வானிலிருந்து நாட்டை அளப்போம்!

‘வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்’ என்று பாடினார் மகாகவி பாரதி. அதனை நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டி இருக்கின்றனர். பூமியில் இருந்து 36,000 கி.மீ உயரத்தில் நின்றபடி, நம் நாட்டையே அளந்து கொண்டிருக்கிறது இஸ்ரோவின் ‘இஓஎஸ்-05’ செயற்கைக்கோள். இதற்கு 'வானத்தின் கண்' என இஸ்ரோ செல்லப்பெயர் சூட்டியுள்ளது. எங்கிருந்தோ நம்மைக் கண்காணிக்கும் இந்தக் கண்கள் சாமானியமானவை அல்ல!