தேனி, ஸ்ரீ சித்பவானந்த ஆசிரமத்தின் நிறுவனரான அமரர் பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காராநந்தரின் சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...
Category: கருவூலம்
எனது நினைவுகள்
சுய மரியாதையை தமிழருக்குக் கற்றுக் கொடுத்தவர் என்று தமிழகத்தில் ஒரு பெரியவரை வியந்தோதும் கூட்டம் இன்றும் உண்டு. அந்தப் பெரியவருக்கே சுய மரியாதை என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர் சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழகத்தின் குறிப்பிடத் தக்க அரசியலாளருமான திரு. கோவை அ.அய்யாமுத்து. அவரது சுயசரிதையான ‘எனது நினைவுகள்’ முக்கியமான சமகால அரசியல் வரலாறு நூல். இதோ அந்நூலில் இருந்து, அவரது நினைவுகள் இங்கே வரலாற்று ஆவணமாக...
தர்மம்
நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் அமரர் க.நா.சுப்ரமணியம் (1912- 1988). தமிழ் நவீன இலக்கியத்தின் பார்வையை, போக்கைத் தீர்மானித்த ஆளுமைகளில் முதன்மையானவர். இதனை தனது இடையறாத, சுயநலமற்ற இலக்கியப் பணிகளால் அவர் சாதித்தார். தமிழ் காத்த நல்லோரான அவர் 1944-இல் எழுதிய ‘சிறு’ சிறுகதை இது. சிறுகதை என்பது, சமூகத்துக்கு நீட்டி முழக்கும் உபதேசமாக அல்ல, போகிற போக்கில் வருடிச் செல்லும் தென்றல் போல இருக்க வேண்டும் என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்...
விவேக வாழ்வின் சுவடுகள்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியான அமரர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபிராமானந்த மகராஜ் அவர்களின் மூன்றாவது ‘விவேகானந்தம்’ கட்டுரை இது….
அகமும் புறமும்- 3அ
சமுதாயத்தை அறிய தலைவன், தலைவி, தோழி முதலியோரை வைத்து நூற்றுக்கணக்கான அகப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது ஒரு தலைவி என்போரின் பெயரை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றுகூட இல்லை. அகத்துறை பற்றி எழுந்த பாடல்களில் தலைவன் பெயர் அல்லது தலைவி பெயர் காணப்பெற்றால் அதனை அகத்துள் சேர்க்காமல் புறத்தில் சேர்த்துள்ளனர். அகத்தினைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம், 'சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறா' (அகத் திணை:57) என்று ஆணையிடுகிறதாகலின் அகப்பாடல்கள் அனைத்திலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்பெறவில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
திரைக்கதையையே கவிதையாக்கி, சோககீதம் இசைக்கிறார் கவியரசர். நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்தத் திரைக்கவிதையின் பரிமாணம் புரியும்.
பாண்டிபஜார் பீடா
தமிழின் நவீன எழுத்தாளர்களுள் முதன்மையானவர் அமரர் திரு. அசோகமித்திரன் (1931- 2017). வாழ்க்கையின் வெறுமையை பூடகமான அங்கதத்துடன், குறைந்த சொற்களில் வீரியமாக உரைத்தவர். தனது திரையுலக அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதிய சிறுகதை இது. இதில் வரும் சிட்டிபாபு யார்? அவர்தான் அசோகமித்திரனா?
எனது நோக்கில் சுவாமி விவேகானந்தர் (கவிதை)
பேரொலியும் புரட்சி வேகமும் பின்னிப் பிணைந்தாட சுவாமி விவேகானந்தரின் அசரீரி முடிந்து போகிறது; அது முடிகிற போது, ஒரு தேசம் ஆரம்பமாகிறது.- பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கவிதை...
அகமும் புறமும் -2
வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் இறுதிக் குறள் நன்கு சிந்திக்கற்பாலதாகும். வழக்கம் போலப் பின்னர் வரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாயாக மட்டும் இக்குறள் அமையவில்லை. மனித வாழ்க்கையில் அனைத்தையும் பெறுவதற்கோ, அன்றி இழப்பதற்கோ காரணமாக இருப்பது மனை வாழ்க்கைதான். மனையாள் நற்பண்புடையவளாயின், வாழ்க்கை பயன் பெறலாம்; அன்றேல், அனைத்தும் இழந்ததாகவே கருதப்படும். இது கருதியே 'மங்கலம் என்ப மனைமாட்சி' என்றார். இனி இவ் இல்வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு என்றார். அதுவும் நன்மக்கள் பெற்றால் ஒழியப் பயனாகக் கருதப் படுவதில்லை. ...
உலகத் தலைவர் விவேகானந்தர்!
முன்னாள் ஜனாதிபதி மேதகு டாக்டர் அப்துல் கலாம் 1.10.2004 அன்று கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த இல்லத்தை ஸ்ரீராமகிருஷ்ண மிஷனின் கலாச்சாரச் சின்ன நினைவகமாகத் திறந்துவைத்து உரை நிகழ்த்தினார். அந்த உரையிலிருந்து….
அகமும் புறமும் -1
தமிழ் காத்த நல்லோரில் அண்மைக்காலம் வரை வாழ்ந்த பெரியார், அமரர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் (1916- 2002). தமிழ் இலக்கியச் சுவையை உணர்த்தும் திறனாய்வுத் துறைக்கு முன்னோடியானவர். அன்னாரது நூலான ‘அகமும் புறமும்’ இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது..
நாடும் சமுதாயமும் தான் உயர்ந்தது என உணர்த்தியவர்
திரு.ஸ்டாலின் குணசேகரன், ஈரோட்டில் செயல்படும் மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பின் நிறுவனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகளுள் ஒருவர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான இளைஞர் மாநாட்டில் 12.1.2013-இல் ஸ்டாலின் குணசேகரன் பேசியதன் சுருக்கம் இது.
ஜாதிப் பாகுபாடுகளை விமர்சித்தவர் விவேகானந்தர்
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ‘பாரதிய விசார கேந்திரம்’ நிறுவனர் பி.பரமேஸ்வரன் தொகுத்த ‘விவேகானந்தரும் கேரளமும்’ என்கிற நூலின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) பேசியதன் சுருக்கம் இது…
சுவாமிஜியின் வாழ்விலே…
பத்திரிகையாளர் திரு. செங்கோட்டை ஸ்ரீராம், ‘தினசரி’ என்ற இணையதளத்தின் ஆசிரியர். அவரது தொகுப்பு இது...
விவேகானந்தரைப் போற்றும் விஞ்ஞானி
அணுவியல் விஞ்ஞானியான திரு. சத்யேந்திரநாத் போஸ் (1874- 1974), மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கண்ணோட்டம் தொடர்பாக, எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள தொகுப்புக் கட்டுரை இது…