வெறும் வேடிக்கை

ஆரிய- திராவிட இன வேற்றுமை என்ற பொய்க்கதையை கிறிஸ்தவப் பாதிரிகள் பரப்ப ஆரம்பித்த தொடக்க காலத்திலேயே அதைக் கண்டித்திருக்கிறார் மகாகவி பாரதி. இந்தியாவில் உள்ள ஜாதி பேதத்துக்கு பிராமணர்களைக் காரணமாக பிரசாரம் செய்து, பிராமணர்களுக்கும் பிற ஜாதியினருக்கும் பகையை ஏற்படுத்தும் கிறிஸ்தவ சதியை 1920-இல் எழுதிய தமது கட்டுரையில் அம்பலப்படுத்தி இருக்கிறார் இதழாளர் பாரதி... இன்றும் இதுதானே நிலைமை?

விவேகானந்தரை மீண்டும் நினைவில் இருத்துவோம்!

திரு. கோபாலகிருஷ்ண காந்தி, விடுதலைவீரர்கள் மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரன்; இந்திய குடிமைப் பணியில் பல்லாண்டு பணியாற்றி, ஜனாதிபதியின் செயலாளராகவும் பணியாற்றியவர்; தென் ஆப்பிரிக்கா, இலங்கை நாடுகளில் இந்தியத் தூதராக இருந்தவர்; மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தவர். சிந்தனையாளர், எழுத்தாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…

விவேகானந்தரும் காந்தியும்

திரு. ஜக்மோகன் (1927 செப். 25 – 2021 மே 3) முன்னாள் அரசு அதிகாரி; முன்னாள் மத்திய அமைச்சர்; ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர்; பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவராக இருந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இது…

தமிழ்நாடே சரியான களம் (தமிழ் நாட்டின் விழிப்பு)

“உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி. ‘இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக மடிகிறார்களே’ யென்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு” - ஆஹா, என்னே, மகாகவி பாரதியின் உலகநேய சிந்தனை!

தொழில்

தொழில் சிறப்பு குறித்த சான்றோரின் மேற்கோள்களை முதல் பகுதியில் குறிப்பிட்டு, அதற்கு இரண்டாம் பகுதியில் விளக்கம் அளிக்கிறார் காளிதாஸன் (எ) மகாகவி பாரதி. “முயற்சி யிருந்தால் பயமில்லை.  முயற்சி யுண்டானால் வெற்றியுண்டு. முயற்சி உடையவனுக்கு விடுதலை கைகூடும்” என்று அறிவுறுத்துகிறார்...

மெய்ப்பொருள் காண்பதறிவு!

திரு. சு.சத்யநாராயணன், திருப்பூரில் வசிக்கிறார். பின்னலாடை வர்த்தகம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளார்.  திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். திருப்பூர் ஏங்கர் அரிமா சங்கத்தின் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது.....

குடிப்பாங்கு

பிரிட்டனில் வெளியான ‘நியூ ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகையின் செய்தியை சுதேசமித்திரன் வாசகர்களுக்கு தமிழில் பெயர்த்து வழங்கும் மகாகவி பாரதியின் மொழித்திறனும், இதழியல் கடமை உணர்வும், அவற்றை விஞ்சும் உலக அரசியல் நுண்ணுணர்வும் நம்மை வியக்கச் செய்கின்றன. இச்செய்தியை தமிழர்களுக்கு அளிக்க, நம்மவர்கள் அரசியல் அறிவு பெறுவது அவசியம் (அப்போதுதானே சுதந்திரப் போரில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்?) என்ற எண்ணமே காரணம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டியாக வேண்டும்.

பகலவனே வாழி!

திருமதி கீதா குமரவேலன், குடியாத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘வள்ளலார் காட்டிய பெருநெறி’ என்ற நூலை எழுதி இருக்கிறார். இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன; பட்டிமண்டபப் பேச்சாளராக ஆன்மிகப் பயிர் வளர்க்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இங்கே....

என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே

‘சக்கரவர்த்தினி’ 1906 பிப்ரவரி மாத இதழில் வெளிவந்த  ‘துளஸிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.

புதிய பாரதம் தலையெடுக்க….

திரு. ச.சிவசுப்பிரமணியன் கணக்குத் தணிக்கையாளர். திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் தலைவர். பல்வேறு ஆன்மிக அமைப்புகளிலும், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பிலும் செயல்படுபவர். 2சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது எழுதப்பட்ட அன்னாரது கட்டுரை இது…

தமிழ்த்தாயைக் காத்த தனயன்

பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?

ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்

பிரான்ஸ் நாட்டின் லட்சிய முழக்கம் - ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம். பிரெஞ்ச் இந்தியாவில் புகலிடம் தேடிச் சென்று, புதுவையிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகையை (10.19.1908 – 17.05.1910) நடத்திய மகாகவி பாரதியை, பிரான்ஸ் தேசத்தின் பிரதானக் குறிக்கோளான ‘ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவை கவர்ந்ததில் வியப்பில்லை. இதுகுறித்து ‘இந்தியா’ பத்திரிகையின் மூன்று இதழ்களில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகள் இவை....

எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக!

‘பாரத ரத்னா’ மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், பாரதத்தின் 11-வது ஜனாதிபதியாக இருந்தவர்; இளைஞர்களின் எழுச்சி நாயகர். சுவாமி விவேகானந்தர் மீது அளப்பரிய பக்தி கொண்டவர் கலாம். அன்னாரது உரை இங்கே கட்டுரை வடிவில் வெளியாகி இருக்கிறது….

விளக்கு

‘சக்திதாஸன்’ என்ற பெயரில், சுதேசமித்திரன் இதழில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரை இது. கல்வி வளர்ச்சியே சமுதாயத்தின் வழிகாட்டும் விளக்கு என்று இக்கட்டுரையில் அறிவுறுத்துகிறார் பாரதி.

விவேகானந்தர் – குழந்தைப்பாடல்

‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. சேக்கிழான் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த மழலைப்பாடல்...