‘வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்’ என்று பாடினார் மகாகவி பாரதி. அதனை நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டி இருக்கின்றனர். பூமியில் இருந்து 36,000 கி.மீ உயரத்தில் நின்றபடி, நம் நாட்டையே அளந்து கொண்டிருக்கிறது இஸ்ரோவின் ‘இஓஎஸ்-05’ செயற்கைக்கோள். இதற்கு 'வானத்தின் கண்' என இஸ்ரோ செல்லப்பெயர் சூட்டியுள்ளது. எங்கிருந்தோ நம்மைக் கண்காணிக்கும் இந்தக் கண்கள் சாமானியமானவை அல்ல!