சிவகளிப் பேரலை – 72

     பொற்குவியல்கள் கொட்டிக் கிடக்கும் புதையலைக் காண விரும்புவோர் மந்திர மை போட்டு அதனை அறிந்துகொண்டு, பலிச் சடங்குகளை நடத்தி அதனை அடைய முயல்வர். பக்தர்களுக்கு சிவபெருமானின் திருவடிகளே நற்புதையலாகும். அந்த நற்புதையலின் இருப்பிடத்தை சிவபெருமான் மீதான தியானம் என்கின்ற மையின் மூலமாக அறிந்துகொள்ள முடியும்

எனது முற்றத்தில் – 13

ஒரே தெருக்காரர்களான 5, 6 குடும்பத்தினர் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சித்திரான்னம் எனப்படும் விதவித கலவை சாதம் கட்டிக்கொண்டு காவிரியை அல்லது தாமிரபரணியை அல்லது பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நதியை நோக்கி நடையைக் கட்டுவார்கள். அல்லது வண்டி கட்டுவார்கள்.  ஆற்றங்கரை மணல் பரப்பில் அன்று ஒரு வேளை சாப்பாடு அத்தனைபேருக்கும் பொது. ஆனால் அவரவர் வீட்டில் சமையல் செய்து எடுத்து வந்து பகிர்வார்கள். எந்த வீட்டில் இருந்து என்ன கலவை சாதம் என்று முன்கூட்டியே  பேசியிருப்பார்கள்.  காலங்காலமாக நதியைப் பெண்ணாகப் போற்றும் நமது தொன்மை நாகரீகம் காரணமாக அன்றைய தினம் ஆற்றை வழிபடுவார்கள்.  அடுத்து  கட்டுச்சோற்றை ஒரு கட்டுக் கட்டுவார்கள். எல்லாவற்றுக்கும் இடையில் ’கம்புக்கும் காவல், தம்பிக்கும் பெண் பார்த்த’ படலங்களும் அரங்கேறும்.

சிவகளிப் பேரலை – 71

எவ்வளவு சிறப்பான பேரரசுகளும் ஒருகாலத்தில் அழிந்துவிடும், மண்ணோடு மறைந்துவிடும். ஆனால், சிவபெருமான் மீதான பக்தி சாம்ராஜ்யம், அவரது பாதார விந்தங்களில் உறைகின்ற முக்தி சாம்ராஜ்யம் அழிவற்றது. இதனை இந்த ஸ்லோகத்தில் அருமையாக விளக்குகிறார் பகவத்பாதர். ....

காற்றிடைச் சாளரம் – 14

காற்றை ரசிக்கும் இளம் பாரதி இவர்....காற்றை இக்கவிதையில் கட்டிப் போட முயற்சிக்கிறார்.

சிவகளிப் பேரலை- 70

எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளாகிய சிவபெருமான் பூஜை செய்வதற்கு எளியவர்.  அவரை இப்படித்தான் வணங்க வேண்டும் என்றில்லை. பக்தி நம் மனத்தில் இருந்து, அது அவரது நினைப்பில் ஊறியிருந்தால் சடங்கு, சம்பிரதாயங்கள் அவசியமில்லை. அதேநேரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் அவரை நமது விருப்பத்திற்கேற்ற  பலவித ஆசார சடங்குகள் மூலமும் வெளியே அவரை ஆராதிக்கலாம். ....

சிவகளிப் பேரலை – 69

ஒரு தாய் எப்படி தனக்குப் பிறந்த குழந்தைகளைப் படித்தவர், படிக்காதவர், அழகுள்ளவர், அழகற்றவர், பலவான், பலவீனன்,   நல்லவர், கெட்டவர் என பேதம் பார்க்காமல் அன்பு செலுத்துகிறாளோ, அதனைப்போல உயிர்களின் தோற்றத்திற்கும், வாழ்வுக்கும், ஒடுக்கத்திற்கும் காரணமான சிவபெருமான் தாயுமானவனாக இருந்து பன்மடங்கு அன்பு பாராட்டி பக்தரை அரவணைக்கிறார். ....

காற்றிடைச் சாளரம் – 13

பிச்சையெடுத்தா பிண்டமிடுவது?- இந்தக் கடைசி வரிக் கேள்வியில் தான் இக்கவிதை தொக்கி நிற்கிறது...

சிவகளிப் பேரலை – 68

முன்பொரு ஸ்லோகத்தில் பக்தியைத் தாயாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தியை பால் சுரக்கும் பசுவாக வர்ணிக்கிறார். பசு பால் தருவதைப் போல பக்தியாகிய பசு, எல்லையில்லாத மகிழ்ச்சி என்ற அமுதத்தை மென்மேலும் சுரந்து, பெருக்கெடுத்து ஓடவிடுகிறது.

சிவகளிப் பேரலை- 67

     மனம் பிறழாமல் இன்ப துன்பத்தை சமநிலையில் எடுத்துக்கொள்வது மிகச் சிறந்த மனநிலை. அது வாய்க்கப் பெற்றவர்கள், இம்மையிலேயே விடுதலை (முக்தி) பெற்றவர்கள். அவ்வாறான உயர்ந்த மனப்பக்குவம் கிடைக்க நம்மைத் தயார்படுத்துவது இறைவன் சிவபெருமான் குறித்த தியானமே

சிவகளிப் பேரலை- 66

சிவபெருமான் நடராஜனாக, ஆடலரசனாகத் திகழ்கிறார். அவரது நடனம்தான் இந்த உலகின் இயக்கம். அவரது திருவிளையாடல்தான் அனைத்தும். இதனையே இந்தச் செய்யுளில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ....

எனது முற்றத்தில் – 12

நாலு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? கதை என்றால் நீதி கட்டாயம் உண்டு. ஆனால் கதை முடிந்த பிறகுதான் நீதி அல்லது கருத்து வரும். இந்தப் பதிவில் மானுடன் ’கதை முடிந்த’ பிறகு என்ன என்பது பற்றித்தான் கருத்து. பொறுங்கள். அவசரப்பட்டு   ஆவி உலகம் பற்றியோ என்று  நினைத்து விடாதீர்கள்! விஷயமே வேறு. முதலில் கதைகளைப் படியுங்கள்.

சிவகளிப் பேரலை – 65

  சிவபெருமானின் பாதங்களில் பக்தன் தன் மனத்தை காலணியாக காணிக்கையாக்க  வேண்டும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் வலியுறுத்திய ஸ்ரீஆதிசங்கரர், அவ்வாறு இறைவன் திருக்கமலப் பாதங்களில் காலணியாக இருப்பதால் பக்தனுக்குக் கிடைக்கும் பரமானந்தப் பலன்களை இந்த ஸ்லோகத்தில் பட்டியலிடுகிறார்.....

சிவகளிப் பேரலை – 64

செருப்பணிந்த காலால் மிதித்து அர்ச்சித்த கண்ணப்ப நாயனாரின் பெருமையை முந்தைய ஸ்லோகத்தில் எடுத்துரைத்த ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் சிவபெருமானின் காலுக்குச் செருப்பாக பக்தனின் மனது திகழ வேண்டும் என்பதை கனிந்த பக்தியுடன் எடுத்தியம்புகிறார்.....

சிவகளிப் பேரலை- 63

   உண்மையான பக்தி இருக்கும் இடத்தில், பக்தனுக்குரிய குறைகளை சிவபெருமான் பார்ப்பதில்லை. இருக்கின்ற குறைகளும் அவனருளால் நீங்கி, நிறைவே தோன்றும். பக்தனுக்குரிய குறைகளைப்  பார்க்காமல், பக்தியைப் பாராட்டி, அவனுக்கு உயர்ந்த பதவியைத் தந்தருள்பவர் சிவபெருமான். இதற்குப் பல புராணங்களும், சரித்திரங்களுமே சான்று. அவற்றில் கண்ணப்ப நாயனாரின் சரிதத்தைக் கோடிட்டுக் காட்டி, பக்தனை மதிக்கும் பரமசிவனின் பெருமையை இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.....

காற்றிடைச் சாளரம் – 12

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம் கடவுளும் நானும் துயிலெழுந்தார்;உயிரெடுத்தேன். நீராடினார் ;மழையாடினேன். பசியடைந்தார்;பசியாறினேன். காமமெய்தினார்;கலவிபுரிந்தேன். சினந்தார்;சமரிட்டேன். விடைகளாயிருந்தார்;வினாக்களாயிருந்தேன். மௌனமானார்;தியானமானேன். அன்பிலலர்ந்தார்;இன்புறவடைந்தேன். நன்றி பெருக்கினார்;நாயுடன் இருந்தேன். லயித்திருந்தார்;கவிதைகளாக்கினேன். திருவுலாவினார்;தடம் தேடினேன். என்னையறிந்தார்;தன்னைக் கரைத்தேன். இனி என்ன? இடையிடையே நான் பயந்தும் துவண்டும் வாழ்ந்தபோதெல்லாம் அவரின் நிலையறியாமலேயே உடல் விடுவேன் – துயிலடைவார். $$$