திரு. தமிழருவி மணியன், சட்டம் பயின்றவர்; தமிழகம் அறிந்த பேச்சாளர்; எழுத்தாளர். காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர். ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’, ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ ஆகிய நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
Category: கருவூலம்
அரசியலுக்கு வர சுவாமி விவேகானந்தர் தான் தூண்டுகோல்
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி, தமிழகம் முழுவதுமான ஓராண்டு கால தொடர் கொண்டாட்டத்தை 27.2.2013-இல் சென்னையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் செல்வி ஜெ.ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதன் சுருக்கம் இது.
அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளையும் வர்ணித்து கவியரசர் எழுதிய இப்பாடல், ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் வெண்கலக் குரலோனின் இனிய பாடலாக முகிழ்த்தது...
இன்றைய இந்தியாவை உருவாக்கியவர் விவேகானந்தர்
விடுதலைப் போராட்ட வீரர் ஸ்ரீ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்டவர். சுவாமிஜி பற்றிய நேதாஜியின் கட்டுரை இது…
மகாவித்துவான் சரித்திரம்- 2(10அ)
ஒருநாள் இவருக்கு லண்டனிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் 'மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இந்தியா' என்று மட்டும் விலாஸத்தில் எழுதப்பட்டிருந்தது. அது யாதொரு தடையுமின்றி இவருக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம் இவருடைய பெரும்புகழென்பதை அறிந்து மாணவர்களும் அன்பர்களும் மகிழ்ந்தார்கள். சுப்பிரமணிய தேசிகரும் இதனை யறிந்து பாராட்டினார்.
சத்திய சோதனை- 5 (41-44)
லோகமான்யர் இல்லாததன் நஷ்டத்தைக் குறித்து விசேஷ மகாநாட்டில் நான் மிகுந்த மன வருத்தத்துடன் உணர்ந்தேன். லோகமான்யர் அன்று உயிரோடிருந்திருப்பாராயின், அச்சமயம் அவர் நிச்சயம் எனக்கு ஆசி கூறியிருப்பார் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இன்றும் இருக்கிறது. ... எங்களிடையே எப்பொழுதும் அபிப்பிராய பேதம் இருந்திருக்கிறது. ஆனால், அது மனக்கசப்பை உண்டாக்கியதே இல்லை. எங்களுக்குள் இருந்த பந்தம் மிகவும் நெருக்கமானது என்று நம்பிக் கொள்ளுவதற்கு அவர் எப்பொழுதும் என்னை அனுமதித்து வந்தார்.
மதத்திலே மறுமலர்ச்சி கண்ட மகான்
தமிழக முன்னாள் முதல்வர் அமரர் திரு. மு.கருணாநிதி (1924- 2018), சுவாமி விவேகானந்தர் மீது கொண்டிருந்த அளப்பரிய மரியாதை இக்கட்டுரையில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் தான் குமரிமுனையில் விவேகானந்தர் பாறையில் அவருக்கு உயரிய நினைவு மண்டபம் விவேகானந்த கேந்திரத்தால் அமைக்கப்பட்டது. அப்பொழுது அவர் எழுதிய கட்டுரையே இந்தக் கட்டுரையாகும்.
பாரதியும் பாரதிதாசனும்
தமிழ் காத்த நல்லோரில் அண்மைக்காலம் வரை வாழ்ந்த பெரியார், அமரர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் (1916- 2002). தமிழ் இலக்கியச் சுவையை உணர்த்தும் திறனாய்வுத் துறைக்கு முன்னோடியானவர். அன்னாரது நூலான ‘பாரதியும் பாரதிதாசனும்’ இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...
தேசத்தைக் காத்த தெய்வத் துறவி
பெங்களுரு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை 12.01.2009 அன்று திறந்துவைத்து, பாஜக மூத்த தலைவர் திரு. எல்.கே.அத்வானி ஆற்றிய உரையின் சுருக்கம் இது...
சுவாமிஜி நமது தேசியத்தின் தன்மானம்
முன்னாள் ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி, ஆங்கில வார இதழான ‘THE WEEK’ பத்திரிகையில் 2014-இல் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது....
அக்ரஹாரத்துப் பூனை
இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் ‘ஆஷாடபூதி’ மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.
இவர் தான் வீரத்துறவி விவேகானந்தர்
திரு.ப.ஜீவானந்தம் (1907- 1963), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளுள் ஒருவர்; தமிழகத்தில் பொதுவுடைமை சித்தாந்தம் பரவக் காரணமான பெரியோர்; ஜனசக்தி பத்திரிகையின் நிறுவனர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
மகாவித்துவான் சரித்திரம் – 2(9)
புதுக்கோட்டை மன்னராகிய கெளரவம் பொருந்திய இராமசந்திர தொண்டைமானவர்களுடைய மூத்த தேவியாரான ஸ்ரீ பிரகதம்பா பாய் சாகேபவர்கள் அங்கே இவர் வந்திருத்தலைக் கேள்வியுற்றுத் தக்கவர்களை அனுப்பி இவரை அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து நாடோறும் பல அரிய விஷயங்களைக் கேட்டார்கள். தேவாரங்கள் சிலவற்றிற்கும் பெரிய புராணத்திலுள்ள பாடல்கள் சிலவற்றிற்கும் பொருள் கேட்டு அறிந்து தக்க ஸம்மானங்கள் பல செய்வித்து இவருடைய பூஜைக்கு வேண்டிய பாத்திரங்களை வெள்ளியினாலே செய்வித்து அளித்தார்கள்.
மகரிஷி விவேகானந்தர்
ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்து…
இந்தியாவை தலைமிர்ந்து நிற்கச் செய்தவர்
பாரதத்தின் முதல் பிரதமரான திரு. ஜவஹர்லால் நேரு (1889- 1964), சுவாமி விவேகானந்தர் குறித்துக் கூறியவை…