ம.பொ.சி. - இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்ப, தமிழ்நாட்டு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி, இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை.
Category: சரித்திரத் தேர்ச்சி கொள்!
தியாகராஜ சுவாமிகள் வரலாறு
திருவையாறு தியாராஜ சுவாமிகளின் இனிய சரிதத்தை ஆக்கிச் சென்றிருக்கிறார், தஞ்சை பாரதி இலக்கியப் பயிலரங்கின் நிறுவன இயக்குநரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவருமான அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா. அக்கட்டுரை இது....
வாழ்ந்து வழிகாட்டிய மகாத்மா புலே
1954-இல் டாக்டர் அம்பேத்கர், மகாத்மா புலேவின் வாழ்க்கை வரலாற்றை தான் எழுத விரும்புவதாக, தனஞ்செய் கீரிடம் தெரிவித்துள்ளார். தனஞ்செய் கீர் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். டாக்டர் அம்பேத்கர் அவ்வாறு கூறக் காரணம், மகாராஷ்டிர மாநிலத்தில் அரிஜனங்களுக்காகவும் பெண்களுக்காகவும் முதன்முதலில் பள்ளிக்கூடம் துவங்கி, சமூகப் புரட்சிக்கு, மாற்றத்துக்கு வித்திட்டவர் அவர்.
வீரமுரசு சுப்ரமணிய சிவா
இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகள் வரிசையில் தமிழகத்தில் முதன்மை வகித்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார் ஆகியோர் காலத்தில் வ.உ.சி. அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடி, சிறை சென்று, தொழுநோயுடன் வெளிவந்து, அந்த நிலையிலும் கடைசி மூச்சு வரை தேசத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மகான் சுப்ரமணிய சிவா.
கோபாலகிருஷ்ண பாரதி – ஓர் அறிமுகம்
இளமையிலேயே தமிழில் மேதைமை மிகுந்தவர்களுக்கு ‘பாரதி’ பட்டம் அளிக்கப்படுவது தமிழகத்தில் நிலவி இருக்கிறது. அந்த வகையில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு முன்னதாகவே ‘பாரதி’ பட்டம் பெற்றவர் கோபாலகிருஷ்ண பாரதி. அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இது.
சுவாமி சகஜானந்தரும் பெரியவர் வ.உ.சியும்
சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் நூலகராகப் பணியாற்றிவரும் திரு. ரெங்கய்யா முருகன், வ.உ.சி. ஆய்வாளரும் கூட. வ.உ.சி. மீது அளப்பரிய மரியாதை கொண்ட இவர், அவரை அழைக்கும்போதெல்லாம் பெரியவர் என்று குறிப்பிடாமல் எழுதுவதில்லை. இவரது முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது…
ஒரு சரித்திரத் தவறு!
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் ‘பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை’ நூலை தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் திரு. பிஆர்.மகாதேவன். அவரது சீரிய சிந்தனை மிளிரும் சிறிய கட்டுரை இது....
அன்பைப் பொழிந்த ஆசிரியர்!
விஜயபாரதம் முன்னாள் ஆசிரியரும், ‘பொருள்புதிது’ இணையதளத்தின் தொடர்ந்த வாசகராக இருந்தவருமான அமரர் திரு. சுந்தர.ஜோதி அவர்கள் காலமாகி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. அவரைக் குறித்து, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி தனது தளத்தில் எழுதி இருக்கும் கட்டுரை இங்கு நினைவஞ்சலியாகப் பதிவாகிறது...
சுந்தர.ஜோதி: சில நினைவுகள்
அண்மையில் சென்னையில் காலமான ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகரும் ‘விஜயபாரதம்’ முன்னாள் ஆசிரியருமான திரு. சுந்தர.ஜோதி அவர்களுக்கு நினைவஞ்சலிக் கட்டுரை இது…
சர்தார் படேல்- சில தகவல்கள்
அனைவராலும் 'சர்தார்' படேல் என்று அன்போடு அழைக்கப்படும் வல்லபபாய் படேல் 1950 டிசம்பர் 15 நாள் மும்பையில் மாரடைப்பால் காலமானார். அவரைப் பற்றிய சில தகவல்கள்...
அக்டோபர் 21: இந்திய வரலாற்றில் ஒரு பொன்னாள்
1943 அக்டோபர் 21 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் சிங்கப்பூரில் முதல் தேசத்திற்கு வெளியிலான சுதந்திர இந்திய அரசு நிறுவப்பட்டது (Govt in Exile). அந்த அரசின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்றார்.
தமிழகத்தின் தியாகத் திலகம்!
தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றிவைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். தியாகம் என்ற சொல்லுக்குப் பொருளானவர் வ.உ.சி.
வானம் வசப்பட்டது! நிலவில் கால் பதித்தது இந்தியா!
நிலவைக் காட்டி சோறூட்டிய அன்னையர்களால் வளர்ந்தவர்கள் நாம். இன்று அதே நிலவில் நமது ‘சந்திரயான் – 3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் இறங்கி நிலைகொண்டிருக்கிறது. அதன் குழந்தையான ‘பிரக்யான்’ ரோவர் நிலவில் இறங்கி ஆராய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இனிவரும் தலைமுறைகளில் குழந்தைகளுக்கு சந்திரனைக் காட்டி சோறூட்டும்போது, ‘சந்திரயான்’ அங்கு இருப்பதும் கூறப்படும். இது ஒரு பொன்னான தருணம். உலகில் இந்தியர்கள் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட தருணம்.
விக்ரம்: நான் வெற்றி பெற்றவன்! நிலவைத் தொட்டு விட்டவன்!
‘விக்ரம்’ என்றால் வெற்றி என்று பொருள். அது மட்டுமல்ல, இந்த ‘விக்ரம்’ என்ற சாதனையின் பின்புலத்தில் மகத்தான ஒரு விஞ்ஞானியின் தீர்க்கதரிசன முயற்சிகள் ஒளிர்கின்றன. அவர்தான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை (இஸ்ரோ) நிறுவிய விக்ரம் அம்பாலால் சாராபாய்....
மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி…
ஒருவர் மராட்டியத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இம்மூவரும் ஒரே குறிக்கோளுக்காக வெவ்வேறு முறைகளில் போராடினர். இவர்களுக்கு என்ன ஒற்றுமை? இந்தியாவின் மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி இவர்களை நடக்கச் செய்த சக்தி எது? ஜூலை 23 என்ற நாள் இம்மூவரின் வாழ்வில் பெற்ற இடம் தான் இவர்களை இன்று நினைத்துப் பார்க்க வைக்கிறது. தேசபக்தியே இவர்களை இணைத்தது; வழிநடத்தியது.