இந்தியா (30.03.1907) சித்திர விளக்கம்

மிகப் பெரிய கட்டுரையில் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஒரே கருத்துப்படம் மூலமாகத் தெரிவித்து விடலாம். எனவேதான் அது கருத்துப்படம் அல்லது ‘கார்ட்டூன்’ எனப்படுகிறது. தமிழில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர், நமது இதழியல் தந்தை மகாகவி பாரதியே. அவர் தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் துவக்கம். இங்கு இந்தியா (30.03.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Andal: The Vaisnava poetess

Makakavi Bharathi wrote an article -on the Vaishnava poetess Andal is a well introductory and proved his genius.

பறையரும் பஞ்சமரும்

என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா?

NAMMALWAR

Arya: A Philosophical Review was a 64-page monthly periodical written by Sri Aurobindo and published in India between 1914 and 1921. Mahakavi Bharthi wrote English articles in this journal with the name of C.S.Bharathi. This article is one master piece of Our beloved Makakavi Bharathi...

நமது கல்விமுறையில் ஒரு பெருங்குறை

தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்- மகாகவி பாரதி

தீண்டாமை என்னும் பாதகம்

சுதேசமித்திரனில் 1920-களில் மகாகவி பாரதி எழுதிய பதிவு இது... தீண்டாமை ஒழியாமல் தேச விடுதலை வசப்படாது என்ற தெளிவான பார்வையை பாரதி- காந்தி ஆகிய இரு மகான்களிடமும் கண்டு மகிழ்கிறோம்...

தமிழ் வசன நடை

நூறாண்டுகளுக்கு முன்னர், தமிழில் உரைநடை உருவாகிவந்த காலத்தில் அதற்கு இலக்கணம் இயற்றுகிறார் மகாகவி பாரதி. ” “கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி” என்று கூறும் அவர், ”வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்க வேண்டும்” என்கிறார். “உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்” என்று நமக்கு வழிகாட்டுகிறார்....

கவிதையின் இலக்கணம்

கவிதையின் இலக்கணம் குறித்த மகாகவி பாரதியின் இந்தக் கட்டுரையில் (சுதேசமித்திரன்) ‘ஹொக்கு’ என்று குறிப்பிடப்படுவது தான் இன்றய ஹைகூ கவிதை.நூறாண்டுகளுக்கு முன்னமே அதனை அறிந்திருந்தார் நமது மகாகவி. பாரதியின் வசன கவிதைகளே தமிழ்ப் புதுக்கவிதைக்குத் தோற்றுவாய். இக்கட்டுரையில் கூறியுள்ள பல அம்சங்களை தனது வசன கவிதைகளில் மகாகவி பாரதி பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.

ரெயில்வே ஸ்தானம் – சிறுகதையும் மறுப்பும்

மகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில்  ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்கும் வகையிலும்,  முஸ்லிம் மாதரின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதாகவும் இக்கதையை எழுதியுள்ளார் பாரதி. எனினும், இக்கதையில் சிறு தகவல் பிழை இருப்பதாக அவரது இஸ்லாமிய நண்பர் கூறியதையும் ‘சுதேசமித்திரன்’ இதழில்  'முகமதிய ஸ்திரீகளின் நிலைமை' என்ற கட்டுரையாக வெளியிட்டு, தனது பிழைக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார். என்றபோதும், முஸ்லிம் மாதரின் உரிமைக்காக தனது இஸ்லாமிய நண்பரிடம் தொடர்ந்து வாதிடுகிறார். சமூக மாற்றத்துக்காகத் துடித்த மகாகவி பாரதியின் இதயம், மதம் கடந்து சிந்தித்ததையும் இந்த சிறுகதை மற்றும் கட்டுரையில் காண முடிகிறது. 

பகவத் கீதை– பதினெட்டாம் அத்தியாயம்

ஓர் அற்புதமான ஞான இலக்கியம் போர்முனையில் உதித்ததை அஞ்ஞானிகள் உணர மாட்டார்கள். ஏனெனில், இது மனத்தின் இருநிலைகளுக்கு இடையிலான போர். அஞ்ஞானிகளின் ஆணவம் இதனை அறிய விடாது. பகவத் கீதையின் இறுதி அத்தியாயம் இது… வில்லேந்திய வீரன் விஜயன் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவனை பலவாற்றானும் தேற்றி, பலவிதமான வாதங்களால் அவன் மயக்கத்தைப் போக்கி, போருக்கு ஆயத்தப்படுத்துகிறான், அவனது அன்புத் தோழன் கண்ணன். இறுதியாக, “எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே” என்று நம்பிக்கை அளிக்கிறான்...

பகவத் கீதை- பதினேழாம் அத்தியாயம்

அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப்படுகின்றன; அவற்றின் பலன்களும் அவ்வாறே. சாத்விகம், ராஜசம், தாமசம் என்னும் இம்முன்று வகைப்பாட்டில் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளே தான் ஆகிறான் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா...

பகவத் கீதை- பதினாறாம் அத்தியாயம்  

கடவுளை அறிந்தர்கள் தானே கடவுளின் இன்னொரு படிமம் (அஹம் பிரம்மாஸ்மி) என்பதை அறிவார்கள். கடவுள் இல்லை என்று இறுமாப்புடன் கூறுவோரோ கடவுளை அறியாத, அசுரத்தன்மை கொண்ட பதர்கள் (அஹம் நாஸ்தி). ஹிரண்யனின் வீழ்ச்சியைக் கண்ட பிறகும் மனமயக்கில் ஆணவத்துடன் இருக்கும் இவர்களுக்கு மீட்பு இல்லை என்கிறான் தேரோட்டியாம் கிருஷ்ணன் இந்த அத்தியாயத்தில்…

பகவத் கீதை- பதினைந்தாம் அத்தியாயம்

அநாதியான இந்த பிரபஞ்சம் இயற்கையின் பேருரு. இங்கு வாழும் அனைத்தும் ஆன்மாவின் பேருரு. இவ்விரண்டும் தானாக நிற்பவன் கடவுள். அவனே புருஷோத்தமன். இந்தப் பேருண்மையை அறிந்தவனே என்னை அறிந்தவன் என்கிறான் இந்த அத்தியாயத்தில், பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனின் அவதாரமான பார்த்தசாரதி…

பகவத் கீதை- பதினான்காம் அத்தியாயம்

சத்வ, ரஜஸ், தமோ குணங்கள் எனப்படும் முக்குணங்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இறைவன். இக்குணங்களைக் கடந்தவனே இறவாப்புகழ் அடைகிறான் என்பது கண்ணன் வாக்கு...

பகவத் கீதை- பதின்மூன்றாம் அத்தியாயம்

நாம் தேகத்தையே (க்ஷேத்ரம்) பிறவி என நம்புகிறோம். அது இயற்கையின் ஒரு வடிவமே. இதனுள் இருந்து நம்மை ஆட்டுவிப்பது ஆத்மா. இதை அறிந்தவன் க்ஷேத்திரக்ஞன். “பிரகிருதி (இயற்கை), புருஷன் (ஆத்மா) இவ்விரண்டும் அநாதி என்றுணர். காரிய காரணங்களை ஆக்கும் ஏது இயற்கை; சுக துக்கங்களை உணரும் ஏது ஆத்மா” என்கிறான் கண்ணன், இந்த அத்தியாயத்தில்….