நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

திரைக்கதையையே கவிதையாக்கி, சோககீதம் இசைக்கிறார் கவியரசர். நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்தத் திரைக்கவிதையின் பரிமாணம் புரியும்.

தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்

தொழிலாளர் நலனில் மகாகவி பாரதிக்கு இருந்த அக்கறையை வெளிக்காட்டும் கட்டுரை இது... ‘சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் செய்யும் தொழிற்சங்கங்கள், ஆங்காங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தி அவற்றில் தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வி யூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும்’ என்கிறார் இந்ந்தக் கட்டுரையில்...

இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -5

பாரதத்தின் அடித்தளம் ஹிந்து தர்மம் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவும் அறிவிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, தர்மத்தின் வரம்பற்ற வீரியம் முழுவீச்சில் வெளிப்படும். அதுவே, பாரதத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே நன்மையைத் தரும்.

பாண்டிபஜார் பீடா

தமிழின் நவீன எழுத்தாளர்களுள் முதன்மையானவர் அமரர் திரு. அசோகமித்திரன் (1931- 2017). வாழ்க்கையின் வெறுமையை பூடகமான அங்கதத்துடன், குறைந்த சொற்களில் வீரியமாக உரைத்தவர். தனது திரையுலக அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதிய சிறுகதை இது. இதில் வரும் சிட்டிபாபு யார்? அவர்தான் அசோகமித்திரனா?

ஜாதிக் குழப்பம்

“ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்த்ரம், ஸமத்வம், ஸஹோதரத்வம் என்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால், அது ஸாதாரண வேலையா?” மகாகவி பாரதியின் இதயப் பொருமலுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லையே?

எனது நோக்கில் சுவாமி விவேகானந்தர் (கவிதை)

பேரொலியும் புரட்சி வேகமும் பின்னிப் பிணைந்தாட சுவாமி விவேகானந்தரின் அசரீரி முடிந்து போகிறது; அது முடிகிற போது, ஒரு தேசம் ஆரம்பமாகிறது.- பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கவிதை...

இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -4

ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டை, நாகரிகத்தை ஒற்றை  வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அது தர்மம். தர்மம்தான் இந்த தேசத்தின் அடிப்படை. தர்மம் என்ற வாழ்வியல் விஞ்ஞானமே எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வைத்திருக்கிறது. நாம் இதுவரை இந்தக் கட்டுரையில் பேசிய முக்கிய அம்சங்களும்  ‘தர்மம்’  என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடும்.

அகமும் புறமும் -2

வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் இறுதிக் குறள் நன்கு சிந்திக்கற்பாலதாகும். வழக்கம் போலப் பின்னர் வரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாயாக மட்டும் இக்குறள் அமையவில்லை. மனித வாழ்க்கையில் அனைத்தையும் பெறுவதற்கோ, அன்றி இழப்பதற்கோ காரணமாக இருப்பது மனை வாழ்க்கைதான். மனையாள் நற்பண்புடையவளாயின், வாழ்க்கை பயன் பெறலாம்; அன்றேல், அனைத்தும் இழந்ததாகவே கருதப்படும். இது கருதியே 'மங்கலம் என்ப மனைமாட்சி' என்றார். இனி இவ் இல்வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு என்றார். அதுவும் நன்மக்கள் பெற்றால் ஒழியப் பயனாகக் கருதப் படுவதில்லை. ...

கவலைகள் பலவிதம்

வ.உ.சி. சிறை புகுந்த போது அவரது மனைவி மீனாட்சி அம்மாளின் வயது 19.  இரு மகன்கள், வயதான மாமனார், மாமியார் அண்ணனுக்கு சிறைத் தண்டனை என்று கேட்ட மாத்திரத்திலேயே சித்தம் கலங்கிப் பித்தரான கொழுந்தன்.  தான் சம்பாதித்த அளவற்ற செல்வத்தை பொதுநலன்களுக்கும், ஏழைகளுக்கும் தர்மம் வழங்கிய கொடையில் கர்ணனுக்குச் சமமான கீர்த்தி பெற்ற வ.உ.சி.யின் குடும்பம் வறுமையில் உழன்றது....

ரிஷிகள் கடன்

இந்தியக் கல்வி முறையின் தொன்மை குறித்து எஸ்.கே.தத்தர் என்ற அறிஞர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை சுதேசமித்திரனில் செய்தியாக்கி மகிழ்கிறார் மகாகவி பாரதி. எனினும் அவரது உரையில் உள்ள முரணையும் இறுதியில் சுட்டிக்காட்டுகிறார்...

இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -3

அனைத்துப் பண்பாட்டிற்கும்  தொட்டிலாக இருக்கும் பாரதியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக இருப்பது ஹிந்து சமுதாயம். எனவே, ஹிந்து சமுதாயத்திற்கு அடித்தளமாக இருப்பது எது என்ற கேள்வி அடுத்து எழுவது இயல்பே. இங்கு ஹிந்துக்கள் என்று நாம் அழைக்கும் மக்களை உருவாக்கியது எது? அதுதான் உலகளாவிய, அறிவியல் பூர்வமான, சாஸ்வதமான வேதச் சிந்தனை முறை.

உலகத் தலைவர் விவேகானந்தர்!

முன்னாள் ஜனாதிபதி மேதகு டாக்டர் அப்துல் கலாம் 1.10.2004 அன்று கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த இல்லத்தை ஸ்ரீராமகிருஷ்ண மிஷனின் கலாச்சாரச் சின்ன நினைவகமாகத் திறந்துவைத்து உரை நிகழ்த்தினார். அந்த உரையிலிருந்து….

அகமும் புறமும் -1

தமிழ் காத்த நல்லோரில் அண்மைக்காலம் வரை வாழ்ந்த பெரியார், அமரர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் (1916- 2002). தமிழ் இலக்கியச் சுவையை உணர்த்தும் திறனாய்வுத் துறைக்கு முன்னோடியானவர். அன்னாரது நூலான ‘அகமும் புறமும்’ இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது..

இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் – 2

ஒரு தேசம் அல்லது ஒரு இனம் அதன் உண்மையான வரலாற்றை, முழுமையான மகத்துவத்தை, பெருமிதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுமானால் அது உள்ளுக்குள் வலிமை பெறும்; யாராலும் வெல்ல முடியாதபடி ஆற்றலுடன் வல்லமை பெற்றுத் திகழும். எனவே வரலாற்றுக்கும் தேசம் அல்லது இனத்தின் விழிப்புணர்வுக்கும் பெருமிதத்திற்கும், நெருங்கிய, பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது.....

நாடும் சமுதாயமும் தான் உயர்ந்தது என உணர்த்தியவர்

திரு.ஸ்டாலின் குணசேகரன், ஈரோட்டில் செயல்படும் மக்கள் சிந்தனைப்  பேரவை அமைப்பின் நிறுவனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகளுள் ஒருவர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ  ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான இளைஞர் மாநாட்டில் 12.1.2013-இல்  ஸ்டாலின் குணசேகரன் பேசியதன் சுருக்கம் இது.