நம்மாழ்வாரும் விவேகானந்தரும்

பேராசிரியர் திரு. டி.ஏ.ஜோசப், ‘ஸ்ரீ வைஷ்ணவச்சுடராழி’ என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்; பாண்டிச்சேரியில் வசிக்கிறார். பன்மொழித் தேர்ச்சி மிக்கவர்; கல்வியாளர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது அன்னார் எழுதிய கட்டுரை இது….  

பாரத பூமி பார்க்கெலாம் திலகம்!

தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கம் நடத்திவந்த மூத்த எழுத்தாளர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் (1936- 2021) அவர்கள் சுவாமி விவேகானந்தரின் 150வ்து ஜெயந்தியின் போது எழுதிய கட்டுரை இது....

விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை

திரு. ஜெயமோகன், தமிழின் முன்னணி எழுத்தாளர்; திரைக்கதை வசனகர்த்தா. ‘தி இந்து- தமிழ்’ நாளிதழில் 2014-இல் இவர் எழுதிய கட்டுரை நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது.

இளைஞர்களின் உற்சாக டானிக்!

திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகையாளர்; ‘ராணி’ வார இதழின் ஆசிரியர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது….

மகாவித்துவான் சரித்திரம்- 2(11)

சிதம்பரம் பிள்ளைக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. அவர்களுள் முதல்வரும் மூன்றாம் புதல்வரும் அக்காலத்தில் இறந்துவிட்டனர். இரண்டாங் குமாரருக்கு வைத்தியநாதசாமி பிள்ளை யென்று பெயர். தம் தந்தையார் பார்த்து வந்த கப்பூர்க் கணக்கு வேலையை அவர் பார்த்துக்கொண்டு இப்பொழுது சௌக்கியமாக இருந்து வருகின்றனர். அவரை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. "உமக்கு ஆண் குழந்தை பிறந்தால் அக் குழந்தைக்குப் பிள்ளையவர்களுடைய பெயரை வைக்க வேண்டும்" என்று அவரிடம் நான் சொல்லியிருந்தேன்.

சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்

‘பத்மன்’ என்ற பெயரில் எழுதிவரும் திரு. நா.அனந்த பத்மநாபன், பல நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர்.  சென்னையில் வசிக்கிறார். இதழியல் துறையில் பல்லாண்டுகால அனுபவம் உடைய இவர், தமிழக அரசின் விருது பெற்ற  ’மூன்றாவது கண்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதி  இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

பாரதியும் பாரதிதாசனும்- 3அ

இளமையிலேயே நாடு முழுவதையும் சுற்றித் திரிந்து பார்த்த காரணத்தாலும் பிற மொழி பேசும் இந்திய நாட்டு மக்களோடு பல்லாண்டுகள் பழக நேர்ந்த காரணத்தாலும், பாரதியாரின் அறிவு, விரிந்த பரப்பும் பாங்கும் கொண்டது என்பதை மறுக்க முடியாது. இந்தியா முழுவதையும் ஒன்றாகக் காணுகின்ற ஒருமைக் கண்ணோட்டம், பரந்துபட்ட அவருடைய அனுபவத்தின் விளைவு என்று நினைக்க வேண்டியுள்ளது.

மூன்று கடல்கள், மூன்று நாட்கள்

திரு. சுப்பு மூத்த தமிழ் பத்திரிகையாளர்; தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தவர்; மொழி பெயர்ப்பாளர்; ‘திராவிட மாயை- ஒரு பார்வை’ என்ற நூலின் மூலமாக தமிழக அரசியல், இலக்கிய வட்டாரங்களில் பெரும் சலனத்தை ஏற்படுத்திய எழுத்தாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…

“சென்னை இளைஞர்களே, நீங்கள்தான் உண்மையில் அனைத்தையும் செய்து முடித்தவர்கள்”

திரு. மாலன் தமிழகம் அறிந்த மூத்த பத்திரிகையாளர்; இயற்பெயர் நாராயணன்; தினமணி, இந்தியா டுடே (தமிழ்), குமுதம், குங்குமம்,புதிய தலைமுறை ஆகிய பத்திரிகைகளிலும் சன் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்; கணையாழி, திசைகள் ஆகிய இலக்கிய இதழ்களில் பணியாற்றியவர்; ஜனகணமன (நாவல்), என் ஜன்னலுக்கு வெளியே, உயிரே உயிரே, சொல்லாத சொல் (கட்டுரைத் தொகுப்புகள்), மாலன் சிறுகதைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது முதல் கட்டுரை இங்கே…

காற்றுக்கென்ன வேலி?

இந்த உலகம் ஆண்- பெண் சேர்க்கையால் தான் வாழ்கிறது. உலகின் நியதியில் இருவரும் சமம். ஆனால், இயல்பில் ஆண் ஆதிக்கமே பெண்னுரிமை பேசும் நாடுகளிலும் கூடத் தொடர்கிறது. இந்த ஆதிக்கத்தை ஏற்காத சமத்துவத்துக்கான குரல்கள், மகாகவி பாரதி முதல் கவியரசு கண்ணதாசன் வரை- ஆண்களாலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு ஓர் அரிய மாதிரிப் பாடல் தான் இங்கே பதிவாகிறது. 1977-இல்வெளியான ‘அவர்கள்’ (இயக்கம்: கே.பாலசந்தர்), ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பின் ஆழத்தை புதிய நாற்கோணத்தில் காட்ட முயன்ற திரைப்படம். விவாகரத்து கொடுத்துவிட்ட சந்தேகப் பிராணியான கணவன், விதிவசத்தால் வாழ்வில் இணைய முடியாத முன்னாள் காதலன், தன்னை மிகவும் நேசிக்கும் மனைவியை இழந்த இளைஞன் ஆகியோர் ஓர் இளம்பெண்ணின் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். அவர்களில் யாரைத் தேர்வு செய்கிறாள் அவள்? மீண்டும் அவளது பயணம் யாருடன்? இவர்கள் மூவரையும் ஒதுக்கி, தனிப் பயணம் தொடங்கும் புரட்சிகர மாது இவள்… மகனுடனான உறவை அறுத்து உடன் செல்கிறாள் இவளது முன்னாள் கணவனின் அன்னை. இவர்களது எல்லைகளை சுயநல ஆண்களால் வரையறுக்க இயலாது…

கெட்டிஸ்பர்க் உரையும் சிகாகோ முழக்கமும்

டாக்டர் திரு. என்.ராம் தமிழகத்தைச் சார்ந்தவர்; தற்போது லண்டன் நகரில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இவர் 2013-இல் தினமணியில் எழுதிய கட்டுரை இங்கே....

பாரதியும் பாரதிதாசனும் – 2

இற்றைக்கு நூறாண்டுகளின் முன்னர்த் தோன்றிய சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறனை ஆராயு முன்னர் அன்றைய தமிழ் இலக்கியம் எவ்வாறு இருந்தது என்பதை அறிதல் வேண்டும். மிகப் பலவாய நாடகங்களையும் கீர்த்தனைகளையும் சுவாமிகள் எழுதியுள்ளார்கள் என்று அறிகிறோம். தமிழ் நாடகத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் பலரை சுவாமிகள் உருவாக்கித் தந்துள்ளார் என்பதையும் அறிகின்றோம்....

மனிதவள மேம்பாடே அவரது இலக்கு

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆண்டுதோறும் நிகழ்த்தி வரும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிக நிகழ்ச்சியின் நிறைவு நாளான 6.1.2013 அன்று, கோவை, பாரதிய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தமது தலைமை உரையில் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பே இக்கட்டுரை.

இந்தியாவின் பழம்பெருமைகளை இளைஞர்கள் மீட்டெடுக்க வேண்டும்!

தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளரான திரு. வெ.இறையன்பு ஐஏஎஸ், திருப்பூரில் 2014-இல் நிகழ்த்திய உரையின் சுருக்கம் இது...

மகாவித்துவான் சரித்திரம்- 2(10ஆ)

இவருடைய அசெளக்கிய மிகுதியைத் தெரிந்து சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி பார்த்துவரும்படி தக்கவர்களை அனுப்பித் தெரிந்து கொண்டேயிருந்ததன்றி அடிக்கடி வந்து சொல்லும்படி எனக்கும் கட்டளையிட்டிருந்தார். அப்படியே அடிக்கடி சென்று இவருடைய நிலையைத் தெரிவித்துக்கொண்டு வரலாயினேன்.