நாட்டிற்கு சுதந்திரம் வேண்டுமென்றால் மக்கள் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டும் என்று மகாத்மா காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று இந்திய மக்கள் நிதியை காங்கிரஸ் கட்சிக்கு அள்ளி வழங்கினர். ஆனால், அந்தத் தொகையை காங்கிரஸ் என்ன செய்கிறது? என்று இச்செய்தியில் கேட்கிறார் மகாகவி பாரதி. “ஒப்பந்தத்தில் ஒரு பாதி நிறைவேறிப் போய்விட்டது. அதாவது ஜனங்கள் பக்கத்திலே விதிக்கப்பட்ட கடமை நிறைவேறிவிட்டது. இனித் தலைவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டியதைத் தவிர வேறொன்றும் இல்லை” என்கிறார்...
Tag: மகாகவி பாரதி
மஹாமகம்
மஹாமகம் தீர்த்தாடனம் குறித்து மகாகவி பாரதி எழுதிய அர்த்தப்பூர்வமான கட்டுரை இது. 1921 பிப்ரவரி 22-இல் நடைபெற்ற கும்பகோணம் மகாமகப் பெருவிழாவை ஒட்டி இக்கட்டுரையை மகாகவி சுதேசமித்திரனில் எழுதி இருக்கிறார். மஹாமகக் குளியலை கேலி பேசும் பிற மதத்தினருக்கு தகுந்த பதிலையும் இக்கட்டுரையில் தருகிறார் பாரதி...
அடங்கி நட
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகளை (பஞ்ச வியாசங்கள்), மகாகவி பாரதி தமிழில் வழங்கி இருக்கிறார். அவற்றுள் ஒன்று இது. வங்க பாஷையில் தாகூரால் எழுதப்பெற்று, அவரது சகோதரர் சுரேந்திரநாத் தாகூரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘மாடர்ன் ரிவியூ’ பத்திரிகையில் வெளியான கட்டுரை (Modern Review – 1917 September - Thau Shalt Obey), பின்னர் மகாகவி பாரதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தாகூரின் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், சுய பகடிகள் நிறைந்த, கவித்துவம் மிகுந்த நடையை, இயன்ற வரை அக்காலத் தமிழில் வழங்கி இருக்கிறார் பாரதி.
புதுமைகள் – 2
உலக நடப்புகளை ரசமான நடையில் வாசகர்களுக்கு தெரிவிக்க ‘புதுமைகள்’ என்ர தலைப்பிலெ சில துணுக்குப் பத்திகளை மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்.அவற்றில் மற்றொன்று இது...
புதுமைகள் – 1
உலக நடப்புகளை ரசமான நடையில் வாசகர்களுக்கு தெரிவிக்க ‘புதுமைகள்’ என்ற தலைப்பில் சில துணுக்குப் பத்திகளை மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்.அவற்றில் ஒன்று இது...
மணித் திரள்
“மயிலே, மயிலே, இறகு போடு” என்றால் போடாது. வற்புறுத்தி இறகைப் பிடுங்க வேண்டும். வெறும் வாய்ப் பேச்சால் இங்கிலாந்தினிடமிருந்து நீதி பெறுதல் ஸாத்யமில்லை - என்கிறார் காளிதாசன். சுதேசமித்திரனில் 1921-இல் வெளியான செய்தித் தொகுப்பில் ஒரு திவலை இது...
பட்டணத்துச் செய்திகள்
பத்திரிகையாளன், தான் காணும், கேட்கும் நிகழ்வுகள் எதையும் செய்தியாக்கும் திறமை கொண்டவனாக இருக்க வேண்டும். அதிலும் நாட்டிற்கு நலம் விளைவிக்க தனது கருத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும் துணிவும் வாய்த்திருக்க வேண்டும். ‘மகாகவி பாரதி (காளிதாஸன் என்ற பெயரில்) அளித்த இச்செய்தி காட்டுவது இதைத் தானே?
குறிப்புகள்
சக்திதாஸன் என்ற பெயரில் சுதேசமித்திரனில் மகாகவி பாரதி எழுதிய வியாசம் இது. ஸம்ஸ்க்ருதம் குறித்த பாரதியின் கருத்து மிகத் தெளிவானது. அதுவே இந்தியாவுக்கான பொது பாஷை என்பது தான் மகாகவியின் கருத்து என்பதை இந்தப் பதிவில் காண்கிறோம்…
காலக் கண்ணாடி
“இந்தியாவிலுள்ள பத்திரிகைகள் ஐரோப்பிய, அமெரிக்கப் பத்திரிகைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள. விஸ்தாரமான செய்தி யெல்லை; ரஸமாகச் செல்லும் திறமை – இவற்றில் இந்தியாவிலுள்ள பத்திரிகைகளைக் காட்டிலும் மேற்றிசைப் பத்திரிகைகள் மிக உயர்ந்த நிலையிலிருக்கின்றன. அதிலும், இந்தியாவிலுள்ள தேசபாஷைப் பத்திரிகைகளின் நிலைமை சில அம்சங்களில் மிகவும் பரிதாபத்துக்கிடமாக இருக்கிறது” - மகாகவி பாரதி
இதன் பெயரென்ன?
லண்டனிலிருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை இந்திய விரோதமாக எழுதுவது இன்று ஏதோ புதியதல்ல, மகாகவி பாரதி காலத்திலேயே இப்படித்தான் அந்தப் பத்திரிகை செயல்பட்டிருக்கிறது. அதற்கு அப்போதே பதிலடி கொடுத்திருக்கிறார் மகாகவி...
வெறும் வேடிக்கை
ஆரிய- திராவிட இன வேற்றுமை என்ற பொய்க்கதையை கிறிஸ்தவப் பாதிரிகள் பரப்ப ஆரம்பித்த தொடக்க காலத்திலேயே அதைக் கண்டித்திருக்கிறார் மகாகவி பாரதி. இந்தியாவில் உள்ள ஜாதி பேதத்துக்கு பிராமணர்களைக் காரணமாக பிரசாரம் செய்து, பிராமணர்களுக்கும் பிற ஜாதியினருக்கும் பகையை ஏற்படுத்தும் கிறிஸ்தவ சதியை 1920-இல் எழுதிய தமது கட்டுரையில் அம்பலப்படுத்தி இருக்கிறார் இதழாளர் பாரதி... இன்றும் இதுதானே நிலைமை?
தமிழ்நாடே சரியான களம் (தமிழ் நாட்டின் விழிப்பு)
“உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி. ‘இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக மடிகிறார்களே’ யென்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு” - ஆஹா, என்னே, மகாகவி பாரதியின் உலகநேய சிந்தனை!
தொழில்
தொழில் சிறப்பு குறித்த சான்றோரின் மேற்கோள்களை முதல் பகுதியில் குறிப்பிட்டு, அதற்கு இரண்டாம் பகுதியில் விளக்கம் அளிக்கிறார் காளிதாஸன் (எ) மகாகவி பாரதி. “முயற்சி யிருந்தால் பயமில்லை. முயற்சி யுண்டானால் வெற்றியுண்டு. முயற்சி உடையவனுக்கு விடுதலை கைகூடும்” என்று அறிவுறுத்துகிறார்...
குடிப்பாங்கு
பிரிட்டனில் வெளியான ‘நியூ ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகையின் செய்தியை சுதேசமித்திரன் வாசகர்களுக்கு தமிழில் பெயர்த்து வழங்கும் மகாகவி பாரதியின் மொழித்திறனும், இதழியல் கடமை உணர்வும், அவற்றை விஞ்சும் உலக அரசியல் நுண்ணுணர்வும் நம்மை வியக்கச் செய்கின்றன. இச்செய்தியை தமிழர்களுக்கு அளிக்க, நம்மவர்கள் அரசியல் அறிவு பெறுவது அவசியம் (அப்போதுதானே சுதந்திரப் போரில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்?) என்ற எண்ணமே காரணம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டியாக வேண்டும்.
என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே
‘சக்கரவர்த்தினி’ 1906 பிப்ரவரி மாத இதழில் வெளிவந்த ‘துளஸிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.