சங்கத் தமிழ்க் கவிதைகளை தற்கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி சிந்தனையைத் தூண்டுவதில் எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் சிறப்பிடம் வகிக்கிறார். தமிழறிஞர்கள் செய்ய வேண்டிய அரும்பணி இது...
Author: vamumurali
மகாகவியின் மறுபக்கம்
பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி, ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது....
வீர நரேந்திரா விவேகானந்தா! (கவிதை)
சென்னையில் வசிக்கும் விவேகானந்தரின் தீவிர அபிமானியான திரு. விவேகானந்ததாசன், அவரது கருத்துகளை இணையவழியாகப் பரப்பி வருபவர். அன்னாரது கவிதைப் பாடல் இது....
மயக்கமா, கலக்கமா?
‘சுமைதாங்கி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசரின் இப்பாடல், காலத்தை வென்று ரீங்கரிக்கும் இனிய தத்துவப் பாடல்; வாழ்வில் கலக்கம் சூழும் தருணங்களில் மனம் தெளிவு பெறக் கேட்க வேண்டிய அற்புதமான திரைப்பாடல்….
பாவி என்பதுதான் பாவம்
ஹிந்துக்களின் பாவ- புண்ணியக் கோட்பாட்டிற்கும், கிறிஸ்தவர்களின் பாவக் கோட்பாட்டிற்கும் என்ன வித்தியாசம்? சுவாமி விவேகானந்தரின் வழியில் விளக்குகிறார், எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...
மகாகவி பாரதியின் இறுதி நாட்கள்
பாரதி ஆய்வாளரான ரா.அ.பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, ‘சித்திர பாரதி’ என்ற நூலை வெளியிட்டார். 1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்:
காவியில் பூத்த கனல்
திரு. ஆர்.பி.சாரதி ஆசிரியராகப் பணியாற்றியவர்; கல்வித்துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றவர்; 1953 முதல் எழுத்தாளர். சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். திரு.ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப் பிறகு இந்தியா’, இலங்கையின் வரலாறு கூறும் ‘மஹாவம்சம்’, முகலாய மன்னர் பாபரின் சரித்திரமான ‘பாபர் நாமா’ ஆகியவற்றை தெள்ளுதமிழில் வழங்கியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
மக்கள் கவி பாரதி
தமிழக முன்னாள் முதல்வர் திரு. சி.என்.அண்ணாதுரை, பிற திராவிட அறிஞர்களைப் போல மகாகவி பாரதியை மூடி மறைக்க விரும்பாதவர். பாரதியை தேசியகவி என்று சொல்வதில் அவருக்கு சற்றே சங்கடம் இருந்தாலும், மக்களுக்கான கவிஞர் என்று அவரைக் கொண்டாடினார். இது திரு. அண்ணாதுரை அவர்களின் கட்டுரை.
சுவாமி விவேகானந்தரின் பொருளாதாரச் சித்தாந்தம்
திரு. வானமாமலை, சுதேசி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் வெளிவந்த ‘சுதேசி செய்தி’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்ன்னாரது கட்டுரை இங்கே…
வெய்ய இடி
இந்தியா 27.09.1909 இதழில் வெளியான ‘ஞானரதம்’ கதையில் இடம் பெறும் காதலைப் பற்றிய கவிதை இது.
புகழையும் துறந்த துறவி
மூத்த பத்திரிகையாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் ‘தினமணி’ நாளிதழில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...
மகாகவிகள் வாழ்த்திய தமிழ்ப் பேராசான்
இன்று நாம் காணும் தொன்மையான தமிழ் இலக்கியங்களில் பலவற்றை கரையானுக்கு இரையாகாகாமல் பனையேடுகளிலிருந்து நூலாக மாற்றிக் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது கடும் முயற்சியும் உழைப்பும் இல்லாதிருப்பின், பல பழந்தமிழ் இலகியங்களை நாம் அறிந்திருக்கவே இயலாது. அவரது சிறப்பை அறிந்து அந்நாளிலேயே மகாகவிகள் இருவர் வாழ்த்துக் கவிதை பாடி மகிழ்ந்துள்ளனர். அது பற்றி இங்கே காண்போம்…
பாரதியாரும் கோவில் யானையும்
பாரதியியல் ஆய்வாளரும், சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவருமான பேரா. திரு. ய.மணிகண்டன், ‘தினமணி’ நாளிதழில் எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. நன்றியுடன் மீள்பதிவாகிறது...
தமிழ் வளர்ப்பு – பாரதி விடுத்த கோரிக்கை
மகாகவி பாரதி தாம் எழுதிய கவிதை, கட்டுரை, கதைகளை நூலாக்க வேண்டுமென்ற அதீத தாபம் கொண்டிருந்தார். ஆனால், அடிமை இந்தியாவில் அதற்கான சூழல் அவருக்கு வாய்க்கவில்லை. அவரது நிலையோ அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலை. எனவே, தமிழ் வளர்ப்புப் பண்ணை என்ற பெயரில் தமது நூல்களை வெளியிட முன்பதிவுத் திட்டம் போன்ற ஒரு நிதி முதலீட்டுத் திட்டத்தை நடத்த விழைந்தார். அந்த தமிழ் வளர்ப்புப் பண்ணை சார்பில் வெளியான விளம்பரம் இது. இந்த விளம்பரச் செய்தியை மகாகவி பாரதியே எழுதினாரா என்பது உறுதியாகாத தகவல். அதேசமயம், அக்காலத்தில் பாரதியின் துடிப்பு மிகு எழுத்தார்வத்துக்கு அற்புதமான ஆதார ஆவணம் இது…
ஆரிய – திராவிட இனவாதம் குறித்து விவேகானந்தர்
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் திரு. ஆர்.பி.வி.எஸ்.மணியன், சுவாமி விவேகானந்தரின் கருத்துகளின் அடிப்படையில் எழுதிய அற்புதமான கட்டுரை இது....