மகாகவி பாரதியின் ஆத்ம குரு சகோதரி நிவேதிதை. சுவாமி விவேகானந்தரின் பிரதம சிஷ்யையான நிவேதிதையையே தனது குருவாக வரித்துக் கொண்டவர் மகாகவி பாரதி. அவர் எழுதிய குரு வணக்கப் பாடல் இது....
Category: பாரதி இலக்கியம்
பாரதியின் தனிப்பாடல்- 16
மகாகவி பாரதியின் தனிப் பாடல்களில் 16வது கவிதை, தாயுமானவர் மீதானது.
காக்காய்ப் பார்லிமெண்ட்
நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார். “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்” என்று சொன்னார். “சரி, கற்றுக் கொடும்” என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார். காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.
பாரதியின் தனிப்பாடல்- 15
மகாகை பாரதியின் தனிப்பாடல்களில் 15வது கவிதையான ‘சந்திரமதி’ காதலின் சிறந்த வெளிப்பாடு....
ஸ்ரீ பாரத நாட்டின் புதிய புண்ய ஸ்தலங்கள்
நமது பாரத நாட்டில் ஸ்வதந்திரக் கிளர்ச்சியாரம்பித்துக் கொஞ்சம் நாள்தான் ஆயிற்று. எனினும் அநேக புண்ணிய ஸ்தலங்கள் உண்டாய் விட்டன. இந்தப் புண்ணிய ஸ்தலங்களின் விசேஷம் என்னவென்றால் இவைகள் பாரத நாட்டிலுள்ள எல்லா மதத்தினருக்கும் பொதுவானவைகள். பாரத நாட்டில் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த தேசபக்தர்களின் ஆச்ரமங்கள் தோன்றியிருக்கின்றன.....
பாரதியின் தனிப்பாடல்- 14
இன்பமே இவ்வுலகம் என்பது போகியின் கட்சி. சிவநாட்டமே உலகம் என்பது யோகியின் கட்சி. இருவரும் வாதிடுகிறார்கள். சதுரங்கக் களத்தின் இருபுறமும் நின்று போகியாகவும் யோகியாகவும் மகாகவி பாரதியே கவித்துவமாக விளையாடுகிறார். இடையே நுழைகிறார் நடுவரான ஞானி. அதுவும் மகாகவி பாரதியே. இவ்வுலக இன்பங்கள் மாயையல்ல; அவையும் சிவனின் லீலைகள் என்கிறார். பிறகு மூவரும் இணைந்து இதனைப் பிரகடனம் செய்கிறார்கள். இந்த உலகம் மாயை என்பதை எக்காலத்திலும் பாரதி ஏற்கவில்லை. இந்தத் தத்துவத்தால்தான் நமது நாடு அடிமைப்பட்டது என்ற எண்ணம் அவருக்குண்டு. எனவேதான், வாய்ப்பு நேர்கையில் எல்லாம் மாயைச் சிந்தனையாளரை எள்ளியும், உலக இன்பங்கள் அனைத்தையும் வேண்டியும் கவிதை புனைகிறார் மகாகவி.
பாரதியின் தனிப்பாடல்- 13
மகாகவி பாரதி கவிதையின் ஊற்றாய்ப் பிறந்தவர். சென்ற கவிதையில் மனைவியாக கவிதையைக் கொண்டாடிய பாரதி, இக்கவிதையில் ‘மணிப்பெயர்க் காதலி’ என்று கொண்டாடுகிறார். ஆனால், இந்த மாய உலகில் வாழ்வதற்கான போராட்டத்தில் கவிதையாம் காதலியை மறந்தாக வேண்டி வருகிறது. வாழ்க்கைப்படகு தத்தளிக்கும் போது, சாபத்தால் பன்றியாக மாறிய முனிவரின் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று தன்னிரக்கத்துடன் முனிவரின் கதையை இக்கவிதையில் கூறுகிறார். அத்தகைய “அருந்தவப்பன்றி”யாக வாழ்ந்த சில நாட்களை இக்கவிதையின் வேதனையுடன் ஒப்பிடுகிறார் மகாகவி....
பாரதியின் தனிப்பாடல்- 12
“கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” என்பது மகாகவி பாரதியின் வாக்கு. எனவேதான் கவிதையையே தனது மனைவிக்கு நிகராக அவரால் வைக்க முடிகிறது. இக்கவிதை, கவிதையின் மகாசக்தியை வியக்கிறது.
பாரதியின் தனிப்பாடல் – 11
”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று தொல்காப்பியம் கூறும். அந்தச் சொல் மந்திரமாக வேண்டும் என்பார் மகாகவி பாரதி. ”நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” -என்பதும் தொல்காப்பிய நூற்பா. ”நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்” - என்பார் திருவள்ளுவர். அதனையொட்டி, சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்” என்ற அறிமுகக் குறிப்புடன் இக்கவிதையை எழுதி இருக்கிறார் பாரதி. உள்ளத்தில் தூய்மையும் உறுதியும் பெருகும்போது வெளிப்படும் சொற்களும் மறைமொழியாகின்றன என்பதே இக்கவிதையின் உட்கிடக்கை....
பாரதியின் தனிப்பாடல்- 10
உலகெங்கும் ஒளீயெனத் திகழ்ந்தாலும், சிறு நெஞ்சத்தில் இருள் கவிகிறதே - என்று தன்னிரக்கம் எழ குமைந்து பாடுகிறார் மகாகவி பாரதி....
பாரதியின் தனிப்பாடல்- 9
மகாகவி பாரதியின் தனிப் பாடகளில் 9வது கவிதை, அழகுத்தெய்வம் மீதானது....
பதிவிரதை
ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப்போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும். அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.
பாரதியின் தனிப்பாடல்- 8
ஹாலி என்ற வால் நட்சத்திரம் 1910இல் விண்ணில் தோன்றி மறைந்தபோது மகாகவி பாரதி எழுதிய கவிதை இது... 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் தோன்றும் வால் நட்சத்திரத்தால் உலக அரசியலில் முக்கியமான தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. அதை இக்கவிதையில் சுட்டிக் காட்டி இருக்கிறார் பாரதி. எனினும் இந்த வால் மீனின் வருகையால் எண்ணிலாப் புதுமைகள் விளையும் என்ற நம்பிக்கையையும் விளைக்கிறார் கவிஞர். சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும் கூடும் என்ற கவிஞரின் நன்னம்பிக்கை அவரது தன்னம்பிக்கையையே பகர்கிறது...
பாரதியின் தனிப்பாடல் – 7
நான்கே வரிகள்... இதில் உள்ள பொருளோ மாபெரும் நூலும் உரைக்கவொன்னாதது. மகாகவி பாரதியின் கவிதைகளுள் தனித்து இலங்கும் மந்திரம் போன்ற கவிதை ‘அக்கினிக் குஞ்சு’.
பாரதியின் தனிப்பாடல்- 6
எளியவன் ஒருவனது சின்னஞ்சிறு தென்னந்தோப்பை வீழத்தாமல் கடந்த புயலை வாழ்த்தி, சக்தியின் புகழைப் பாடுகிறார் பாரதி, இக்கவிதையில்....