தேசத்திற்கே முதல் இடம்!

தேசத்திற்கே முதல் இடம்! பத்திரிகையாளர் கோதை ஜோதிலட்சுமி  ‘தினமணி’ நாளிதழில் எழுதியுள்ள இக்கட்டுரை மிகவும் அற்புதமானது; அனைவரும் படிக்க வேண்டியது...

ஊடலின் உச்சத்தில்…

பழந்தமிழ் இலக்கியத்தின் பாடல்களை இளம் தலைமுறைக்குச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி சமகாலக் காட்சிகளுடன் விளக்கியாக வேண்டி இருக்கிறது. இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட தொழில் துறையில் பணிபுரிந்தாலும், மனதைப் பண்படுத்தும் இலக்கியத்தை மென்மையாக எடுத்துச் சொல்கிறார், எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன். இதோ அவரது குறுந்தொகை பற்றிய குறுங்கட்டுரை...

ஒற்றைக் கொம்பனும் தாமரைத் தடாகமும்

இந்தப் பரந்த உலகம் மானிடனுக்கானது மட்டுமல்ல என்பதை எப்போது உணரப் போகிறோம்? ஒற்றைக் கொம்பன்கள் மின்வேலியில் சிக்கி உயிரை இழப்பதும், மயக்க ஊசியால் மரணிப்பதும் எதைக் காட்டுகின்றன, நமது மனிதநேயத்தையா? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் கவிதை, ஒற்றைக் கொம்பன்களுக்கானது மட்டுமல்ல....

பட்டியல் சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!

ஹிந்து பட்டியலின சகோதரர்களின் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளில் பங்கு கேட்டு, மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் அரசியல்ரீதியாக நிர்பந்தம் செய்து வருகிறார்கள். அந்தக் கோரிக்கை நியாயமற்றது என்பதை விளக்கி, ஹிந்து பட்டியலின சகோதரர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பறிபோகக் கூடாது என்று வலியுறுத்துகிறது, இக்கட்டுரை. ஆந்திர பிரதேசத்தில் இயங்கும் ‘எஸ்.சி., எஸ்.டி. ஹக்குல சம்க்ஷேம வேதிகா’ வெளியிட்ட ஆங்கில நூலின் சுருக்கம் இது. சென்னையில் உள்ள நந்தனார் அறக்கட்டளை சிறு நூலாக வெளியிட்டுள்ள இக்கட்டுரையை, நமது தளத்தில் பதிவு செய்கிறோம்…

அம்பிகையின் வாளில் ரத்தம்

கொரோனா தொற்று அபாயம் நீங்கி உலகம் இப்போது வேகமாகப் பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், அந்தக் கொடிய தொற்றுக்கு என்ன காரணம்? இனிமேல் அத்தகைய கொடுமை நிகழாமல் தடுப்பது எங்ஙனம்? இக்கேள்விகளுக்கு ஆன்மிகரீதியாகவும் தார்மிக ரீதியாகவும் பதில் அளிக்கிறார் பேரா. இளங்கோ ராமானுஜம்…

மன்னரின் அடையாளமா செங்கோல்?

மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன் நாராயணன் ‌ இந்த வார ‘ராணி’ இதழில் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது. மக்களாட்சி முறையில் செங்கோலுக்கு இடமில்லை என்று கூறும் அதி புத்திசாலிகளுக்கு பதில் அளிக்கிறது இக்கட்டுரை.

தன்னம்பிக்கை தரும் வேதாந்தம்

மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இளங்கோ ராமானுஜம், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்‌ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…

திரையுலகம்: மாறுகிறது நெஞ்சம்… மாற்றுவது யாரோ?

இடதுசாரிகள், ஹவாலா கும்பல்கள், லிபரல்களால் கைப்பற்றப்பட்ட இந்திய சினிமாவும், திராவிட, நாத்திகக் கும்பல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகும் மீட்சி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன என்கிறார், தமிழ்த் திரைப்பட உதவி இயக்குநர் திரு. சின்னப்பா கணேசன். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தையும் அதையொட்டி வெளியான சில படங்களையும் முன்வைத்து, இந்த அவதானிப்பை இவர் முன்வைக்கிறார்….

ஜாம்பிகள் – ஜாக்கிரதை!

அற்புதமான உருவகக் கவிதை. எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் இதயமெங்கும் வீசும் சத்திய அனல் கவிதையில் தெறிக்கிறது. ‘ஜாம்பி’ என்றால் என்ன என்று புரியவில்லையா? ‘ஜாம்பி’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘மதவெறி’ என்று போட்டுக் கொள்ளுங்கள்… (எந்த மதவெறி என்று சொல்லி ஜாம்பிக் காவலர்களிடம் கடி வாங்க நான் தயாரில்லை). அப்போது, நீங்கள் வாழும் உலகின் தரையடி மெள்ள உங்கள் கால்களுக்குக் கீழே நழுவிக் கொண்டிருப்பது புரியும்.

புதுக்கவிஞர்களால் வளம் பெற்ற தமிழ்

யார் வேண்டுமானாலும் எதை எழுதினாலும் புதுக்கவிதை என்று சொல்லும் காலமாகிவிட்டது. ஆனால், கவிதை என்பதற்கு ஒரு தகுதி இருக்கிறது. அது என்ன? அதன் வரலாற்றை அறிந்தால், யாரும் கண்டபடி கிறுக்கி, தன்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.... இதோ பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் கட்டுரை.....

கபட கேஸரி

எந்த வகையிலும் தனக்கு மரணம் நேரக் கூடாதென்று, கடுந்தவமிருந்து கபடமாக வரம் வாங்கிவந்த அசுர வேந்தன் இரணியனை, அதே கபட வேடம் கொண்டு சம்ஹரித்தார் நரசிம்மர். இதனை வேதாந்த தேசிகரின் ‘காமாஸிகாஷ்டகம்’ சுலோகங்களைக் கொண்டு இங்கே விவரிக்கிறார் திருநின்றவூர் ரவிகுமார்...

இலக்கணத் தமிழ் சமைத்தவர்கள்

நமது வாழ்க்கையை எவ்வாறு நாமே உருவாக்கிய சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றனவோ, அதேபோல மொழியைக் கையாள்வதில் தேவையான கட்டுப்பாடுகள் அவசியம். அதற்காக சான்றோரால் எழுதப்பட்டவையே இலக்கண நூல்கள்.

அக்காரக்கனியும் அமரகவியும்

கவிச் சக்கரவர்த்தி கம்பர் தமிழில் இராமாவதாரம் இயற்றினாலும், அதில் பல புதுமைகளைப் புகுத்தி இருந்தாலும், அது புதிய நூல் அல்ல. தான் இதை இயற்றுவதற்கு முன்னால் - மகரிஷி வால்மீகி, வசிஷ்ட மாமுனி, போதாயணர் என்ற - மூவர் வடமொழியில் ராம காவியத்தை இயற்றியுள்ளனர்; அவர்களுள் முன்னவரான வான்மீகி மகரிஷியின் நூலை ஒட்டியே தாம் இதை இயற்றியதாகக் கூறுகிறார்.மகரிஷி வால்மீகியைப் பின்பற்றியதாக மேலே கூறியவர் வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இரணியன் கதையைப் புகுத்திய புதுமை ஏன் என்பதை இங்கே காண்போம்.

நிகண்டு, அகராதி அளித்த பெருமக்கள்

மொழியின் வளர்ச்சியிலும் கட்டமைப்பிலும் பேரிடம் வகிக்கும் இந்த நிகண்டுகளும் அகராதிகளும் தமிழின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி உள்ளன. சொற்களை அழியாமல் காக்கும் கருவூலங்களாக இவை விளங்குகின்றன....

சித்திரக் கவியும் கவிஞர்களும்

சென்னையில் வாழும் பா.சு.ரமணன், எழுத்தாளர். பல ஆன்மிக நூல்களை எழுதி இருக்கிறார். தமிழ் மொழியில் உள்ள சிறப்பு இலக்கிய வகையான ‘சித்திரக்கவி’ குறித்த அன்னாரது இனிய கட்டுரை இங்கே…