மகாகவி பாரதியின் கவிதைகள் பல இன்னமும் கண்டறியப்படாமல் உள்ளதை இப்பாடல் காட்டுகிறது. பாரதி ஆய்வாளர் திரு. ரா.அ.பத்மநாபன் ‘பாரதி புதையல்’ எனும் நூலில் வெளியிட்டிருக்கிற கட்டுரையுடன் கூடிய மகாகவியின் இனிய கவிதை இது… இந்தப் பாட்டு புதுச்சேரியில் ‘சரஸ்வதி விலாச சபை’ என்ற இளைஞர் சங்கத்தில் 1909இல் பாரதியாரே பாடியது.
Category: பாரதி இலக்கியம்
பாஞ்சாலி சபதம் – 1.2.10
விதிவழியில் சூதாட்டம் தொடங்கிவிட்டது. உடனே மகாகவி பாரதியில் கவிதை சந்தம் மாறுகிறது. சூதாட்டத்துக்கே உரித்த துள்ளலான நடையில் தருமனின் வீழ்ச்சியைப் பதிவு செய்கிறார் கவி. சகுனி சார்பாக பணயம் வைக்கும் துரியனிடம் “ஒருவனாடப் பணயம்-வேறே ஒருவன் வைப்ப துண்டோ?” என்று தருமன் கேட்டாலும், மருகன் என்பதால் தனக்கு உரிமையுண்டு என்கிறான் துரியன். அடுத்து மணிமாலை தொடங்கி, ஆடை- ஆபரணங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள், சேவகர்கள், பணிப்பெண்கள், தொண்டர்கள் எனப் பலவற்றை பணயம் வைத்து இழக்கிறான் தருமன். கடைசியில் பணயம் வைக்க ஏதுமில்லாத நிலையில், 'நா டிழக்க வில்லை, -தருமா!நாட்டை வைத்தி'டென்றான்’ சகுனி.
பாஞ்சாலி சபதம் – 1.2.9
சகுனியின் ஏளனத்தை அடுத்து சூதாட தருமன் சம்மதிக்கிறான். அப்போது முந்தைய வழக்கத்தை தொடர்வது மரபு என்ற வாதத்தை மகாகவி பாரதி கண்டிக்கிறார். ”முன்பி ருந்ததொர் காரணத் தாலே, மூடரே,பொய்யை மெய்என லாமோ?” என்கிறார். இறுதியில் “மதியி னும்விதி தான் பெரி தன்றோ?” என்று புலம்பலுடன் இக்கவிதையை நிறைவு செய்கிறார்...
பாஞ்சாலி சபதம்- 1.2.8
சூதாட்டத்தின் தீமையைக் கூறும் தருமனிடம், ‘சாத்திரம் பேசாதே, மன்னர்களை சூதாட அழைத்தால் மறுப்பது மரபல்ல’ என்கிறான் சகுனி.
பாஞ்சாலி சபதம் – 1.2.7
தோலுக்காக பசுவினைக் கொல்வாருண்டோ? சூது அத்தகையதுதான் என்கிறான் தருமன். அவனுள்ளம் இது பீடன்று என மறுக்கிறது. அறநூலோர் வெறுக்கும் சூதினை நெஞ்சிலிருந்து நீக்குக என்று மாமன் சகுனியிடம் மன்றாடுகிறான் தருமன்...
கடல் – கண்ணிகள்
‘இதுவரை அச்சேறாத பாரதியார் கவிதை’ என்று குறிப்பிட்டு 1966 தினமணி ஞாயிறு மலர் ஒன்றில் ‘கடல் – கண்ணிகள்’ என்ற தலைப்பில் வெளியான கவிதை - மனிதனும் கடலும் உரையாடுவதாக அமைந்த 44 வரி படைப்பு இது.
பாஞ்சாலி சபதம் – 1.2.6
வெல்ல முடியும் என்ற எண்ணம் வரவழைப்பதே சூதாட்டத்தின் முதல்படி. அவ்வாறே, தருமனுக்கு சகுனி ஆசைவார்த்தை கூறுவதாக இப்பாடல்களை அமைத்திருக்கிறார் மகாகவி பாரதி...
மகாகவி புதுவைக்குப் போன சூழ்நிலை
மகாகவி பாரதியின் புகழ் பரப்பிய அமரர் தஞ்சை வெ.கோபாலன் ‘தினமணி’யில் பத்தாண்டுகளுக்கு முன், பாரதி நினைவுநாளில் எழுதிய கட்டுரை இது. பாரதியின் பிறந்த நாளை ஒட்டி இன்று மீள்பதிவாகிறது…
பாஞ்சாலி சபதம்- 1.2.5
சூதாட அழைத்த சகுனிக்கு, ‘அது அறமன்று’ என தருமன் அவையில் மறுப்புரை கூறுவதாக மகாகவி பாரதி எழுதுகிறார்...
என் தந்தை
மகாகவி பாரதியின் இளைய மகள் சகுந்தலா. இவரை மகாகவி ‘பாப்பா’ என்றுதான் அழைப்பார். பாரதியாரின் அன்பு மகள் தன் தந்தையைப் பற்றி ‘என் தந்தை’ எனும் தலைப்பில் ஒரு நூலை இயற்றி பாரதியார் பற்றிய பல அரிய செய்திகளைக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்து சில சுவையான பகுதிகளை, மகாகவி பாரதியின் பிறந்த நாளை ஒட்டி, இங்கே காண்போம்.
பாஞ்சாலி சபதம் – 1.2.4
அஸ்தினாபுர அரசவைக்கு பாண்டவர் வந்து அமர்ந்ததும், கவறாட்டத்தில் இணையற்ற புகழுடையவனான சகுனி தருமனை சூதாட்டத்துக்கு அழைக்கிறான். வில்லுறு போரில் வென்றவர்களான நீங்கள் வல்லுறு சூதுப்போரிலும் வெல்ல வேண்டும் என்று சகுனி அழைப்பதாக மகாகவி பாரதி கவிதை புனைகிறார்...
பாஞ்சாலி சபதம்- 1.2.3
மறுநாள் காலை அரச ஆடை புனைந்து, திருதராஷ்டிரன் அவைக்களத்தை ஏகுகின்றனர் பாணடவர்கள். அங்கு வீற்றிருப்போரைக் குறிப்பிடுகையில் ‘கேட்டினுக் கிரையாவான் -மதி கெடுந் துரியோதனன் கிளையினரும்’ சூழ்ந்திருப்பதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.2.2
அஸ்தினாபுரம் விஜயம் செய்த பாண்டவர்களை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற காட்சியை மகாகவி வர்ணிக்கும்போதே, பாண்டவர்பால் மக்களுக்கு இருந்த அன்பு புலனாகும். மன்னரையும் உறவினர்களையும் குருவையும் பிதாமகரையும் வணங்கிய பின் ஓய்வுக்குச் செல்கின்ரனர் பாண்டவர்கள், வரபோகும் துயரை அறியாமல்...
பாஞ்சாலி சபதம் – 1.2.1
கலைகளின் கடவுளான தமிழ் வாணி அருளும் தொழில்களை இச் சிறு பாடலில் பட்டியலிட்டு வணங்கி, பாஞ்சாலி சபதத்தின் இரண்டாவது சருக்கத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.1.27
அஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஒரு சோலையின்கண் வில்விஜயன் பாஞ்சாலியுடன் தனித்திருக்கிறான். அப்போது வானில் தோன்றிய வண்ண ஜாலங்களை, இயற்கையின் வனப்புகளை வியந்து பேசுகிறான். வண்ணத் தீறல்களாய் வானம் காட்டும் அழகிய காட்சிகளை விவரிக்கும் விஜயன், பச்சை வட்டமாய் மின்னும் கதிரவனைக் காட்டுகிறான். அது ஒரு அழகிய அறிவியல் சொல்லாட்சி. இறுதியில் காயத்ரி மந்திரத்தின் தமிழ் வடிவை தனது கவிதையில் புகுத்துகிறார் மகாகவி பாரதி. 'செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக' என்று ஞாயிற்றைப் புகழ்கின்றனர் இருவரும். விதிவழிப்பயணம் தொடர்கிறது...