புதுக்கவிஞர்களால் வளம் பெற்ற தமிழ்

யார் வேண்டுமானாலும் எதை எழுதினாலும் புதுக்கவிதை என்று சொல்லும் காலமாகிவிட்டது. ஆனால், கவிதை என்பதற்கு ஒரு தகுதி இருக்கிறது. அது என்ன? அதன் வரலாற்றை அறிந்தால், யாரும் கண்டபடி கிறுக்கி, தன்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.... இதோ பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் கட்டுரை.....

இலக்கணத் தமிழ் சமைத்தவர்கள்

நமது வாழ்க்கையை எவ்வாறு நாமே உருவாக்கிய சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றனவோ, அதேபோல மொழியைக் கையாள்வதில் தேவையான கட்டுப்பாடுகள் அவசியம். அதற்காக சான்றோரால் எழுதப்பட்டவையே இலக்கண நூல்கள்.

நிகண்டு, அகராதி அளித்த பெருமக்கள்

மொழியின் வளர்ச்சியிலும் கட்டமைப்பிலும் பேரிடம் வகிக்கும் இந்த நிகண்டுகளும் அகராதிகளும் தமிழின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி உள்ளன. சொற்களை அழியாமல் காக்கும் கருவூலங்களாக இவை விளங்குகின்றன....

சித்திரக் கவியும் கவிஞர்களும்

சென்னையில் வாழும் பா.சு.ரமணன், எழுத்தாளர். பல ஆன்மிக நூல்களை எழுதி இருக்கிறார். தமிழ் மொழியில் உள்ள சிறப்பு இலக்கிய வகையான ‘சித்திரக்கவி’ குறித்த அன்னாரது இனிய கட்டுரை இங்கே…

பௌத்தம் வளர்த்த தமிழ்

தமிழின் தொன்மையிலும் செழுமையிலும் வைதீக சமயத்தினரும் சமணரும் பெரும் பங்களித்தது போலவே பௌத்தர்களும் பாடுபட்டுள்ளனர். இன்றைய நமது பாரதப் பண்பாடு, இந்த மூன்று சிந்தனைப் பள்ளிகளிடையிலான உரையாடலின் விளைவே.தமிழ் இலக்கியங்களில் பௌத்தர்களின் பங்களிப்பு சமணர்களுடன் ஒப்புநோக்கக் குறைவே எனினும், அவர்களது சமயப் பிரசாரத்தால் மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

சமணம் வளர்த்த தமிழ்

அக்காலத்தில் சமணரும் சனாதனத்தின் ஒரு பிரிவாகவே இயங்கினர். வைதீகமும் சமணமும், பௌத்தமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக்கொண்டு கலைகளையும் கல்வியையும் வளர்த்தன. இந்த மூன்று சிந்தனைகளிடையிலான வாதங்களும் உரையாடல்களுமே பாரத ஞானக் கருவூலங்களாக இன்றும் விளங்குகின்றன.

சைவம் வளர்த்த தமிழ்

பத்திரிகையாளரான நெல்லைச் சொக்கர், சைவநெறியில் தோய்ந்தவர். தமிழைச் செழுமைப்படுத்தியதில் சைவத் திருமுறைகளின் பங்களிப்பை இக்கட்டுரையில் பதிவு செய்கிறார் சொக்கர்...

சமஸ்கிருதத்தால் அல்ல, ஆங்கிலத்தால்!

தமிழகத்தில் அடிக்கடி சமஸ்கிருதத்துக்கு எதிராக முழங்குவது, எளிய அரசியல் உத்தியாகத் தொடர்கிறது. அந்த மேதாவிகளுக்காகவே இதனை எழுதி இருக்கிறார் கட்டுரையாளர்.

மொழிகளில் பேதம் எதற்கு?

இதுவே ஹிந்துப் பண்பாட்டின் சிறப்பு. பலவித மொழிகளாகிய ரத்தினங்களை ஹிந்து தர்மம் என்ற ஒற்றை நூலே மாலையாகக் கோர்த்திருக்கிறது. இந்த மணிமாலையின் அழகு ஜுவலிக்கிறது; கிறங்கச் செய்கிறது. இந்த மணிமாலை புனிதமானது; நமது சிறப்பை வெளிக்காட்ட அணிவதற்கானது; உலகம் போற்றும் பண்பாட்டின் சின்னமானது. எதையும் உணரும் அறிவின்றிப் பிய்த்தெறியும் குரங்குகளுக்கு இதன் அருமை புரியாது. எனவே இந்த மணிமாலையைப் போற்றிப் புரக்க வேண்டியது நம் அனைவர்தம் கடமை.

மொழிகளிடையே போட்டியோ, பேதமோ தேவையில்லை; அதேசமயம் தாய்மொழியை மறத்தல் போலப் பாவம் பிறிதில்லை. எந்த ஒரு மொழியும்- அது ஆங்கிலமோ, ஹிந்தியோ, வேறெந்த மொழியோ ஆயினும்- நமது ஞானத்தின் திறவுகோல். எனவே, எத்துணை மொழிகள் கற்றாலும் நல்லதே. அப்போதுதான் நமது இலக்கியச் செல்வங்களைப் பகிர்ந்து உலகை மேம்படுத்த இயலும். நமது தாய்மொழியை பிழையறக் கற்போம்; ஞானத்தை வசப்படுத்த பிற மொழிகளும் கற்போம்! நமது பண்பாட்டைக் காத்த பேரருளாளர்கள் போல, நாமும் மொழிகளிடையே இணக்கம் கண்டு, இலக்கியச் செழுமை வளர்ப்போம்!  இனிய பாரதம் காப்போம்!