சத்திய சோதனை- 4(36-41)

-மகாத்மா காந்தி நான்காம் பாகம் 36. பிராயச்சித்தமாகப் பட்டினி      பையன்களையும், பெண்களையும் சரியான வழியில் வளர்த்து அவர்களுக்குக் கல்வி போதிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது நாளுக்கு நாள், மேலும் மேலும் எனக்குத் தெளிவாகிக் கொண்டு வந்தது. அவர்களுக்கு உண்மையான உபாத்தியாயராகவும் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டுமாயின், நான் அவர்களுடைய உள்ளங்களைத் தொட வேண்டும். அவர்களுடைய இன்ப துன்பங்களில் நான் பங்கு கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் நான் உதவி செய்ய வேண்டும். இளமையின் காரணமாக அவர்களுக்கு … Continue reading சத்திய சோதனை- 4(36-41)

புதுப் பேய்

வேதபுரம் (புதுவை) தொடர்பான இன்னொரு கதை இது. எலிக்குஞ்சு செட்டியாரின் மகள் காந்திமதிக்கு பிடித்த பேய் இன்னதென்று கண்டறிய முடிகிறதா? படியுங்கள், மகாகவி பாரதியின் நையாண்டி புலப்படும்!

உலகமயச் சூழலில் விவேகானந்தரின் தேவை

அமரர் திரு. பி.பரமேஸ்வரன் (1927 அக். 3 – 2020 பிப். 9), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த தலைவர்; சிந்தனையாளர். திருவனந்தபுரத்தில் இயங்கும் பாரதீய விசார் கேந்திரத்தின் நிறுவனர். கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் தலைவராக செயல்பட்டவர். 2012-இல் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது ஆங்கிலத்தில் அவர் எழுதிய இக்கட்டுரையை திரு. சத்தியப்பிரியன் தமிழில் வழங்கியுள்ளார்....

கொன்றைவேந்தன் – மூலம்

தமிழில் எழுந்த பிற்கால (சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) நீதிநூல்கள், சமுதாயத்தின் தகவமைப்பில் பேரிடம் வகித்துள்ளன. கடந்த நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்ப் பாடத்தில் இவை கற்பிக்கப்பட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அடிப்படைப் பாடமாக இருந்தவை இந்த நூல்களே. எளிய ஒற்றை வரிகளில் வாழ்க்கைக்கு அடிப்படையான நீதிபோதனையைச் சொல்லிச் செல்வது இந்த நூல்களின் குணம். பிற்காலப் பெண்பாற் புலவரான (சங்க கால ஔவை வேறு) ஔவையார் இயற்றிய ‘கொன்றைவேந்தன்’ அவற்றில் குறிப்பிடத் தக்கது. 91 வரிகளால் ஆன சிறு நூல் இது.

தமிழர்கள் ஹிந்துக்கள் அல்லரா?

முதலில் ஒரு விஷயத்தை தெளிவு செய்துகொள்வோம்: திராவிடம் என்பது இனமல்ல. தமிழ் என்பதைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொல்தான் அது. திராவிடம் தனி இனம் என்றால் அதனைக் குறிப்பிடும் சங்க இலக்கியம் எது?

ஸ்வதந்திர கர்ஜனை-1(8)

லக்னோ நகரம் முழுவதும் தேசபக்தர்கள் எல்லாவிடங்களிலும் பரவி நின்று கடுமையானதொரு போருக்கு ஆயத்தமானார்கள். ஆங்காங்கே எதிரிப் படைகள் சுலபமாக முன்னேற விடாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள்ளிருந்து துப்பாக்கியால் சுடுவதற்கு சுவர்களில் துவாரங்கள் போடப்பட்டு அங்கெல்லாம் சிப்பாய்கள் தயாராய் துப்பாக்கியோடு நின்றிருந்தார்கள்....

பாரதி கடிதங்கள்- தொகுப்பு – 4

பெண்களின் இளம்வயது திருமணத்தை கடுமையாகக் கண்டித்த மகாகவி பாரதி, ஸ்ரீமான் ஸ்ரீநிவாச சாஸ்திரியாரின் முன்னுதாரணமான செய்கையைப் பாராட்டி ‘சுதேச மித்திரன்’ இதழின் ஆசிரியருக்கு எழுதிய வாசகர் கடிதம் இது...

அவருடைய அடிச்சுவட்டில்…

ஸ்ரீ. தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் (1903- 1991), திருப்பூரைச் சார்ந்தவர்; விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி;  தமிழக கல்வி அமைச்சராக இருந்தவர்; கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம் அமையக் காரணமானவர்; பெண்கல்விக்காக இவர் துவங்கிய கல்லூரி, இன்று அவிநாசிலிங்கம்  மகளிர் பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது.  சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை கொங்கு மண்டலத்தில் பரப்பியதில் இவரது பங்கு அளப்பரியது. சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே...

உஜ்ஜியினி

நூறாண்டுகளுக்கு முன்னமே, பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த இதழாளர் மகாகவி பாரதி. ”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்...” என்று முரசுப் பாட்டில் முழங்கும் கவிஞர், பெண் விடுதலைக்காக பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி இருக்கிறார். ஆணும் பெண்ணும் நிகர் என்று அன்றே அறிவுறுத்திய மகாகவியின் கதை இது...

குறைப் பிறவி

மனிதன் வெளிப்புற உடல் அழகில் லயிக்கிறான். அதேசமயம், அதே தோற்றம் குரூரமாக இருந்தால் குமைகிறான். இவையெல்லாம், அறிவு முதிர்ந்த மனிதர்களுக்குத் தான்; பச்சிளம் குழந்தைகளுக்கும், விலங்குகளுக்கும் அழகு- குரூரம் என்ற பேதம் இருப்பதில்லை. அதன் காரணம், ஒருவேளை அவற்றின் அறிவு முதிர்ச்சி வழக்கமான மனிதர் போல இல்லாததால் தானோ என்னவோ? இச்சிறுகதையில், கோர சொரூபத்தால் விலக்கி வைக்கப்பட்ட வீட்டு வேலைக்காரி செல்லியின் தியாகம் மூலமாக, ஜெயகாந்தன் எந்த உபதேசமும் செய்யாமலே, மனிதத்தன்மை என்னவென்று புரிய வைக்கிறார்….

புதுச்சேரியில் புயற் காற்று

புதுவையில் 1016-இல் வீசிய புயலின் பாதிப்புகளை நேர்முக வர்ணனையுடன் செய்தியாக்கி இருக்கிறார் மகாகவி பாரதி. ”ஏழை ஜனங்களின் கஷ்டங்கள் பொறுக்கக்கூடிய நிலைமையிலேயில்லை. தெய்வந்தான் ரக்ஷிக்க வேண்டும்.” என்று செய்தியின் இடையே கூறும் பாரதியின் மானுடநேயம் கவனிக்கத் தக்கது...

ஸ்வதந்திர கர்ஜனை- 1(7)

தன்னிடம் பெரும் படையெதுவும் இல்லை, ஆயுதங்களும் சொல்லும்படியாக எதுவும் இல்லை, இருந்தும் அவரிடமிருந்த சாமர்த்தியமும் வீரமும் கைகொடுக்க, பிரிட்டிஷாருக்கு தாந்தியா தோபே சிம்ம சொப்பனமாக இருந்தார். தாந்தியா என்ன மந்திரம் செய்தாரோ தெரியாது, எதிரிகளான சுதேச மன்னர்கள்கூட இவரைக் கண்டதும் கேட்ட உதவிகளைச் செய்து கொடுத்தார்கள்.

ஆச்சார்ய புருஷர் விவேகானந்தர்

விடுதலை வீரர், 'வீரமுரசு’ என்றழைக்கப்பட்ட தேசபக்தர் சுப்பிரமணிய சிவா,  ‘ஸ்வதந்திராநந்தன்’ என்ற புனைப்பெயரில் சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிகளை மொழிபெயர்த்து வெளியிட்ட நூலின் முன்னுரை இது. இச்சிறிய கட்டுரையில், தான் அறிந்த சுவாமி விவேகானந்தரை எளிய முறையில் அறிமுகம் செய்கிறார் சுப்பிரமணிய சிவா.

கலியுக கடோற்கசன்

சமகால நிகழ்வுகளை நமது முன்னை வரலாற்றுப் பெருமையுடனும், கனவுகள் மிக்க எதிர்காலத்துடனும் ஒப்பிட்டு, சமுதாயத்துக்கு வழிகாட்டுபவரே உண்மையான எழுத்தாளர். அந்த வகையில், மகாகவி பாரதி தமிழ் எழுத்தாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்கிறார். இந்தக் கதையில் அதீத பலசாலி ஒருவனது திறன்களை பகடியாக வர்ணிக்கும் பாரதி, அவன் வைத்திருந்த சில காகிதங்களில் இருந்த குறிப்புகளை மிகவும் கேலியாக குறிப்பிடுகிறார். ‘ஹோம்ரூல்’ இயக்கத்தையும் இடையே போகிற போக்கில் நையாண்டி செய்கிறார். இறுதியாக “ஹிந்துக்களுடைய மூல பலமாகிய மந்திர சாஸ்திரத்தை இடைக்காலத்து மூடர் இவ்வளவு சீர்கெடுத்து வைத்திருப்பதையும், அதைத் தற்காலத்து மூடர்களிலே பலர் நம்புவதையும் நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று” என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து, தேசநலன் கருதும் உன்னத எழுத்தாலனை அவரிடம் தரிசிக்கிறோம்.

வில்லிசை வித்தகர் விண்ணில் கலந்தார்!

இனி அப்படி ஒருவரை நாம் காண்பதற்கில்லை. கத்தியை மிஞ்சும் புத்திக் கூர்மையும், கடவுளே நாணும் குழந்தைத் தூய்மையும் கலந்திருக்கும் ஒருவரை எங்கே காணப் போகிறோம்? அந்தத் தாமிரபரணி தந்த தங்கத் தமிழ்ச் சொற்கள் அலைபுரளும் லாகவத்தை எவரிடம் பார்க்கப் போகிறோம்? என்ன கவிதை! என்ன நகைச்சுவை! என்ன சரளம்! எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்தப் பேரன்பு!