மாலைப் பொழுதின் மயக்கத்திலே…

குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் விதவையின் மன ஏக்கங்களை அற்புதமான வரிகளில் இப்பாடலாக இழைத்திருக்கிறார் கவியரசர். “இளமை எல்லாம் வெறும் கனவு மயம்...  இதில் மறைந்தது சில காலம்! தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்” என்ற வரிகளில் தான் எத்தனை வேதனை?

தேசபக்தியை பெருக்கியவர்!

தேசத்தந்தை மகாத்மா காந்தி சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்ட தலைவர்களுள் பிரதானமானவர். அவர் பல இடங்களில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி இருக்கிறார். அவற்றில் சில துளிகள் இவை….

தனி ஒருவனுக்கு

தீண்டாமையையும் பசிக் கொடுமையையும் போலித்தனங்களும் கண்டு வெட்கி, ஆவேசம் கொள்ளும் புதுமைப்பித்தனின் அக்கால நடையிலான சிறுகதை இது…

ஞானகங்கை

ஸ்ரீ குருஜி கோல்வல்கர் என்று அழைக்கப்படும் பரமபூஜனீய குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) இரண்டாவது தலைவராக இருந்தவர்; பெரும் தபஸ்வி; சிந்தனையாளர்; சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட இயக்கச் செயல்வீரர்; தேசிய மறுமலர்ச்சிப் பணியில் தனது வாழ்வையே அர்ப்பணமாக்கியவர். ‘ஞானகங்கை’ என்ற நூல் தொகுப்பு குருஜியின் சிந்தனைக் களஞ்சியமாகும். இக்கட்டுரை ‘தியாகபூமி’ வார இதழில் வெளியானதாகும்.

சத்திய சோதனை – 5 (36-40)

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஞாபகார்த்தச் சின்னம் அமைப்பதென்று காங்கிரஸில் மிகக் குதூகலத்தினிடையே ஒரு தீர்மானம் நிறைவேறியிருந்தது. இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் நிதி திரட்ட வேண்டும். இந்த நிதிக்கு என்னையும் ஒரு தருமகர்த்தாவாக நியமித்தார்கள். பொதுக்காரியங்களுக்குப் பிச்சை எடுப்பதில் மன்னர் என்று பண்டித மாளவியாஜி கீர்த்தி பெற்றிருந்தார். ஆனால், இந்தக் காரியத்தில் அவருக்கு நான் அதிகம் பின்வாங்கியவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதுதான் இத்துறையில் எனக்கு இருந்த ஆற்றலைக் கண்டுபிடித்தேன். என்றாலும், சுதேச மன்னர்களிடமிருந்து பெருந்தொகையை வசூலித்துவிடுவது மாளவியாஜிக்கு இருந்த இணையில்லாத ஜாலவித்தை என்னிடம் இல்லை.....

ஞான வானத்து வைகறை

திரு. பொன். பாண்டியன்  குடியாத்தத்தில் வசிக்கிறார்; அரசு  உயர்நிலைப் பள்ளியில்  ஆசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவேகானந்தரின் சிந்தனைகள்

கோவையைச் சார்ந்த மேலாண்மைத் துறை பேராசிரியரும் பாஜக மாநிலத் துணத் தலைவருமான பேரா. ப.கனகசபாபதி அவர்களின் சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...

தமிழகத்திற்கு எழுச்சி தரும் ரத யாத்திரை

இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் திரு. மயில்சாமி அண்ணாதுரை,  கோவை மாவட்டம், கோதவாடி என்ற கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர்.  தனது கடும் உழைப்பால் முன்னேறி,  பெங்களூரிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) ‘சந்திரயான்’  திட்ட இயக்குனராகச்  செயலாற்றியவர். 2013-இல் கோவையில், சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்க விழாவில் பேசிய அன்னாரது கருத்துகள் இங்கே....

மகாவித்துவான் சரித்திரம் – 2(8)

ஒருநாள் நாங்கள் பாடங்கேட்டுக் கொண்டிருந்த பொழுது சென்னையிலிருந்த சுப்பராய செட்டியாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், "நான் திருச்சிராப்பள்ளியில் தங்களிடம் படித்துக் கொண்டிருக்கையில் வெஸ்லியன் மிஷன் ஸ்கூலில் எனக்கு வேலை கிடைத்தது. முதல் மாதச் சம்பளமாகிய ரூபாய் பதினைந்தைத் தங்களிடம் கொடுத்து வந்தனம் செய்து பெற்றுக்கொண்ட பொழுது தாங்கள் இந்தப் பதினைந்தைத் திரும்பவைத்தால் என்ன தொகையோ அதனைப்பெற்று வாழ்ந்திருக்க வேண்டுமென்று அருளிச்செய்தீர்கள். அந்தப்படியே தங்களுடைய பெருங்கருணையினால் எனக்கு இன்று ரூ. 50 சம்பளம் ஏற்பட்டது" என்று தெரிவித்திருந்தார். இவருடைய நல்வாக்குப் பலிதமாகுமென்பதைச் சிலராற் கேட்டிருந்த நாங்கள் அக்கடிதத்தால் அச்செய்தி உண்மையென்று அறிந்து மகிழ்ந்தோம்....

விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம்!

அமரர் மௌலானா வஹிதுதீன் கான் (1925- 2021), பாரதத்தின் இஸ்லாமியப் பேரறிஞர்களுள் முதன்மையானவர். உத்தரப்பிரதேசத்தின் அஸம்கார் பகுதியில் வாழ்ந்தவர். திருகுர்ஆனுக்கு நவீன நோக்கில் உரை எழுதியவர்; முஸ்லிம் மார்க்க சிந்தனையாளர்களால் மிகவும் போற்றி மதிக்கப்படுபவர். பாரதம் உயர வேண்டுமானால் இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற சமரசக் கருத்தை ஓயாமல் முன்வைத்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

பொன்னை விரும்பும் பூமியிலே…

ஜாவர் சீதாராமனின் திரைக்கதை வசனத்தில், கே.சங்கரின் இயக்கத்தில், 1962-இல் வெளியான திரைப்படம் ஆலயமணி. முக்கோணக் காதல்கதைதான்; ஆனால், பண்பாடு மீறாத கதைக்களம். படத்தில் உள்ள ஏழு பாடல்களையும் கவியரசு கண்ணதாசனே எழுதி இருக்கிறார். அத்தனையும் தமிழ்த் திரையுலகின் சொத்து. விதிவசமாக காதலை தியாகம் செய்து நாயகனை கணவனாக ஏற்கும் மனைவியாக சரோஜாதேவி நடித்திருக்கும் இப்படத்தின் நாயகன் சிவாஜி கணேசன். ஊனமுற்ற தன்னை கண்போலக் காக்கும் மனைவியைப் பற்றி கணவன் பாடுவதாக அமைந்த அற்புதமான பாடல் இது...

ஓர் ஒப்பற்ற மகான்

பூஜ்யஸ்ரீ சுவாமி கௌதமானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி; சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இரண்டாவது கட்டுரை இங்கே....

சுவாமி விவேகானந்தரும் அன்னை வழிபாடும்

பூஜ்யஸ்ரீ சுவாமி யதாத்மானந்தர் ராமகிருஷ்ண மடத்தின் துறவி; சேலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். இக்கட்டுரை சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது எழுதப்பட்டது….

சத்திய சோதனை- 5(31-35)

நவஜீவன், எங் இந்தியா பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரிப்பதை ஆரம்பத்திலிருந்தே மறுத்துவிட்டேன். இதனால் அப்பத்திரிகைகள் எந்த நஷ்டத்தையும் அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இதற்கு மாறாக, அப்பத்திரிகைகள் சுதந்திரமாக இருந்துவருவதற்கு என் தீர்மானம் பெரிய அளவுக்கு உதவியாக இருந்தது என்பதே என் நம்பிக்கை.

மக்கள் சேவையே மகேசன் சேவை

கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த அமரர் திரு. கி.சூரியநாராயண ராவ் (1924- 2016), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகராக வழிகாட்டியவர். சுவாமி விவேகானந்தர் கூறிய வழியில் நாட்டைப் புனரமைப்பதற்காக, தனது வாழ்வையே அர்ப்பணம் செய்தவர். தேசிய சிந்தனையாளர்; நாட்டு முன்னேற்றத்துக்கான பல நூல்களை எழுதியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது அரிய கட்டுரை இங்கே…