கண்ணனை தனது ஆண்டானாகவும் தன்னை அடிமையாகவும் கருதி பாரதி பாடும் இப்பாடல், காண மிகவும் எளிமையும் பொருளில் ஆழமும் கொண்டது...
Category: பாரதி இலக்கியம்
கண்ணன் பாட்டு – (16-21)
மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில், கண்ணம்மாவாக கண்ணனை வர்ணித்து, சிருங்கார ரசத்தில் பாடிய 6 பாடல்கள் அற்புதமான அகச்சுவை உடையவை. அவை இங்கே...
கண்ணன் பாட்டு- 15
பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில் 15 வது கவிதை- கண்ணன் - என் காந்தன்.
கண்ணன் பாட்டு – (10-14)
கண்ணனைத் தனது உள்ளங்கவர் கள்வனாக, மனங்கவர் காதலனாகக் கருதி மகாகவி பாரதி பாடும் இப்பாடல்கள் அகப்பாடலின் ஒரு வடிவம். ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில் 10 முதல் 14 வரையிலான 5 கவிதைகள் இவை...
கண்ணன் பாட்டு- 9
கண்ணனின் விஷமங்கள் அனைத்தும் குழந்தைத்தனம். அதைச் சொல்லிப் புலம்பும் குழந்தைமையின் அழகிய வெளிப்பாடே இப்பாடல். பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில் 9வது பாடல் இது...
கண்ணன் பாட்டு- 8
பெண்குழந்தையைப் பெற்ற தந்தையர் பாக்கியவான்கள். தனது குழந்தையை தந்தை முத்தமிட்டு, சீராட்டி மகிழ்வது ஒரு தெய்வீக அனுபவம். இதையே கண்ணன் பாட்டு தொகுப்பில் எட்டாவது கவிதையான ‘கண்ணம்மா - என் குழந்தை’ என்ற பாடல் காட்டுகிறது. இப்பாடல் திரையிசைப் பாடலாக பலகோடி மக்களைக் கவர்ந்த பாடல் என்பது கூடுதல் தகவல்...
கண்ணன் பாட்டு- 7
கண்ணனை சற்குருவாக வரித்த பாரதி, ஆரம்பத்தில் இந்த சற்குரு தகுதியானவர் தானா என்று தடுமாறுகிறார். ஆனால், மாசை நீக்கும் குருவுக்கு சீடனின் மனக் குழப்பம் தெரியாதா? சற்குரு சீடன் பாரதியை வசப்படுத்தி வழிப்படுத்துகிறார். அதுவே இக்கவிதை... கண்ணன் பாட்டு தொகுப்பில் ஏழாவது கவிதை...
தமிழருக்கு
தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதம் மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லெளகீகக் கொள்கைகள், வைதிக நடை – எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட இடங்கொடுத்துவிட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும், வெளியிலும, தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையிருக்க வேண்டும்; உண்மையிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்ற வரை தடுக்க வேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால், தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.
கண்ணன் பாட்டு- 6
கண்ணனைத் தனது சீடனாக ஏற்ற பாரதி அவனை நல்வழிப்படுத்தும் தாபத்துடன் பலவாற்றானும் முயல்கிறார். கண்ணன் அவரிடம் பிணங்கி விளையாட்டுக் காட்டுகிறான். தெய்வத் திருவிளையாடலில் மானுடன் திகைப்பது இயல்பே அன்றோ? இக்கவிதை, பாரதியின் கண்ணன் பாட்டு தொகுப்பில் ஆறாவது பாடல்....
கண்ணன் பாட்டு- 5
மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டு தொகுப்பில் 5வது கவிதை இது. கண்ணனைத் தம் மன்னனாகக் கருதிப் பாடியது இப்பாடல். ”சக்கரத்தை யெடுப்ப தொருகணம்; தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்” என்ற வரிகளில் பாரதியின் நெக்குருக வைக்கும் பெருமிதத்தைக் காண்கிறோம்...
கண்ணன் பாட்டு- 4
மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில், நான்காவது கவிதை இது. கண்ணனைத் தன் சேவகனாக்கிக் கொள்ளும் கவியின் கற்பனை வளம் இது...
கண்ணன் பாட்டு- 3
மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ பாடல்களில் மூன்றாவது கவிதை... கண்ணன் - என் தந்தை.
கண்ணன் பாட்டு- 2
மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டுகளில், “கண்ணன் - என் தாய்’ என்ற இரண்டாவது பாடல் இது...
பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-3
பிரிட்டனில் தொழிலாளர் கட்சித் தலைவராக இருந்தவர் ராம்சே மெக்டொனால்ட்; 1929- 1935இல் அந்நாட்டுப் பிரதமர் ஆனவர். 1914-இல் அவர் எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தபோது, இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு மககவி பாரதி எழுதிய கடிதம் இது. இக்கடிதம் ‘தி ஹிண்டு’ பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. பிரிட்டீஷ் இந்தியாவிலிருந்து தப்பி பாண்டிச்சேரி செல்ல வேண்டிய கட்டாயம் தனக்கு ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும், தன்னை பொய்வழக்குகளில் கைது செய்யத் துடிக்கும் பிரிட்டீஷ் இந்திய அரசு குறித்தும் இக்கடிதத்தில் பாரதி குறிப்பிட்டிருக்கிறார். ஆங்கிலேய அரசுக்கு கடிவாளமாக இருக்கக் கூடிய தொழிலாளர் கட்சித் தலைவரின் கவனத்துக்கு இந்த விஷயங்கள் செல்லுமானால் நற்பயன் கிடைக்கும் என்று மகாகவி பாரதி நம்பியிருப்பதை, கடித வாசகங்கள் காட்டுகின்றன. அந்நிய ஆட்சியை எதிர்த்து, பிரிட்டீஷார் தலையிட இயலாத பாண்டிச்சேரியில் அரசியல் அடைக்கலம் புகுந்த நிலையிலும், பாரதி சுதந்திர தாகத்துடன் தனது எழுத்து வன்மையுடன் போராடியதற்கான சான்றே இக்கடிதம்...
நவதந்திரக் கதைகள்
கதைக்குள்ளே கதை சொல்கிற பான்மையில் அமைந்தவை இந்த நவதந்திரக் கதைகள். பஞ்சதந்திரக் கதைகளைப் போன்ற கதைப் போக்குக் கொண்டது என்றும் கொள்ளலாம். மகாகவி பாரதியின் கதை சொல்லும் வன்மைக்கு இக்கதைகள் மிகச் சிறந்த சான்று. இவை, தொடராக முதன்முதலாக ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் 10-8-1916ஆம் தேதியிட்ட இதழில் பிரசுரமாகத் தொடங்கியது. இடையிடையே சில சமயங்களில் கதைத் தொடர் பிரசுரமாகாமல் இருந்ததும் உண்டு. கதைத் தொடர் நிறைவு பெறவில்லை; 26-2-1918ஆம் தேதிய இதழோடு நின்று விடுகின்றது. இந்தக் கதைகள் 1928 ஆம் வருஷம் பாரதி பிரசுராலயத்தாரால் நூலாக்கம் செய்யப்பட்டன....