தன்னை உணர்ந்தது பாரதம்; உணர வைத்தார் விவேகானந்தர்!

அமரர் திரு. இராம கோபாலன் (19.09.1927 – 30.09.2020), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகர்களுள் ஒருவர். தமிழகத்தில் ஹிந்து சமுதாயத்திற்காக குரல் கொடுக்கவும், மக்களை ஒன்றிணைக்கவும், ஹிந்து முன்னணி அமைப்பை 1981- இல் நிறுவி, தனது 94-வது வயதிலும் இளைஞரைப் போல தொடர்ந்து இயங்கியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே...

அச்சமில்லை… அச்சமில்லை..!

திரு. இரா.மாது, திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அமரர் திரு. இரா.ராதாகிருஷ்ணன் அவர்களது புதல்வர்;  திருச்சியில் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற மேடைகளை அலக்கரிக்கும் தமிழகம் அறிந்த, இனிய மேடைச்  சொற்பொழிவாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது அற்புதமான கட்டுரை இது…

விவேகானந்தரின் அடிச்சுவட்டில்….

இன்று விரிந்த பார்வையே இல்லாமல் போய்விட்டது.  சமுதாயச் சீர்த்திருத்தங்கள்கூட எல்லைகள் – சாதிகளுக்குள்ளேயே முடங்கிவிட்டன. இந்தச் சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின் அடிச்சுவட்டில் இந்த பாரதம் நடைபோட வேண்டும். சுவாமிஜியின் சிந்தனைகளுக்குச் செயலாக்கம் கொடுத்தால் புதிய பாரதம் – வலிவும் வளமும் உடைய பாரதம் தோன்றும் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் .

உலகமயச் சூழலில் விவேகானந்தரின் தேவை

அமரர் திரு. பி.பரமேஸ்வரன் (1927 அக். 3 – 2020 பிப். 9), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த தலைவர்; சிந்தனையாளர். திருவனந்தபுரத்தில் இயங்கும் பாரதீய விசார் கேந்திரத்தின் நிறுவனர். கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் தலைவராக செயல்பட்டவர். 2012-இல் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது ஆங்கிலத்தில் அவர் எழுதிய இக்கட்டுரையை திரு. சத்தியப்பிரியன் தமிழில் வழங்கியுள்ளார்....

அவருடைய அடிச்சுவட்டில்…

ஸ்ரீ. தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் (1903- 1991), திருப்பூரைச் சார்ந்தவர்; விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி;  தமிழக கல்வி அமைச்சராக இருந்தவர்; கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம் அமையக் காரணமானவர்; பெண்கல்விக்காக இவர் துவங்கிய கல்லூரி, இன்று அவிநாசிலிங்கம்  மகளிர் பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது.  சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை கொங்கு மண்டலத்தில் பரப்பியதில் இவரது பங்கு அளப்பரியது. சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே...

ஆச்சார்ய புருஷர் விவேகானந்தர்

விடுதலை வீரர், 'வீரமுரசு’ என்றழைக்கப்பட்ட தேசபக்தர் சுப்பிரமணிய சிவா,  ‘ஸ்வதந்திராநந்தன்’ என்ற புனைப்பெயரில் சுவாமி விவேகானந்தரின் அருள்மொழிகளை மொழிபெயர்த்து வெளியிட்ட நூலின் முன்னுரை இது. இச்சிறிய கட்டுரையில், தான் அறிந்த சுவாமி விவேகானந்தரை எளிய முறையில் அறிமுகம் செய்கிறார் சுப்பிரமணிய சிவா.

தேசிய ஆன்மா!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரத பொதுச் செயலாளராக இருந்த உயர்திரு. ஹொ.வெ.சேஷாத்ரி (1926- 2005),  ஹிந்துத்துவ சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.  ‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த இக்கட்டுரை, ஆங்கிலப் பத்திரிகையான ‘பிளிட்ஸ்’ மாத இதழில் (1993 ஆகஸ்டு) வெளியானது.  பிற்பாடு  ஆர்.எஸ்.எஸ். வார இதழ்  ‘விஜயபாரதத்தில்’  வெளியானது. இதை தமிழில் வழங்கி இருப்பவர்,  திருநின்றவூர் கே.ரவிகுமார்.

ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் இந்திய வரலாறு

-பேரா.  சி.ஐ.ஐசக் முன்னுரை: பாரத வர்ஷத்தின் இந்த ஆண்டு ஒரு குறிப்பிடப்பட வேண்டிய ஆண்டாகும்.  ஒரு தீர்க்கதரிசியின் 150வது ஜயந்தியைக் கொண்டாடும் ஆண்டு.  ஒரு துறவி என்பதற்காக சுவாமி விவேகானந்தர் தன் எல்லைகளை ஆன்மிக வட்டத்திற்குள் மட்டும் குறுக்கிக் கொண்டு விடாமல் பருப்பொருள் உலகிலும் தனது உறுதியான கால்தடங்களைப் பதித்தவர்.  பட்டறிவிலும், அறிவு நெறியிலும் மேலோங்கிய இந்திய மண்ணில் ஆன்மிகத்திலும், பருப்பொருளிலும் ஒருங்கே தன் முத்திரையைப் பதித்தவர் சுவாமி விவேகானந்தர்.  இந்திய இளைஞர்களின் திறமையில் அவர் தனது உறுதியான நம்பிக்கையைக் … Continue reading ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் இந்திய வரலாறு

பாரதியாரும் விவேகானந்தரும்

பாரதிக்கும் விவேகானந்தருக்கும் உள்ள ஒற்றுமைகள் பல. இருவருமே மிகப் பெரிய அறிஞர்கள், பல மொழிகள் தெரிந்தவர்கள். விவேகானந்தர் ஆங்கிலத்தில் உரையாற்றிய போது, ‘ Speaking English like a Webster’ என்றும், ‘Walking Encyclopedia’ என்றும் அமெரிக்கப் பத்திரிகைகள் கூறின.... சுவாமி அபிராமானந்த மகராஜின் இனிய கட்டுரை....

இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!

இந்தியாவில் ஆதிசங்கரர்,  ராமானுஜர்,   மத்வர்,  சைதன்யர்,  குருநானக்,  புத்தர்,  மகாவீரர்  போன்ற  மதச்சாரியர்கள்  மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக மறுமலர்ச்சியை  ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் 19-ஆம் நூற்றாண்டில், இந்து மதத்தில் ஒரு மாபெரும்  மறுமலர்ச்சியை,  மகத்தான நல்ல ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய மாமனிதர், மகரிஷி சுவாமி விவேகானந்தர்..... மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜின் இனிய கட்டுரை.....

தீவிரவாதம் ஒழிய விவேகானந்தர் உரைத்த வழி

மனித சமுதாயத்தின் புராதனமான புனித நூல்களான வேதங்களில் ரிஷிகள் ‘படைப்பு முழுவதும் இறைவனே’ - ‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம’ என்று கூறுகிறார்கள். ஒவ்வோர் உயிரிலும் தெய்வீகம் அடிப்படையானதாகவும், பிரிக்க முடியாததாகவும் இருக்கிறது என்பது இதன் பொருள். அதனாலேயே சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் பல சொற்பொழிவுகளிலே மனிதனின் தெய்விகத்தை மீண்டும் மீண்டும் உறுதிபடக் கூறினார்....

நம்பிக்கை அளித்த மகான்

-சுவாமி சிவானந்தர் நவீன இந்தியாவின் புகழ்மிக்க தேசப்பற்று கொண்ட இந்தத் துறவி 1863, ஜனவரி மாதம் 12-ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.  அவருக்கு நரேந்திரன் என்று பெயரிடப்பட்டது. அவரது தந்தை ஒரு மிகச் சிறந்த வழக்குரைஞர். அவரது அறிவுக்கூர்மை, பண்பாடு ஆகியவற்றால் அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அவரது தாய் தேவி புவனேஸ்வரி கடவுள் பக்தி மிக்கவர்; மட்டுமின்றி தனது குழந்தைகளை மிகச் சிறந்தவர்களாக வளர்ப்பதில் திறமையுடையவராகவும் இருந்தார். சிறு வயது நரேந்திரன் குறும்புத்தனத்தோடு மனோதிடம் கொண்டவனாகவும் இருந்ததால், அவரைக் … Continue reading நம்பிக்கை அளித்த மகான்

விஸ்வரூப விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் கூடிய சர்வ சமயப் பேரவையில் 1893 செப்டம்பர் 11-இல் ஆற்றிய உரை சரித்திரப்புகழ் பெற்றது. உலக அரங்கில் பாரதத்தின் பெருமையையும் ஹிந்து தர்மத்தின் சிறப்பையும் நிலைநிறுத்திய மகத்தான அந்த உரை நிகழ்ந்து இன்றுடன் 129 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அற்புதமான அந்த நினைவை மீண்டும் மீட்டெடுக்கிறது, சுவாமிஜியின் இக்கட்டுரை...

தரித்திர தேவோ பவ; மூர்க்க தேவோ பவ!

'மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ!' இது ஹிந்து சமயப் பண்பாடு. ஆனால் காலத்தின் தேவையால், சமுதாயத்தின் மற்றும் ஹிந்து சமயத்தின் வளர்ச்சிக்காக மேற்கூறிய நான்கினை சுவாமிஜி மேலும் விரிவுபடுத்தினார். அன்னை, தந்தை, ஆச்சாரியர், விருந்தினர்களை தெய்வமாக வழிபட வேண்டும் என்பதோடு மேலும் இரண்டையும் சேர்த்தார் விவேகானந்தர். 'தரித்ர தேவோ பவ, மூர்க்க தேவோ பவ' என்று அவர் கூறி, நமது கவனத்தை மேலும் ஆழப் படுத்தினார்.

நூற்றைம்பதிலும் இளமை குன்றாத விவேகானந்தர்

இந்தியாவின் உயிர்நாடி மதமும், ஆன்மீகம்தான் என்று பலமுறை விவேகானந்தர் அறிவுறுத்தியிருக்கிறார். பொருளாதாரத்தில் பலம் பெற்று வரும் இந்தியா ஆன்மீகத்தின் பக்கமும் தனது கவனத்தை கூடுதலாகத் திருப்பிக்கொள்ள வேண்டும்....