பாலும் பழமும் கைகளிலேந்தி…

கட்டிய மனைவி உடல்நலம் குன்றி இருக்கும்போது அவளைக் கண்ணும் கருத்துமாக காக்கும் மருத்துவர் கணவனாக சிவாஜி கணேசன் நடித்த அற்புதமான திரைப்படம் ‘பாலும் பழமும்’. இன்றைய தமிழ்த் திரையுலகம் பலநூறு முறை பார்க்க வேண்டிய (இம்போசிஷன்) திரைப்படம் அது. அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கவியரசரின் காவிய வரிகள் இவை...

இன்குலாப் ஜிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத்!

சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, தேசபக்தி மிளிரும் கவியரசரின் அற்புதமான திரைப்படக் கவிதை இங்கு வெளியாகிறது....

கோப்பையிலே என் குடியிருப்பு

திரையிசைப் பாடல்களில் சக்கரவர்த்தியான கவியரசு கண்ணதாசன் அவர்களின் சுய வாக்குமூலமாக ‘ரத்ததிலகம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது...

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்…

ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக எஸ்.பி. சௌத்ரியாக, ‘தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார் சிவாஜி கணேசன். படத்தை இயக்கிய மாதவன், திரைக்கதை வசனம் எழுதிய மகேந்திரன், இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் தொழில்பக்தியையும் எடுத்துக்காட்டிய திரைப்படம் அது. காவல் பணியில் நேர்மையாக இருந்த சௌத்ரியின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடும் மகன் பிற்பாடு இளம் குற்றவாளியாகி விடுகிறான். அவன் வீடு திரும்புகையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை. தந்தையின் கண்டிப்புக்கும் மகனின் வீம்புக்கும் இடையிலான தாயின் பாசப் போராட்டத்தை கே.ஆர்.விஜயா அற்புதமாகக் காட்டி இருப்பார். “ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்” என்பது போன்ற நம்ப இயலாத, முட்டாள்தனமான நாயக வசனம் பேசாத காவல் துறை அதிகாரியாக சிவாஜி இப்படத்தில் மிரட்டி இருப்பார். அதனால் தான் இப்படம் இன்றும் முன்னுதாரணமாகப் பேசப்படுகிறது. உறவுகளின் சிக்கலில் சின்னாபின்னமாகிறது சௌத்ரியின் குடும்பம். இறுதியில் மனம் திருந்தாமல் தேசத்துரோக்க் குற்றத்தில் ஈடுபடும் தனது மகனை தானே சுட்டுக் கொல்கிறார் எஸ்.பி. சௌத்ரி. அதற்காக அரசின் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்படுகிறது. படம் பார்க்கும் நமக்கு கண்களில் நீர் திரையிடுகிறது. இத் திரைப்படத்தில், தனது மகனின் பிறந்த நாளில் அன்னையும் தந்தையும் பாடும் இனிய பாடல் இது. திரைக்கதையின் ஓட்டத்தை உணர்ந்து, விதியின் பாதையை பூடகமாகக் கூறிவரும் பாடலும் கூட. அன்னையும் தந்தையும் எத்துணை பாசத்துடன் தனது மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கனவாகக் காண்கிறார்கள் என்பது இப்பாடலில் காட்டப்படும்போதே, பின்னாளில் நிகழ உள்ள அபத்தமான திருப்பங்கள் நமக்குப் புலப்படத் துவங்கும். கவியரசு கண்ணதாசனின் இனிய திரைப்பாடல்களுள் ஒன்று இது. 

அமைதியான நதியினிலே ஓடும்…

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது... நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது....

வீடுவரை உறவு…

பாதகாணிக்கை திரைப்படத்தில் கவியரசர் எழுதிய, சோகம் கலந்த அற்புதமான தத்துவப் பாடல்...

நினைக்கத் தெரிந்த மனமே…

காதலனைப் பிரிந்த பெண்ணின் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் எளிய பதங்கள்... அதில் புதைந்திருக்கும் உண்மையான அன்பின் சோகம், காட்சிக்கு உகந்த கற்பனை வரிகள் என, கவியரசரின் மேதமை வெளிப்படும் சிறந்த திரைப்பாடல் இது...

கடவுள் அமைத்து வைத்த மேடை…

திரைப்பாடல் எழுதுவது தனிக்கலை. திரைக்கதைக்கு ஏற்ப எழுத வேண்டும்; இசை அமைப்பாளர் அளிக்கும் மெட்டுக்குப் பொருந்தவும் எழுத வேண்டும். அதில் கவித்துவத்தையும் கொண்டுவர வேண்டும். அதிலும் ரசிகர்கள் விரும்பும் வண்ணமாக சொற்கள் பிரவாகமாக வந்து விழ வேண்டும். அதில் கோலோச்சியவர் கவியரசர். இங்கு நாம் காணும் பாடல், கவியரசரின் கற்பனைவளமும், கவித்திறனும், கதை சொல்லும் பாங்கும் இணைந்த படைப்பு. அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தைப் பாரத்தவர்களுக்கு, இந்தப் பாடலின் காட்சியமைப்பும், பொருத்தமும் புலப்படும். இந்தப் பாடலைப் படிக்கும்போதுதான், நமது இன்றைய திரையுலகத்தின் தர வீழ்ச்சி மீண்டும் மீண்டும் நம்மை வேதனை கொள்ளச் செய்கிறது.

கண்ணே கலைமானே!

கவியரசு கண்ணதாசனின் கடைசித் திரைப்பாடல் இது...

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல…

அண்ணன் - தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை தனது அமரத்துவமான கவிதை வரிகளால் காவியம் ஆக்கியவர் கவியரசு கண்ணதாசன். திரைப்பாடலிலும் கூட, உயர்தரமான இலக்கியச் சுவையை வழங்க முடியும் என்று காட்டிய இப்பாடல், தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்த் திரையுலகிற்கு ஒரு நினைவூட்டும் அமுதப் பேரொளி.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

‘சுமைதாங்கி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசரின் இப்பாடல், காலத்தை வென்று ரீங்கரிக்கும் இனிய தத்துவப் பாடல்....