ரங்கூன் ஸர்வகலா ஸங்க பஹிஷ்காரம்

பர்மாவில் பல்கலைக்கழகங்களை அதிகப்படுத்த வேண்டும்; அவை அனைவரும் பயிலக் கூடியதாக இருக்க வேண்டும். அதை விடுத்து, மாணவர்கள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி மீது குற்றம் சாட்டுவது பயனற்றது என்கிறார் மகாகவி பாரதி. கூடவே பர்மாவையும் பம்பாய் மாகாணத்தையும் கல்விக்கூடங்கள் தொடர்பாக ஒப்பீடு செய்கிறார். “ஜெர்மனியிலும் ருஷியாவிலுந்தான் காலச் சக்கரம் சுழலுகிறதென்றும் பர்மாவில் சுழலவில்லையென்றும்” ஸர்க்கார் கருத வேண்டாம் என்று  எச்சரிக்கவும் செய்கிறார்…

ஜாதிப் பாகுபாடுகளை விமர்சித்தவர் விவேகானந்தர்

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ‘பாரதிய விசார கேந்திரம்’ நிறுவனர் பி.பரமேஸ்வரன் தொகுத்த ‘விவேகானந்தரும் கேரளமும்’ என்கிற நூலின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) பேசியதன் சுருக்கம் இது…

இந்தியக் கலாச்சாரத்தின் கட்டுமானம்- 1

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவி சுவாமி சுத்திதானந்தர். கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தில் இருக்கிறார். அம்மடத்தில் புதிதாகச் சேரும் பிரம்மச்சாரிகளுக்கு (இளம் துறவிகளுக்கு) பயிற்சி அளிப்பவராக  இருக்கிறார். அவரது இந்தக் கட்டுரைத் தொடர் (BUILDING BLOCKS OF INDIAN CULTURE) ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மாத இதழான 'பிரபுத்த பாரதா'வில் தொடராக வெளிவந்தது. அதன் தமிழாக்கம் இது.

சுவாமிஜியின் வாழ்விலே…

பத்திரிகையாளர் திரு. செங்கோட்டை ஸ்ரீராம், ‘தினசரி’ என்ற இணையதளத்தின் ஆசிரியர். அவரது தொகுப்பு இது...

உலக நிலை

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து எகிப்துக்கு விடுதலை அளிப்பதாக அறிவித்த பிரிட்டீஷ் அரசு பின்வாங்கியதையும், அதற்கு பலிகடாவாக குடியேற்ற மந்திரி லார்டு மில்நர் பதவி விலகி இருப்பதையும் இச்செய்தியில் விளக்குகிறார் மகாகவி பாரதி. இந்தச் செய்தியை அடக்கி வாசிக்க முயலும் ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்தையும் விளாசுகிறார்…

விவேகானந்தரைப் போற்றும் விஞ்ஞானி

அணுவியல் விஞ்ஞானியான திரு. சத்யேந்திரநாத் போஸ் (1874- 1974), மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கண்ணோட்டம் தொடர்பாக, எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள தொகுப்புக் கட்டுரை இது…

ஒரு கோடி ரூபாய்

நாட்டிற்கு சுதந்திரம் வேண்டுமென்றால் மக்கள் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டும் என்று மகாத்மா காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று இந்திய மக்கள் நிதியை காங்கிரஸ் கட்சிக்கு அள்ளி வழங்கினர். ஆனால், அந்தத் தொகையை காங்கிரஸ் என்ன செய்கிறது? என்று இச்செய்தியில் கேட்கிறார் மகாகவி பாரதி. “ஒப்பந்தத்தில் ஒரு பாதி நிறைவேறிப் போய்விட்டது. அதாவது ஜனங்கள் பக்கத்திலே விதிக்கப்பட்ட கடமை நிறைவேறிவிட்டது. இனித் தலைவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டியதைத் தவிர வேறொன்றும் இல்லை” என்கிறார்...

விவேகானந்தர் காட்டும் பெண் விடுதலை

தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவரான பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜின் சுவாமி விவேகானந்தர் குறித்த நான்காவது கட்டுரை இது…

மஹாமகம்

மஹாமகம் தீர்த்தாடனம் குறித்து மகாகவி பாரதி எழுதிய அர்த்தப்பூர்வமான கட்டுரை இது. 1921 பிப்ரவரி 22-இல் நடைபெற்ற கும்பகோணம் மகாமகப் பெருவிழாவை ஒட்டி இக்கட்டுரையை மகாகவி சுதேசமித்திரனில் எழுதி இருக்கிறார். மஹாமகக் குளியலை கேலி பேசும் பிற மதத்தினருக்கு தகுந்த பதிலையும் இக்கட்டுரையில் தருகிறார் பாரதி...

சமயம் என்ன சொல்கிறது?

அமரர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபிராமானந்தர், ராமகிருஷ்ண மடத்தின் துறவி; ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அகில இந்திய உதவி பொதுச்செயலாளராக இருந்தவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது…

அடங்கி நட

வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகளை (பஞ்ச வியாசங்கள்), மகாகவி பாரதி தமிழில் வழங்கி இருக்கிறார். அவற்றுள் ஒன்று இது. வங்க பாஷையில் தாகூரால் எழுதப்பெற்று, அவரது சகோதரர் சுரேந்திரநாத் தாகூரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘மாடர்ன் ரிவியூ’ பத்திரிகையில் வெளியான கட்டுரை (Modern Review – 1917 September - Thau Shalt Obey), பின்னர் மகாகவி பாரதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தாகூரின் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், சுய பகடிகள் நிறைந்த, கவித்துவம் மிகுந்த நடையை, இயன்ற வரை அக்காலத் தமிழில் வழங்கி இருக்கிறார் பாரதி.

பெரியாரைப் போற்றுதும்!

பாரதியாருக்கு தேசிய உணர்வை ஊட்டி, அவரது பணிக்கு உரமும் சேர்த்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் எனில் சற்றும் மிகையல்ல. ஐயரவர்களின் சிந்தனை  சமூகத்தின் அவலங்கள். தீண்டாமைக் கொடுமைகள் குறித்து எப்படி இருந்தன என்பதை 1920-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் ஆண்டு மலரில் சுவாமி விவேகானந்தர் சொல்லிய சொற்களை வார்த்தை பிசகாது தனது பத்திரிகையில் பதிவு செய்தது மூலம் நன்கறியலாம்.

இந்தியாவை எழுச்சி பெறச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்

பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்தின் துறவி. மதுரையில் உள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்தின்  தலைவர்; ‘ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் முன்னாள் ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இரண்டாவது கட்டுரை இது...

புதுமைகள் – 2

உலக நடப்புகளை ரசமான நடையில் வாசகர்களுக்கு தெரிவிக்க ‘புதுமைகள்’ என்ர தலைப்பிலெ சில துணுக்குப் பத்திகளை மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்.அவற்றில் மற்றொன்று இது...

காலம் கடந்தும் வாழும் துறவி

திரு. எஸ்.ஆர்.சேகர், கோவையில் வசிக்கும் தொழிலதிபர்; அரசியல், இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர்; சட்டம் பயின்றவர்; பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொருளாளர்;  எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்து 2013-இல் இவர் எழுதிய கட்டுரை இங்கே…