பொருள் புதிது தளத்தின் தோழமை அமைப்பான ‘விஜயபாரதம் பிரசுரம்’ நிறுவனம், இந்த ஆண்டுமுதல் பாரதி விருதுகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. நமது தளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்கள் திரு. நா.அனந்தபத்மநாபன் (பத்மன்), திரு. செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோர் முறையே இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
Tag: ஆசிரியர் குழு
கழிசடைக்கு விருதா? கலைஞர்கள் கண்டனம்
கர்நாடக சங்கீத கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‛சங்கீத கலாநிதி' விருது வழங்குவதற்கு இசைக் கலைஞர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என உறுதியுடன் அறிவித்துள்ளனர். அவருக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இசைக்கலைஞர்கள் பலரும் துணிவுடன் முன்வந்து, ‘இந்த ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’ என்று அறிவித்துள்ளனர். வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, ஹரிகதா சொற்பொழிவாளர்கள் துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி, பாடகர்களான திருச்சூர் சகோதரர்கள் (கிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன்), சித்திரவீணைக் கலைஞர் ரவிகிரண், பாலக்காடு மணி ஐயர் குடும்பம், பெங்களூர் மிருதங்க இசைக் கலைஞர் அர்ஜுன் குமார் ஆகியோர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இப்பட்டியலில் மேலும் பலர் இணைந்து வருகின்றனர்.
சி.ஏ.ஏ.: மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை
சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது மற்றும் அதன்மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் தஞ்சமடைந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பே இல்லை.
நடைமுறைக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்!
குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 நாடு முழுவதும் 2024 மார்ச் 11ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலமாக, மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு அகதிகளாக இந்தியா வந்தபோதும், பல்லாண்டுகளாக இந்தியக் குடியுரிமை பெற முடியாமல் ஏங்கித் தவித்த லட்சக் கணக்கான மக்கள் பயன் பெற வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சநாதன தர்மம் வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு- மேலும் இரு செய்திகள்
சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக உளறிய திமுகவின் இளவரசர் உதயநிதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இது தொடர்பான மேலும் இரு செய்திகள் இங்கே…
சநாதன விவகாரம்: உதயநிதிக்கு நீதிமன்றங்கள் குட்டு
சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக உளறிய திமுகவின் இளவரசர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் குட்டு வைத்துள்ளன. இது தொடர்பான இரு செய்திகள் இங்கே…
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: நூல் அறிமுகம்
தமிழர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அற்புதமான தமிழ் இலக்கிய ஞானக் கருவூலங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்து, இனிய மாலை போலத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சேக்கிழான். இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், இடையறாத வன்மையையும், பரந்து விரிந்த தன்மையையும், செங்கோலின் நன்மையையும் வெளிப்படுத்துகிறது.
என்றும் வாழும் சநாதன தர்மம்: நூல் அறிமுகம்
சநாதனம் சர்ச்சையை ஒட்டி விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள அற்புதமான நூல் இது. இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறப்பு மிக்க 37 பதிவுகள், சநாதனத்தின் பன்முகத்தையும் அதன் ஒருங்கிணைந்த தன்மையையும் காட்டுகின்றன. தமிழ் கூறும் சநாதனம், சநாதனம் குறித்த சான்றோரின் அமுதமொழிகள் ஆகியவை ‘என்றும் வாழும் சநாதன தர்மம்’ நூலின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. நமது இணையதளத்தில் வெளியான கட்டுரைகள் அழகிய நூல் வடிவம் பெறுவது மிகவும் பெருமை அளிக்கிறது....
வாழும் சனாதனம்!- 15
தற்போதைய அவசர உலகில், எந்த ஒரு விஷயமானாலும் உடனடியாக அறிவதற்கான தளமாக விக்கிபீடியா உள்ளது. இந்த விக்கிபீடியாவில் ‘சனாதனம்’ குறித்து என்ன கூறப்பட்டிருகிறது? உலக அளவிலான ஞானக் களஞ்சியமான விக்கிபீடியா இந்து மதமே சனாதனம் என்று கூறுகிறது. தமிழகத்தில் சனாதனம் குறித்து சில தற்குறிகள் செய்யும் இழிந்த பிரசாரத்திற்கு விக்கிபீடியாவே பதில் கூறுகிறது. இனியேனும் அரைகுறை மேதாவிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
வாழும் சனாதனம்!- 14
சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கும்பல் தமிழகத்தில் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், அவர்களே நம்புகிற ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’ கலைக் களஞ்சியத்தில் ‘சனாதனம்’ குறித்து என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை இங்கே எடுத்துக் காட்டுகிறோம். இனியேனும் அரைகுறை மேதாவிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்....
திராவிட மாடலுக்குத் தெரியுமா சனாதன வாசனை!
இதோ.... வட தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள, சனாதன விழிப்புணர்வு பிரசார வெளியீடு... இது பிடி.எஃப். கோப்பாக உள்ளது. இதனை அப்படியே படிக்கலாம்.
பட்டியல் சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!
ஹிந்து பட்டியலின சகோதரர்களின் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளில் பங்கு கேட்டு, மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் அரசியல்ரீதியாக நிர்பந்தம் செய்து வருகிறார்கள். அந்தக் கோரிக்கை நியாயமற்றது என்பதை விளக்கி, ஹிந்து பட்டியலின சகோதரர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பறிபோகக் கூடாது என்று வலியுறுத்துகிறது, இக்கட்டுரை. ஆந்திர பிரதேசத்தில் இயங்கும் ‘எஸ்.சி., எஸ்.டி. ஹக்குல சம்க்ஷேம வேதிகா’ வெளியிட்ட ஆங்கில நூலின் சுருக்கம் இது. சென்னையில் உள்ள நந்தனார் அறக்கட்டளை சிறு நூலாக வெளியிட்டுள்ள இக்கட்டுரையை, நமது தளத்தில் பதிவு செய்கிறோம்…
திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவோம்!
நமது முன்னோரை அவர்களது நினைவிற்குரிய திருநாட்களில் நினைவுகூர்வதும் வணங்கி மகிழ்வதும் மரபு. அந்த அடிப்படையில், வைகாசி விசாகமான இன்று திருவள்ளுவரைப் போற்றி மகிழ்கிறோம். இந்நாளில் வைகாசி அனுஷமே திருவள்ளுவர் நாள் என்று, 1931-இல் கூடி உறுதி செய்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு நன்றி கூறுகிறோம். இன்று தமிழகம் எங்கும் தேசிய, தெய்வீக நம்பிக்கை மிக்கவர்களால் திருவள்ளுவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த வரலாற்றுப் பதிவை இங்கு வெளியிடுகிறோம்…
வேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவானந்தர் – நூல் அறிமுகம்
சுவாமி சித்பவானந்த மகராஜிடம் சன்யாச தீட்சை பெற்ற, திருவண்ணாமலை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தின் தலைவர் யதீஸ்வரி ஸ்ரீ கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார். 55 அத்தியாயங்களில், 1,728 பக்கங்களில், 300க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன் இந்நூல் வெளியாகியுள்ளது. சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாக இந்த நூல் விளக்குகிறது.
தமிழ் வளர்ப்பு – பாரதி விடுத்த கோரிக்கை
மகாகவி பாரதி தாம் எழுதிய கவிதை, கட்டுரை, கதைகளை நூலாக்க வேண்டுமென்ற அதீத தாபம் கொண்டிருந்தார். ஆனால், அடிமை இந்தியாவில் அதற்கான சூழல் அவருக்கு வாய்க்கவில்லை. அவரது நிலையோ அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலை. எனவே, தமிழ் வளர்ப்புப் பண்ணை என்ற பெயரில் தமது நூல்களை வெளியிட முன்பதிவுத் திட்டம் போன்ற ஒரு நிதி முதலீட்டுத் திட்டத்தை நடத்த விழைந்தார். அந்த தமிழ் வளர்ப்புப் பண்ணை சார்பில் வெளியான விளம்பரம் இது. இந்த விளம்பரச் செய்தியை மகாகவி பாரதியே எழுதினாரா என்பது உறுதியாகாத தகவல். அதேசமயம், அக்காலத்தில் பாரதியின் துடிப்பு மிகு எழுத்தார்வத்துக்கு அற்புதமான ஆதார ஆவணம் இது…