சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைப் போராட்டம் -1

சுவாமி சகஜானந்த சரஸ்வதியின் ‘என் வாழ்க்கைப் போராட்டம்’ நூலை முன்வைத்து, நூல் அறிமுகமாக மட்டுமல்லாது, அக்கால சமூக வரலாற்றையும், மூன்று பகுதிகள் கொண்ட இத்தொடரில் எழுதி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…. (இது முதல் பகுதி)…

ஆத்ம ஞான ரத்தினமும் சில சிந்தனைகளும்…

அன்றாட வாழ்வில் நமக்கு வழிகாட்டக் கூடிய, துணை நிற்கக்கூடிய வகையில், சின்ன சின்னதாக சுவாமிஜியின் 1004 உபதேச மொழிகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து வெளியிட்டுள்ளார் சுப்பிரமணிய சிவா. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1922இல் இந்த நூலைப் பிரசுரித்தவர் சை.ந.பாலசுந்தரம் என்பவர். ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, பார்க் டவுன்,  சென்னையில் அச்சிடப்பட்டு வெளியாகி உள்ளது.

முகநூலில் இரு நூல் பதிவுகள்

 ‘பொருள் புதிது’ தளத்தின் இனிய விளைவாக வெளியான இரு நூல்கள் குறித்து முகநூலில் அறிமுகம் செய்திருக்கிறார் அன்பு நண்பர் திரு. ஜடாயு. அவருக்கு நமது நன்றி!

அயோத்தி கோயில்- மேலும் இரு நூல்கள்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் தொடர்பாக அண்மையில் வெளிவந்துள்ள மேலும் இரு நூல்களை அறிமுகம் செய்கிறார் எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

ஸ்ரீ ராம ஜென்மபூமி – வெற்றி வரலாறு: நூல் அறிமுகம்

ராமருக்கு ஏன் இந்த மகத்துவம், தமிழகத்தில் ராமாயணத்தின் தாக்கம் என்று தொடங்கும் இந்த நூலில், அயோத்தி ராமர் பிறந்த இடத்தில் பாபர் காலத்தில் நடந்தது தொடங்கி இப்பொழுது அமைந்துள்ள பிரம்மாண்டமான கோயிலின் சிறப்பு வரை தொகுக்கப்பட்டுள்ளது.

சநாதன தர்மம்: ஒரு நுண்ணிய பார்வை

மேலாண்மைத் துறையில் பல நூல்களை எழுதியுள்ள பேரா. பா.மஹாதேவன், இந்திய கலாச்சாரம், சநாதன தர்மம், பகவத் கீதை போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்து, குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி இருக்கிறார். சநாதனம் குறித்த இவரது அறிமுக நூல், படிப்படியாக, சநாதனத்தின் அம்சங்களையும் சிறப்புகளையும் விளக்குவதுடன், அது குறித்த விமர்சனங்களுக்குத் தெளிவான பதில்களையும் அளிக்கிறது.

பாரதி கருவூலத்தின் அரிய வைரம்

39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த ஓர் அதியற்புத உயர் மானுடர் மகாகவி பாரதி. அதுவும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராளியாக இருந்ததால் அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகி, கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆட்பட்டு, வாழ்க்கையுடன் போராடியே குறுகிய காலத்தில் அமரரானவர் அவர். அவரது போராட்ட வாழ்வுக்கு சான்று பகர்பவையாக அவரது கடிதங்கள் விளங்குகின்றன. இந்நூலில் 23 கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. காசியில் இருந்து தனது இளம் மனைவி செல்லம்மாளுக்கு 1901இல் பாரதி எழுதிய கடிதம், ஒரு சாமானியனாக வாழத் துடித்த ஒரு சுதந்திரப் பறவையை இனம் காட்டுகிறது.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: நூல் அறிமுகம்

தமிழர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அற்புதமான தமிழ் இலக்கிய ஞானக் கருவூலங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்து, இனிய மாலை போலத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சேக்கிழான். இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், இடையறாத வன்மையையும், பரந்து விரிந்த தன்மையையும், செங்கோலின் நன்மையையும் வெளிப்படுத்துகிறது.

என்றும் வாழும் சநாதன தர்மம்: நூல் அறிமுகம்

சநாதனம் சர்ச்சையை ஒட்டி விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள அற்புதமான நூல் இது. இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறப்பு மிக்க 37 பதிவுகள், சநாதனத்தின் பன்முகத்தையும் அதன் ஒருங்கிணைந்த தன்மையையும் காட்டுகின்றன. தமிழ் கூறும் சநாதனம், சநாதனம் குறித்த சான்றோரின் அமுதமொழிகள் ஆகியவை ‘என்றும் வாழும் சநாதன தர்மம்’ நூலின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. நமது இணையதளத்தில் வெளியான கட்டுரைகள் அழகிய நூல் வடிவம் பெறுவது மிகவும் பெருமை அளிக்கிறது....

பாரதி போற்றும் தேசியக் கல்வி – பதிப்புரை

பொருள் புதிது தளத்தில் வந்த ‘பாரதி போற்றும் தேசியக் கல்வி’ தொடர் கட்டுரை தொகுக்கப்பட்டு, கோவையில் உள்ள சிவராம்ஜி சேவா அறக்கட்டளையால் நூலாக வெளியிடப்பட உள்ளது. இந்நூலுக்கு திரு. எஸ்.ஸ்ரீராம்ஜி அளித்துள்ள அணிந்துரை / பதிப்புரை இது...

நிறைசேர்க்கும் நன்முயற்சி

‘பொருள் புதிது’ தளத்தில் வெளியான மகாகவி பாரதியின் தராசு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு விஜயபாரதம் பிரசுரத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலுக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் அளித்துள்ள அணிந்துரை இது...

பாஸ்கர் ராவ்  என்னும் அற்புத ஆளுமை – நூல் மதிப்புரை

திரு. தி.ச.வைகுண்டம் எழுதியுள்ள ‘ஸ்ரீ B.பாஸ்கர் ராவ்: சங்கமென்னும் நந்தவனத்தில் பூத்த ஒரு குறிஞ்சி மலர்’ என்ற நூல் குறித்த மதிப்புரை இது. திருநின்றவூர் ரவிகுமார் தனக்கே உரிய பாணியில் இந்நூலின் அவசியத்தை விளக்கி இருக்கிறார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும் – நூல் மதிப்புரை

இந்திய சமூக வாழ்வில் பசுக்களுக்கு பிரதான இடமுண்டு. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்த அடிப்படை ஆதாரத்தின் மீது கொடூரத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக சமுதாயம் கடுமையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து போராடியிருக்கிறது. அதற்கான சான்றாவணமே  ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்’ என்னும் இந்நூல்.

வேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவானந்தர் – நூல் அறிமுகம்

சுவாமி சித்பவானந்த மகராஜிடம் சன்யாச தீட்சை பெற்ற, திருவண்ணாமலை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தின் தலைவர் யதீஸ்வரி ஸ்ரீ கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார். 55 அத்தியாயங்களில், 1,728 பக்கங்களில், 300க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன் இந்நூல் வெளியாகியுள்ளது. சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும்  விரிவாக இந்த நூல் விளக்குகிறது.

பாரதீயப் பெண்மணிகள்: ஒரு முழுமையான பார்வை – நூல் மதிப்புரை

 62 பக்கங்கள் கொண்ட சிறிய நூல் இது. ஏழு அத்தியாயங்கள் உள்ளன. வேதகாலம் தொடங்கி இன்றுவரை இந்தியப் பெண்களின் நிலையை ஒரு பருந்துப் பார்வையாகக் கூறுகிறார் நூலாசிரியர்.