கண்ணன் பாட்டு- 5

மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டு தொகுப்பில் 5வது கவிதை இது. கண்ணனைத் தம் மன்னனாகக் கருதிப் பாடியது இப்பாடல். ”சக்கரத்தை யெடுப்ப தொருகணம்; தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்” என்ற வரிகளில் பாரதியின் நெக்குருக வைக்கும் பெருமிதத்தைக் காண்கிறோம்...

கண்ணன் பாட்டு- 4

மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில், நான்காவது கவிதை இது. கண்ணனைத் தன் சேவகனாக்கிக் கொள்ளும் கவியின் கற்பனை வளம் இது...

கண்ணன் பாட்டு- 3

மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ பாடல்களில் மூன்றாவது கவிதை... கண்ணன் - என் தந்தை.

கண்ணன் பாட்டு- 2

மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டுகளில், “கண்ணன் - என் தாய்’ என்ற இரண்டாவது பாடல் இது...

கண்ணன் பாட்டு- 1

‘முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்படும் மகாகவியின் பாடல்கள்: கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவை. இவற்றில் கண்ணன் பாட்டு மிகவும் அலாதியானது. பக்திப் பேருவகையின் உச்சத்துக்கு இப்பாடல்கள் உதாரணம்....‘கண்ணன் பாட்டு’ என்ற தலைப்பில் பாரதியார் 23 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே, கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார். ...மற்ற தலைப்புகளில் எல்லாம் ஒவ்வொரு பாட்டு வீதம் எழுதிய பாரதி, காதலன் எனும் தலைப்பில் 5 பாடல்களையும், காதலி எனும் தலைப்பில் 6 பாடல்களையும் எழுதியிருக்கிறார். ... (இப் பாடல், ’கண்ணன் - என் தோழன்’ என்ற முதல் பாடலாகும்).

பாரதியின் ‘புதிய கோணங்கி’

மகாகவி பாரதியின் தீர்க்கதரிசனக் கவிதை ‘புதிய கோணங்கி’. அவரது கவிதைகளில் பல்வகைப் பாடல்கள் பிரிவில் கடைசிப் பாடல் இது...

பாரதியின் நாட்டுக் கல்வி

வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலத்தில் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு; பாரதியின் கவிதைகளில் பல்வகைப் பாடல்கள் பிரிவில் 10வது பாடல் இது...

பாரதியின் தொழிலாளர் பாடல்கள்

மகாகவி பாரதி தொழிலாளர் நலம் குறித்து எழுதியுள்ள இரு கவிதைகள் இவை. இவற்றில் மறவன் பாட்டில் பல வரிகள் சிதிலமடைந்ததால் கிடைக்கவில்லை. பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் 8, 9 பாடல்கள் இவை....

பாரதியின் பெண் விடுதலைப் பாடல்கள்

மகாவி பாரதியின் பெண் விடுதலைப் பாடல்கள் மிக சிறப்பானவை. பாரதியின் கவிதைகளில் பல்வகைப் பாடல்கள் பிரிவில் உள்ள 4 முதல் 7 வரையிலான கவிதைகள் இவை....

பாரதியின் ‘முரசு’ பாடல்

மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் உள்ள மூன்றாவது கவிதை இது....

பாப்பாப் பாட்டு

மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் இரண்டாவதான ’பாப்பாப் பாட்டு’ கவிதை இங்கே...

புதிய ஆத்திசூடி

மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப்பாடல்கள் பிரிவில் முதலாவது கவிதை ‘புதிய ஆத்திசூடி’ இங்கே...

பாரதியின் விநாயகர் நான்மணி மாலை

மகாகவி பாரதியின் கவிதைகளில் இரண்டாவது பிரிவான பக்திப் பாடல்களில் முதல் கவிதை ‘விநாயகர் நான்மணி மாலை’. பவளம், முத்து, பச்சை, நீலம் ஆகிய நான்கு மணிகளைக் கோர்த்து ஒரு மாலையாக்கினால் எவ்வாறு இருக்குமோ அதுபோல, வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய நான்கு யாப்புக் கவிதைகள் ஒழுங்காக அமைத்து பாடப்பெறுவது நான்மணி மாலை. மகாகவி பாரதியின் இலக்கணப் புலமைக்கும், யாப்பிலக்கணத் தேர்ச்சிக்கும் அடையாளமாக விளங்குபவை இக்கவிதைகள். அது மட்டுமல்ல, இறைவனை வேண்டும்போதும், நாட்டுநலனுக்காகத் துடிக்கும் அவரது தேசப்பற்றை இப்பாடலில் நாம் காணலாம்....

பிற நாடுகள் குறித்த பாரதியின் பாடல்கள்

எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புலவனின் வழிவந்தவர் அல்லவா? அவரது உலகம் தழுவிய பார்வைக்கு, பிற நாடுகள் மீது அவர் பாடிய இந்த நான்கு கவிதைகளும் உதாரணம். அந்த நாடுகள்: 1 இத்தாலி, 2 பெல்ஜியம், 3. ரஷ்யா, 4. பிஜி தீவுகள். சுதந்திர இத்தாலியை நிறுவப் போராடிய மாவீரர் மாஜினியின் சபதம், ஜெர்மனியிடம் வீழ்ந்தாலும் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய பெல்ஜியத்துக்கு வாழ்த்து, கொடுங்கோலன் ஜாரின் அரசை வீழ்த்திய ரஷ்யப் புரட்சியால் பெருமிதம், பிஜித் தீவுகளில் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக அவதிப்படும் ஹிந்து ஸ்திரீகளுக்காகக் கண்ணீர் என்று - இக்கவிதைகளில் மகாகவி பாரதியின் அதியுயர் மானுடம் வெளிப்படுகிறது.

பாரதியின் தேசியத் தலைவர்கள் மீதான பாடல்கள்

மகாகவி பாரதி தமது அரசியல் குருவாக மதித்த பெருந்தலைவர்களை வாழ்த்திப் பாடிய பாடல்கள் இவை. ‘தேசிய கீதங்கள்’ பகுப்பில், ‘தேசீயத் தலைவர்கள்’ என்ற் உள்பகுப்பில் இடம் பெற்றுள்ள 9 கவிதைகள் இவை. அந்நாளில் தமது நலன் கருதாமல் வாழ்வையே நாட்டுக்கு அர்ப்பணித்த பெரியோரை மட்டுமே மகாகவி பாரதி பாடி இருப்பது, அவர்தம் எண்ணத் துணிவையும் கொள்கைப் பற்றையும் வெளிப்படுத்துகிறது. இதோ அக்கவிதைகள்....