அஸ்தினாபுரம் விஜயம் செய்த பாண்டவர்களை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற காட்சியை மகாகவி வர்ணிக்கும்போதே, பாண்டவர்பால் மக்களுக்கு இருந்த அன்பு புலனாகும். மன்னரையும் உறவினர்களையும் குருவையும் பிதாமகரையும் வணங்கிய பின் ஓய்வுக்குச் செல்கின்ரனர் பாண்டவர்கள், வரபோகும் துயரை அறியாமல்...
Tag: பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம் – 1.2.1
கலைகளின் கடவுளான தமிழ் வாணி அருளும் தொழில்களை இச் சிறு பாடலில் பட்டியலிட்டு வணங்கி, பாஞ்சாலி சபதத்தின் இரண்டாவது சருக்கத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.1.27
அஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஒரு சோலையின்கண் வில்விஜயன் பாஞ்சாலியுடன் தனித்திருக்கிறான். அப்போது வானில் தோன்றிய வண்ண ஜாலங்களை, இயற்கையின் வனப்புகளை வியந்து பேசுகிறான். வண்ணத் தீறல்களாய் வானம் காட்டும் அழகிய காட்சிகளை விவரிக்கும் விஜயன், பச்சை வட்டமாய் மின்னும் கதிரவனைக் காட்டுகிறான். அது ஒரு அழகிய அறிவியல் சொல்லாட்சி. இறுதியில் காயத்ரி மந்திரத்தின் தமிழ் வடிவை தனது கவிதையில் புகுத்துகிறார் மகாகவி பாரதி. 'செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக' என்று ஞாயிற்றைப் புகழ்கின்றனர் இருவரும். விதிவழிப்பயணம் தொடர்கிறது...
பாஞ்சாலி சபதம் – 1.1.26
அஸ்தினாபுர மன்னரின் அழைப்பை ஏற்று பாண்டவர்கள் அரசுமுறைப்படி பரிசுப்பொருள்கள், படைகள் சூழ இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பிச் செல்கின்றனர். ‘நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும்;சிற்றெறும்பால் யானை சாகும்’ என்று, இதனை மன விரக்தியுடன் சொல்கிறார் நூலாசிரியரான மககவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.1.25
தங்கள் கோபமான சொற்களுக்கு தருமன் அளித்த பதிலுரை கேட்ட தம்பியர் நால்வரும், அன்பு மிகுதியால்தான் அண்ணனிடம் வாதிட்டோம்; அண்ணன் சொல்லே தங்களுக்கு வேதவாக்கு என்கின்றனர். மூத்தவர் சொல்லை மறுக்காமல் ஏற்பது அக்கால வழக்கம் என்பதை இப்பாடலில் காட்டுகிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.1.24
பீமனைத் தொடர்ந்து விஜயனும், நகுல சகாதேவரும் தங்கள் தனையனை எதிர்த்து வாதிடுகின்றனர். இதுகாறும் அண்ணனை எதிர்த்துப் பேசியிராத அவர்கள் இவ்வாறு பேசுவது நெஞ்சம் கொதித்ததால் என்கிறார் மகாகவி பாரதி. அவற்றுக்குப் பதில் அளிக்கும் தருமன், கைப்பிடி கொண்டு சுழற்றுவோனின் லாவகத்துகேற்பச் சுழலும் சக்கரம் போன்றது மானுட வாழ்க்கை என்கிறான். “தோன்றி அziவது வாழ்க்கை” என்ற தத்துவத்தை முன்வைக்கும் தருமன், தந்தை சொல் கேட்பது ராமன் காட்டிய வழி என்கிறான்....
பாஞ்சாலி சபதம் – 1.1.23
அஸ்தினாபுரம் செல்வது என்ற தனையன் தருமனின் முடிவைk கேட்டவுடன் பீமன் கோபாவேசம் கொள்கிறான். துரியன் சூதுப்படி நாம் அஸ்தினாபுரம் செல்வதென்றால் படையெடுத்துச் செல்வோம் என்கிறான்; தம்பி அர்ஜுனனிடம் வில்லைப் பூட்டுக என்கிறான். பாண்டவர்களுக்கு சூதில் விருப்பமில்லை என்பதை மகாகவி பாரதி இப்பாடல்களில் காட்டுகிறார்... “இரு நெருப்பினிடையினில் ஒரு விறகா?” என்ற இனிய உவமையை இங்கு எடுத்தாள்கிறார்.
பாஞ்சாலி சபதம் – 1.1.22
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கை முன்வைத்து, தங்கள் பெரிய தந்தையார் மன்னர் திருதராஷ்டிரனின் அழைப்பை ஏற்பதாக அறிவிக்கிறான் தருமன். துரியன் சூது செய்யினும் மன்னரின் அழைப்பை ஏற்பது தங்கள் கடன் என்று தருமன் சொல்வதாகக் கூறுகிறார் மகாகவி பாரதி.
பாஞ்சாலி சபதம் – 1.1.21
அமைச்சர் விதுரன் தனது அரசனின் தூதையும் கடமையாகச் சொல்ல வேண்டும்; சூது நல்லதல்ல என்று அறிவுரைக்கவும் வேண்டும் என்ற இருதலைக்கொள்ளி எறும்பாகிறார். சூது நல்லதல்ல என்று மன்னர் பலமுறை கூறியும் இணங்காத துரியனின் தீய உள்ளத்தைக் கூறும் அமைச்சர், ‘இதில் நீயே முடிவெடு’ என்கிறார் தருமனிடம்....
பாஞ்சாலி சபதம் – 1.1.20
துரியனின் சூதுச் சூழ்ச்சியை அறிந்த தருமன் திகைப்படைந்து சித்தப்பனிடம் இதற்கு நீங்களே ஒரு வழி கூறுங்கள் என்கிறான். ‘வெல்லக் கடவர் எவரென்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?’ என்று வினவுகிறான்...
பாஞ்சாலி சபதம் – 1.1.19
விதுரன் தான் வந்த நோக்கத்தை நிறைவேற்ற, அஸ்தினாபுர மன்னர் திருதராஷ்டிரன் பாண்டவர்க்கு விடுத்த அழைப்பை உரைக்கிறார். கூடவே, இறுதியில் துரியனின் சூது சூழ்ச்சியையும் குறிப்பிடுகிறார்...
பாஞ்சாலி சபதம் – 1.1.18
அஸ்தினாபுர அமைச்சர் விதுரனும் தங்கள் சித்தப்பனுமான விதுரனை சகல மரியாதையுடன் வரவேற்கின்றனர் பாண்டவர்கள். மூன்று பாடல்களில் இதனை விவரிக்கிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.1.17
பாண்டவரை சூதுக்கழைக்கச் செல்லும் அமைச்சர் விதுரன், போகும் வழியில் பாண்டவர் நாட்டின் வளமையைக் கண்டு வியக்கிறார். இத்துணை சிறப்பு மிக்க நாட்டிற்கு தீது இழைக்கதானும் ஒரு கருவியாகி விட்டேனே என்று மனம் வருந்துகிறார் இப்பாடலில்...
பாஞ்சாலி சபதம் – 1.1.16
பாண்டவர்கள் - கௌரவர்களின் பொதுவான உறவு என்று சொன்னால் அவர் சித்தப்பா விதுரன் தான். அவர் அஸ்தினாபுர அரசின் அமைச்சரும் கூட. அவரையே பாண்டவரை அஸ்தினாபுரம் அழைத்து வருமாறு தூது விடுகிறார் மன்னர்; பாண்டவர்களிடம், துரியனின் தீய உள்நோக்கத்தைப் புலப்படுத்துமாறும் கூறி அனுப்புகிறார். அதன்பின் சோர்வடைந்து வீழ்கிறார். புத்திர பாசத்தால் மயங்கினாலும் நியாய உணர்வுடன் தவிக்கும் மன்னரை மகாகவி பாரதி தனது பாடலில் படம் பிடிக்கிறார்.
பாஞ்சாலி சபதம் – 1.1.15
மகனின் நிர்பந்தம் காரணமாக சூதாட்டத்துக்கு ஒப்புக்கொண்ட மன்னர் திருதராஷ்டிரன், சூதாட்டம் நிகழ்வதற்கான அழகிய மண்டபத்தை நிர்மாணிக்குமாறு உத்தரவிடுகிறார். அதன்படி அழகிய சபா மண்டபம் நிர்மானிக்கப்படுகிறது. ‘பஞ்சவர் வேள்வியில் கண்டது போலே’ மண்டபம் நிர்மாணிக்குமாறு தொழில் விணைஞர்களிடம் மன்னர் கூறுகையில், அவரது மனமும் திரிபடையத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி....