பாஞ்சாலி சபதம்- 1.1.7

இளையவர் வழிதவறுகையில் அவர்களை அறிவுறுத்தி வழிநடத்துவதே பெரியோரின் இயல்பு. மாறாக, பொறாமைத் தீயில் வேகும் மருகன் துரியோதனனை மேலும் வீழ்ச்சி அடையச் செய்யும் வகையில் சூதாட்ட உபாயம் கூறுகிறான் தாய்மாமன் சகுனி. அதனை ‘நல்ல இங்கிதம்’ என்று கூறி கட்டித் தழுவுகிறான் துரியோதனன். தீயோர் சொல் முதலில் இனிக்கும்; பின்னர் கசக்கும் என்பது தானே உலக வழக்கம்?

பாஞ்சாலி சபதம்- 1.1.6

இந்திரப்பிரஸ்தத்தில் (இன்றைய தில்லி) தனது தாயாதி சகோதரனான யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யாகம் அவனுக்கு சக்கரவர்த்தி பட்டத்தைப் பெற்றுத் தந்தது. அது அஸ்தினாபுரத்தை ஆண்ட துரியோதனனுக்கு அழுக்காறாமையை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவன் தனது நிழலாகக் கருதும் தனது தாய்மாமனிடம் பொறாமையுடன் உரைத்தவையே இங்கு மகாகவி பாரதியால் அழகிய கவிதைகளாக வடிவெடுத்திருக்கின்றன...

பாஞ்சாலி சபதம் – 1.1.5

ராஜசூய யாகம் நடத்தி தன்னை நாட்டின் சக்கரவர்த்தியாக அறிவித்துக் கொண்ட யுதிஷ்டிரனுக்கு பாரதம் முழுவதும் ஆண்ட முடியுடை வேந்தர்கள் செய்த மரியாதை, அவனது தாயாதியான துரியோதனனுக்குப் பொறுக்கவில்லை. அஸ்தினாபுரத்திலிருந்து துரத்தினாலும், தனிநகரை அமைத்து ஆளும் பாண்டவர்களின் திறனைக் கண்டு வயிறெரிகிறான் துரியன். அவனது புலம்பலை கவிதையாக்கி, ‘பாஞ்சாலி சபதம்’ காப்பியத்துக்கு வித்திடுகிறார் மகாகவி பாரதி.

காந்தாமணி

காதலின் புகழ் குறித்து தனிக் கவிதைகளே (பாரதி அறுபத்தாறு- 49-53) எழுதியவர் மகாகவி பாரதி. காதல் என்பது கண்ணுக்குத் தெரியாத கடவுளின் அருள் என்பதே அவரது பார்வை. வயது, மதம், மொழி, பிரதேச வேறுபாடுகள் காதலுக்கு ஒருபொருட்டாக மாட்டாது என்பதை இக்கதையிலும் வெளிப்படுத்தி இருக்கிறார் பாரதி, தனக்கே உரித்தான குறும்பான மொழிநடையில்…

பாஞ்சாலி சபதம் -1.1.4

காப்பிய இலக்கணப்படி, ஹஸ்தினாபுர மன்னனை மகாகவி பாரதி அறிமுகம் செய்கிறார் இந்தப் பகுதியில்... துரியோதனன் இக்காப்பியத்தின் எதிர்நாயகன் ஆயினும் அவனது வல்லமையை எடுத்தியம்புகிறார் கவி.

பாஞ்சாலி சபதம் – 1.1.3

குருவம்சம் ஆண்ட ஹஸ்தினாபுரத்தின் சிறப்பை வர்ணிக்கும் பாடல்களுடன் பாஞ்சாலி சபதத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி. காப்பிய இலக்கணத்தின்படி, ஊர்ச் சிறப்புடன் தொடங்குதல் மரபு.

பாஞ்சாலி சபதம் – 1.1.2

பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி வந்தனப் பாடல் இது...

விவேகானந்த பரமஹம்சமூர்த்தி

தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, பாரதத்தின் ஞான ஒளியாம் சுவாமி விவேகானந்தருக்குச் சூட்டிய அற்புதமான புகழாரம் இக்கட்டுரை.‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்’ என்பதை உலகம் அறியும்- என்கிறார் இக்கட்டுரையில்...

பாஞ்சாலி சபதம் – 1.1.1

பாஞ்சாலி சபதம் காப்பியத்தின் முதல் பாகம், பிரம்ம ஸ்துதியுடன் தொடங்குகிறது...

பாஞ்சாலி சபதம் – முகவுரை

பழம்பெரும் இதிகாசமான மகாபாரதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, பெண்ணுரிமைக் காப்பியமாக தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே ‘பாஞ்சாலி சபதம்’. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த அற்புதமான படைப்பு இது. இலக்கிய நயமும் கவிநயமும் கொண்ட இனிய கவிதைகளால் அமைந்த காப்பியம் இது. ‘பாஞ்சாலி சபதம்’ இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் முதல் பாகத்தில் - சூழ்ச்சி சருக்கம், சூதாட்டச் சருக்கம், இரண்டாம் பாகத்தில் அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களில் 412 பாடல்கள் உள்ளன. இந்நூல் நமது தளத்தில் தொடராக வெளியாகிறது...

ஸ்வாமி விவேகாநந்தரின் தேசபக்தி

மகாகவி பாரதி,  தான் நடத்திய இந்தியா பத்திரிகையில் எழுதி வெளியிட்ட செய்தி இது. இந்தியா – 28.08.1906  இதழில் 5-ஆம் பக்கத்தில் இச்செய்தி வெளியாகி உள்ளது.

சந்திரத் தீவு

தனது உயரிய கனவான 'ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்தி மகாகவி பாரதி எழுதிய இந்தக் கதை, பாரதி பிரசுராலயத்தார் பதிப்பித்த கட்டுரைகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தம்முடைய தரும போதனையை இக் கதையில் வரும் கதாபாத்திரங்களான கங்காபுத்திரன், ராஜகோவிந்தன், ஸுதாமன் ஆகியவர்களுடைய உரையாடல்கள் மூலம் விளக்குகிறார், பாரதி.  

கோபந்நா

மகாகவி பாரதியின் சமூக உணர்வு, அவரை பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஊசலாடச் செய்தது. பாரம்பரியத்தில் ஊறிய பாரதிக்கு நாட்டு மக்களின் ஏழ்மையும் தேக்கமும் மிகுந்த வேதனை அளித்தன. அது அவரது கதை, கவிதை, கட்டுரைகளில் வெளிப்பட்டுக் கொண்டெ இருந்தது. அதற்கு இக்கதையும் ஒரு உதாரணம்...

தாதாபாய் நெளரோஜி

விடுதலை வீரர் தாதாபாய் நௌரோஜி காலமானபோது மகாகவி பாரதி எழுதிய இரங்கல் குறிப்பு இது. “நம்பிக்கைக்குப் பெயர் தாதாபாய் நெளரோஜி; அதற்கு மரணம் இல்லை. நம்பின காரியம் கைகூடும் என்ற வசனத்தை ஹிந்துக்கள் நம்பும்படியும் செய்வதற்காகத் தோன்றிய பெரியோர்களில் தாதாபாய் ஒருவர்” என்கிறார் பாரதி.

உள்ளிருத்த விளக்கம்

அன்னம் அமிர்தம். வைஷ்ணவர், ‘போஜனமாயிற்றா?’ என்பதற்கு ‘அமுது செய்தாயிற்றா??’ என்கிறார்கள். அன்னம் அமிர்தமென்பதே ராமானுஜருடைய சித்தாந்தம். உண்மையை நேர்மையாலே காக்க வேண்டும். ஆதலால் அன்னத்தைக் காப்பாற்றத் தெரியாதவன் மூடன்.