சாவர்க்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சாசனம்

இந்திய அரசியல் சாசனம் வடிவமைக்கப்படுவதற்கு 11 ஆண்டுகள் முன்னதாகவே, ஓர் அரசியல் சாசன வரைவை விடுதலை வீரர் சாவர்க்கர் முன்னெடுத்திருக்கிறார் என்ற தகவல் வியப்பூட்டக்கூடியது. இதோ ஒரு அரிய கட்டுரை....

வீர சாவர்க்கர் ஒரு தீர்க்கதரிசி

திருவாளர்கள் உதய் மஹூர்கர், சிராயு பண்டிட் ஆகியோர் எழுதிய ‘Savarkkar: The man who could have prevented partition’ என்ற நூலுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ப.பூ. மோகன் பாகவத் அளித்துள்ள அணிந்துரையே இக்கட்டுரை….

பூரண அகிம்சை அறத்துக்கு எதிரானது, அது ஒரு பாவம்

ஆங்கில வார இதழான ‘ஆர்கனைசர்’ 1965 தீபாவளிச் சிறப்பிதழில், புரட்சியாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான வீர சாவர்க்கரின் நேர்காணல் வெளியாகி உள்ளது. நமது சரித்திரத் தேர்ச்சிக்காக, அந்த நேர்காணலின் தமிழ் வடிவம் இங்கு வெளியாகிறது....

வீர சாவர்க்கரின் தியாகத்தைப் போற்றிய மகாத்மா காந்தி

கம்யூனிஸ்டுகளைப் பொருத்த வரையில், வரலாறு என்பது அவர்களது கருத்தியலுக்கு வசதியான விஷயங்களை வெளிப்படுத்தப் பயன்படும் கருவி மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக உள்ள கசப்பான உண்மைகளை மறைப்பதற்கும் உதவும் கருவி. ஆனால் இந்த அறிவுசார் அழிச்சாட்சியங்கள் எல்லாம் இனிமேலும் எடுபடாது.

புரட்சியாளர் வீர சாவர்க்கர்

விநாயக தாமோதர சாவர்க்கர் ஒரு புரட்சிகர தியாகி; இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். அவரது வாழ்க்கையே தொடர் போராட்டத்தின் அடையாளம். அந்தப் போராட்டங்களில் முதலாவதாக இருப்பது இந்த நாட்டின் பண்பாட்டுக்கும் பாரம்பரியத்திற்கும் புத்துயிரூட்ட அவர் நடத்திய போராட்டம். அடுத்ததாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற நடத்திய போராட்டம். மூன்றாவதாக, சுயநல அரசியலுக்காக தனது சக இந்தியர்கள் செய்த கேலியையும் எதிர்ப்பையும் தாங்கி நின்றது.

ஸ்வதந்திரவீர் சாவர்க்கர்: பார்த்தாக வேண்டிய படம்

ஒரு திரைப்படமாக இத்திரைப்படம் மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அவசரமாக கதையைச் சொல்ல நினைக்காமல், ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக நிதானமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர். ஒரு திரைப்படமாக இது உயர்ந்து நிற்பது இந்த உத்தியால்தான்.

சாவர்க்கர்: அபாயமான போராளி மட்டுமல்ல, தீவிரமான சீர்திருத்தவாதி!

இந்திய விடுதலைக்கு உழைத்த தியாகியரில் திலகம் போன்றவர் வீர சாவர்க்கர் எனபடும் விநாயக தாமோதர சாவர்க்கர். மராட்டியரான இவரே அரசியலில் ஹிந்துத்துவம் என்ற சித்தாந்தம் உருவாக அடித்தளமிட்டவர். அதன் காரணமாகவே இன்று பலராலும் அர்த்தமின்றி விமர்சிக்கப்படுபவர். ஆனால், பலரும் அறியாத அவரது இன்னொரு முகம், இவர் ஒரு அதிதீவிர சமூகச் சீர்திருத்தவாதி என்பதே. அதைப் பற்றி, திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இக்கட்டுரை, ஜீரணிக்கக் கொஞ்சம் கஷ்டமான விஷயங்களுடன் நம்முடன் உரையாடுகிறது...

புதிய யுத்த முறைமை

இக்கட்டுரையில் ஸ்ரீ கணேச தாமோதர ஸவர்க்கர் என்று மகாகவி பாரதியால் குறிப்பிடப்படுபவர், சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக தாமோதர சாவர்க்கரின் அண்ணன் கணேச தமோதர சாவர்க்கர் ஆவார்.  ஸ்ரீ கணேச தாமோதர சாவர்க்கர் ஆங்கிலேயரை எதிர்த்து எழுதியதற்காகவே அவர் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையை எள்ளல் தொனியில்  மகாகவி பாரதி விமர்சித்திருப்பதை இக்கட்டுரையில் காணலாம். 

பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்: நூல் மதிப்புரை

மேற்கத்திய, மார்க்சீய தாக்கத்துடன் சரித்திரத்தைப் பார்க்கும் வரலாற்றாசிரியர்கள் திரிக்கும், மறைக்கும் வரலாற்றுப் பகுதிகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது, வீர சாவர்க்கர் எழுதிய இந்த நூலின் தலையாய குறிக்கோள். முக்கியமாக – பாரதத்தின் /ஹிந்துக்களின் வரலாறு தோல்வியின் வரலாறு, பல நூற்றாண்டு அடிமைத்தனத்தின் வரலாறு என்ற தவறான கண்ணோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. பாரத/ஹிந்து வரலாறு இடைவிடாத போராட்டத்தின் வரலாறு. நம் நாட்டின் அரசர்கள், மக்கள், வீரர்கள், தலைவர்கள், போராடி இன்றும் வெற்றி பெற்ற நாகரீகமாக வேத, ஹிந்து, பாரத நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் திகழச்செய்துள்ளார்கள் எனும் கருத்தை நூலாசிரியர் ஒவ்வொரு கட்டத்திலும் ஆழமாக பதியவைக்கிறார்.

அந்தமான் சிறை அனுபவங்கள் – நூல் அறிமுகம்

விடுதலைப் போராட்ட வீரர்களுள் பிற எல்லோரையும் விட கொடிய தண்டனைகளையும் கடும் சித்ரவதைகளையும் பெற்றவர் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883- 1966).... பூனாவில் சாவர்க்கர் துவங்கியிருந்த அபிநவ பாரத இயக்கம் நடத்திய பல வன்முறை நிகழ்வுகளையும், லண்டனில் நிகழ்ந்த ஆங்கிலேய அதிகாரி கொலையையும் விசாரித்த ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை (50 ஆண்டுகள்- 1910- 1960) அளித்து, தீவாந்திர (நாடுகடத்தல்) தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.... தனது தண்டனைக் காலத்தை, சிறைவாச அனுபவங்களை அவரே பின்னாளில் ’கேசரி’ வார இதழிலும், ’ஷ்ரத்தானந்த்’ என்ற பத்திரிகையிலும் தொடராக எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 1927இல் எனது அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூலின் பல பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இருந்ததால் தடை செய்யப்பட்டது. 1946இல் இந்தத் தடை விலகியது..... அந்த நூல் தற்போது வழக்குரைஞர் எஸ்.ஜி.சூர்யாவால்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அழகிய நூலாக கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலின் பல பக்கங்களைப் படிக்கும்போது கண்களில் நீர்திரண்டு படிக்க முடியாமல் செய்து விடுகிறது. எத்தனை வேதனைகள்! எவ்வளவு அவமானங்கள்! கொடுமைகளின் கூடாரமான அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைந்த கஷ்டங்களை அவருள் இருக்கும் எழுத்தாளனும் தத்துவ அறிஞரும், கவிஞரும், அற்புதமான மனிதரும் பல கண்ணோட்டங்களில் காண்பதை அவரது எழுத்தே புலப்படுத்துகிறது.