவனையும், நகுலனையும் வைத்து இழந்தாய் போலும். குந்தியின் பிள்ளைகளான உன் உடன் பிறந்தவர்களான பீமனையும் அர்ச்சுணனையும் சூதில் வைக்கத் தயங்கினை போலும்” என்று எள்ளி நகையாடுகிறான்.

மதத்திலே மறுமலர்ச்சி கண்ட மகான்

தமிழக முன்னாள் முதல்வர் அமரர் திரு. மு.கருணாநிதி (1924- 2018), சுவாமி விவேகானந்தர் மீது  கொண்டிருந்த அளப்பரிய மரியாதை  இக்கட்டுரையில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் தான் குமரிமுனையில் விவேகானந்தர் பாறையில் அவருக்கு உயரிய நினைவு மண்டபம் விவேகானந்த கேந்திரத்தால் அமைக்கப்பட்டது. அப்பொழுது அவர் எழுதிய கட்டுரையே இந்தக் கட்டுரையாகும்.

பாரதியும் பாரதிதாசனும்

தமிழ் காத்த நல்லோரில் அண்மைக்காலம் வரை வாழ்ந்த பெரியார், அமரர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் (1916- 2002). தமிழ் இலக்கியச் சுவையை உணர்த்தும் திறனாய்வுத் துறைக்கு முன்னோடியானவர். அன்னாரது நூலான ‘பாரதியும் பாரதிதாசனும்’ இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...

ஸ்வதந்திர கர்ஜனை- 2(17)

1940. முந்தைய ஆண்டில் துவங்கிய யுத்தம் ஐரோப்பாவில் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. இனி இந்த யுத்தத்தால் நடக்கப் போகும் அழிவுகளுக்கு ஹிட்லரே காரணம் என்று காந்திஜி கூறினார். என்னதான் பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களிடம் கருணையின்றி நடந்து கொண்டாலும் இந்த யுத்தத்தில் தனது அனுதாபம் முழுவதும் இங்கிலாந்திடமும் அதனோடு இணைந்து போரிடும் நேச நாடுகளின் பக்கம்தான் என்றார் காந்திஜி.

தேசத்தைக் காத்த தெய்வத் துறவி

பெங்களுரு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை 12.01.2009 அன்று திறந்துவைத்து, பாஜக மூத்த தலைவர் திரு. எல்.கே.அத்வானி ஆற்றிய உரையின் சுருக்கம் இது...

பாஞ்சாலி சபதம் – 2.1.7

துரியனின் ஆசை வார்த்தையை ஏற்று, தம்பியரில் இளையவனான சகாதேவனைப் பணயம் வைத்து ஆடிய தருமன் மீண்டும் தோற்கிறான். “தீய சகுனி கெலித்திட்டான்”.

பாணபத்திரரும்  சியாமா சாஸ்திரியும் 

திருவிளையாடல் புராணத்தில் ஏமநாதன் என்ற வடநாட்டு பாடகன் மதுரை வந்து, 'எனக்கிணையாக பாடக் கூடியவர் பாண்டிய நாட்டில் உண்டா? ' என சவால் விட்ட கதை உண்டு. அதே போன்றதொரு சம்பவம் சியாமா சாஸ்திரிகள் வரலாற்றிலும் உண்டு.

மார்கழிப் பனித்துளி (1-3)

‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் ‘மார்கழிப் பனித்துளி’ கவிதைகளை அவ்வப்போது எழுதி வருகிறார். அற்புதமான சந்தம், இனிய தாள லயத்துடன், அரும் பொருளுடன் அமைந்த இசைக்கவிதைகள் இவை. அவரது அனுமதியுடன் இக்கவிதைகள் இங்கே இடம் பெறுகின்றன...

சுவாமிஜி நமது தேசியத்தின் தன்மானம்

முன்னாள் ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி, ஆங்கில வார இதழான ‘THE WEEK’ பத்திரிகையில் 2014-இல் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது....

பாஞ்சாலி சபதம் – 2.1.6

சூதாட்டத்தில் நாட்டை வைத்திழந்த தருமனிடம் அவனது சகோதரரை வைத்து ஆடினால், அதில் வென்றால் நாட்டை மீட்கலாம் என ஆசை வார்த்தை கூறுகிறான் துரியன். அது கண்டு அவையினர் மருகுகின்றனர். ஆனால், யாருக்கும் துரியனை எதிர்த்துப் பேசும் துணிவில்லை. பீமனும், விஜயனும் நகுலனும் வேதனையில் வாட, அவர்களின் பின்னவனான சகாதேவன் ஊமை போலிருந்தான்; ஏனெனில் அவன் பின்னாளில் நடக்கப் போவதை முன் உணர்ந்தவன் (ஜோதிட வல்லுநன்) என்கிறார் மகாகவி பாரதி. “சிங்க மைந்தை நாய்கள் - கொல்லுஞ் செய்தி காண” சகிக்காமல் அவையோர் தவிக்கின்றனர்..

அக்ரஹாரத்துப் பூனை

இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் ‘ஆஷாடபூதி’ மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.

இவர் தான் வீரத்துறவி விவேகானந்தர்

திரு.ப.ஜீவானந்தம் (1907- 1963), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளுள் ஒருவர்; தமிழகத்தில் பொதுவுடைமை சித்தாந்தம் பரவக் காரணமான பெரியோர்; ஜனசக்தி பத்திரிகையின் நிறுவனர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

பாஞ்சாலி சபதம் – 2.1.5

அவையில் சூதாட்டத்தை விதுரனைத் தவிர எதிர்ப்பார் யாருமில்லாத சூழலில், மீண்டும் தொடர்கிறது, வம்சம் அழிக்க வந்த சூது. பாண்டவர் தலைவனான தருமன் அங்கு நாட்டை பணையம் வைத்து இழக்கிறான். மன்னனே ஆயினும் நாட்டை ஆள மட்டுமே உரிமை உடையவன்; அவன் நாட்டை தனது சொந்தச் சொத்தாகக் கருதக் கூடாது என்று பொருள்பட, கோயில் பூசாரி கடவுள் சிலை விற்பதுபோல, வாயில் காப்போன் காக்க வேண்டிய வீட்டை சூதில் வைத்து இழப்பது போலவும், தேசத்தை சூதில் பணையம் வைத்து இழக்கிறான் தருமன் என்று கூறிக் கண்டிக்கிறார் மகாகவி பாரதி. “சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்” என்றும் குமுறுகிறார். மகாகவியின் தேசபக்தி கனலென வெளிப்படும் கவிதைத் தருணம் இது ...

மகாவித்துவான் சரித்திரம் – 2(9)

புதுக்கோட்டை மன்னராகிய கெளரவம் பொருந்திய இராமசந்திர தொண்டைமானவர்களுடைய மூத்த தேவியாரான ஸ்ரீ பிரகதம்பா பாய் சாகேபவர்கள் அங்கே இவர் வந்திருத்தலைக் கேள்வியுற்றுத் தக்கவர்களை அனுப்பி இவரை அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து நாடோறும் பல அரிய விஷயங்களைக் கேட்டார்கள். தேவாரங்கள் சிலவற்றிற்கும் பெரிய புராணத்திலுள்ள பாடல்கள் சிலவற்றிற்கும் பொருள் கேட்டு அறிந்து தக்க ஸம்மானங்கள் பல செய்வித்து இவருடைய பூஜைக்கு வேண்டிய பாத்திரங்களை வெள்ளியினாலே செய்வித்து அளித்தார்கள்.

மகரிஷி விவேகானந்தர்

ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்து…