துணை ஜனாதிபதியாகும் தமிழர்!

நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும்  திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவால் பதவி விலகியதால், வரும் செப். 9ஆம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ஆர். மிகப் பெரும்பான்மை வலுவுடன் வென்றிருக்கிறார்.

விவேகானந்தம்- நூல் அறிமுகம்

2012-13இல் நடத்தப்பட்ட விவேகானந்தம்-150.காம் என்ற இணையதளத்தில் வெளியான அரிய கட்டுரைகளின் இனிய தொகுப்பு இந்நூல். சுவாமி விவேகானந்தரின் பன்முக ஆளுமையை விளக்கும் படைப்புகள், மூன்று தொகுதிகளாக தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலில் (தொகுப்பு: கவிஞர் குழலேந்தி) உள்ளன...

கம்பன் பிறந்த தமிழ்நாடா இது?

எனது கவலை ‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞரின் பண்பாடு பற்றியதல்ல. நமது பண்பாட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடிய தாக்குதல் இதுவென்று தெரிந்தும் மௌனமாகக் கடந்து போகும் தமிழறிஞர்கள், கம்பனின் அன்பர்களின் இயலாமை தான் என்னை வேதனை கொள்ளச் செய்கிறது.

ஹரன் விருது பெற்றார் வ.மு.முரளி

வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையமும் ஸ்ரீ டிவியும் இணைந்து நடத்திய வீரவணக்க நாள் மற்றும் சபதமேற்பு நாள் விழா கடந்த சனிக்கிழமையன்று (14.08.2025) மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளிக்கு பி.ஆர்.ஹரன் நினைவு விருது வழங்கப்பட்டது.

திரு. இல.கணேசன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

பாஜக மூத்த தலைவராக இருந்தவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான எல்.ஜி. என்கிற திரு. இல. கணேசன் அவர்கள் (80) இன்று (15.08.2025) மாலை சென்னையில் காலமானார். அவரைப் பற்றிய சில குறிப்புகள்....

விடுதலைப் போரில் அரவிந்தர்- நூல் அறிமுகம்

‘பொருள் புதிது’ இணையதளத்தில் திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதிய வரலாற்றுத் தொடர் அற்புதமான நூலாகி உள்ளது. அதுகுறித்த அறிமுகம் இங்கே...

வ.மு.முரளிக்கு ஹரன் நினைவு விருது!

ஸ்ரீ டி.வி.யின் பி.ஆர்.ஹரன் நினைவு விருது வழங்கும் விழா அழைப்பிதழ் தொடர்பான செய்தி இது...

சுதந்திரம் காக்கும் கொங்குநாடு

இந்தக் கட்டுரையின் அடிநாதம், நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த மகாகவி பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் எவ்வாறு ஒருங்கிணைந்த பாரத அன்னையின் விலங்கொடிக்க முன்னிலையில் நின்றார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது தான். அது  மட்டுமல்ல, தமிழகத்தின்  ஓர் அங்கமான கொங்குநாடு அந்த மூவரையும் எவ்வாறு அரவணைத்தது என்பதை சுட்டிக்காட்டி, நாட்டின் மனக்குரலாக கொங்குநாடு திகழ்ந்திருப்பதை எடுத்துக் காட்டுவதும் நமது நோக்கம்.

வ.வே.சு.ஐயர்: நூல் அறிமுகம்

தான் வாழ்ந்த 44 ஆண்டுக் காலத்தில், புரட்சியாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, கல்வியாளர் எனப் பல அவதாரங்களை எடுத்த இந்த மாமனிதரின் வீர வாழ்க்கையை நூலாசிரியர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் மிகவும் சுவாரசியமாகவும் எளிய நடையிலும் எழுதி இருக்கிறார். பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான வாழ்க்கை வரலாற்று நூல் இது.

சூழல் போராளியான இயற்பியல் விஞ்ஞானி

வாழ்க்கைப் பாதையில் இரு கிளைகள் பிரியும் இடம் வரும்போது பலரும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பது இயற்கை. எந்தப் பாதையில் பயணிப்பது? அப்படிப்பட்ட நிலைகளில் ஆழ்மனம் சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் ஆழ்மனம் நமது ஆசைகள், லட்சியங்கள், எண்ணங்களின் சங்கமத் திடல். இப்படிப்பட்ட நிலை இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஒருவருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் தேர்ந்தெடுத்த பாதை, சூழியலைக் காக்கும் போராட்டப் பாதை. அவர் தான், உலக அளவில் புகழ்பெற்ற இந்திய சூழலியல் போராளி வந்தனா சிவா.

இறைவனுக்கு உகந்தது தாய்மொழி வழிபாடே…

பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் முன்னாள் ஆதீனகர்த்தர் தவத்திரு சாந்தலிங்க ராமாசமி அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி, அவர் 2000ஆம் ஆண்டில் அளித்த நேர்காணல் இங்கு வெளியாகிறது....

குறிஞ்சிக் கடவுளும் கௌமாரமும்

மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

மாவீரன் பலிதானமான மண்ணில்….

ஆஷ் கொலை ஆங்கிலேய அரசை அதிர வைத்தது. வஉ.சி, திலகர், பாரதி, அரவிந்தர் போன்ற தீவிர தேசியவாதிகளை இம்சித்துவந்த ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் வாஞ்சி. அவர் உயிர்நீத்த ரயில் நிலையத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தேசிய சிந்தனைப் பேரவை களம் இறங்கியுள்ளது....

லோகமாதா ஸ்ரீ அஹில்யாபாய் ஹோல்கர்

அரசு நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்பயிற்சி, ராஜதந்திரம், மக்களை நேசித்த தன்மை என பல அம்சங்களிலும் ராணி அஹில்யாபாயின் ஆட்சி  தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கியது. படிக்க மிகவும் சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ள அவரது வாழ்க்கை வரலாற்று நூல் இது.

தேசியம் காத்த தமிழர்

தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும்,  எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.