பிராமண வெறுப்பை உமிழும் திருந்தாத திராவிடம்!

தினமலர் (ஈரோடு, சேலம்) நாளிதழில் வெளியான தவறான, கண்டிக்கத்தக்க செய்தி ஒன்றிற்காக, தமிழகத்தின் பூர்வகுடிகளான பிராமண மக்களை நாக்கூசாமல் வசை பாடுகிறது ஒரு கும்பல். பிரிட்டீஷாரால் திணிக்கப்பட்ட ஆரிய- திராவிடக் கோட்பாட்டை இன்னமும் பற்றிக்கொண்டு அரசியல் நடத்துவோரின் எளிய இலக்குகளாக பிராமணர்கள் தாக்கப்படுவதை நம்மால் கண்டும் காணாமல் இருக்க இயலாது.

இது 1962 அல்ல, 2022!

இயக்குநர் மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜசோழனை இந்து அடையாளங்களுடன் காட்டி விட்டதாக, தமிழகத்தில் சிலர் வயிறெரிகிறார்கள். அவர்களில் சிலர் ஒருபடி மேலாகச் சென்று இந்து என்ற மதமே இருந்ததில்லை என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். அவர்கள் வாங்கிய காசுக்குக் கூவுகிறார்கள்; தொலையட்டும். எனினும், விழிப்புணர்வுள்ள சமய அறிஞர்களும், ஹிந்து செயல்வீரர்களும் சமூக ஊடகங்களில் தங்கள் வாதங்களால் இந்த அறிவிலிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து, பந்தாடி வருகிறார்கள்; இது 1962 அல்ல, 2022 என்பதை அந்த மண்டூகங்களின் மர மண்டையில் ஆணி அடித்தது போலப் புரிய வைக்கிறார்கள். அவற்றில் இரு பதிவுகள் இங்கே…