மனுமுறை கண்ட வாசகம் -1

மனுநீதி சாஸ்திரம், சனாதனம் ஆகிய சொற்களைக் கேட்டாலே தமிழகத்தில் ஒரு சிலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. இந்தக் கும்பல் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருளாளர் திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளை திராவிட இயக்கத்தின் கருத்தியல் முன்னோடியாகக் கொண்டாடுகிறது. இதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. உண்மையில் திராவிடக் கருத்தியலுக்கு நேர்மாறானவர் மட்டுமல்ல, சனாதனத்தின் காவலராக அவதரித்தவர் வள்ளலார். அவர் மாணவர்களுக்கு பாடம் புகட்ட 1854-இல் எழுதிய ‘மனுமுறை கண்ட வாசகம்’ உரைநடை நூலே இதற்கு ஆதாரம். “தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ?” என்று மனுநீதி சோழன் புலம்புவதாக இந்நூலில் ஒரு காட்சி வருகிறது. தெய்வத்தை இகழ்ந்து ஆணவமாகத் திரியும் எத்தர்களுக்கு வள்ளலார் என்ற பெயரைச் சொல்லவே தகுதியில்லை.

ஜே.டி.சாலிங்கர், லியோ டால்ஸ்டாய் மற்றும் சுவாமிஜி

தில்லியில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு. சௌமிக், சுவாமி விவேகானந்தரின் வெளிநாட்டு அன்பர்கள் குறித்து 2013-இல் எழுதிய கட்டுரை இது...

இரண்டு உலகங்கள்

‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது பழமொழி. அதுபோலவே தான், மனித உணர்வுகள் அற்ற அறிவியலும் இலக்கியமும் வாழ்வின் இனிமைக்கு உதவாது என்கிறாரோ புதுமைப்பித்தன்?

தவறுகள், குற்றங்கள் அல்ல…!

தவறி விழுவது குற்றமல்ல, அதையே வாடிக்கையாகக் கொள்ளும்போது அதுவே குற்றமாகிறது. வீழ்வது தவறு என்பதை மனசாட்சிப்படி உணர்பவன் தவறிழைத்தாலும், குற்றமிழைக்க மாட்டான். தவறிழைப்பதற்கான தூண்டுதல் எங்கேனும் இருந்து வந்துகொண்டே தான் இருக்கும்; நமது மனம் தவறிழைக்கத் தயாராகாத வரை அதனால் குற்றமில்லை- என்றெல்லாம் தோன்றுகிறது, திரு. ஜெயகாந்தன் அவர்களின் இச்சிறுகதையைப் படிக்கும்போது…

ஆற்றங்கரைப் பிள்ளையார்

சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தனின் அற்புதமான உருவகக் கதை இது... 1934ஆம் ஆண்டு ‘மணிக்கொடி’ இதழில் வெளியான இக்கதை சொல்ல வருவது என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா?

பத்துமலைத் திரு முத்துக்குமரன்…

‘வருவான் வடிவேலன்’ (1978) என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அற்புதமான பக்திப் பரவசமூட்டும் பாடல் இது. இனிய சொற்களும், இனிய இசையும், இனிய குரல்களும் பக்தியுடன் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் இது…

பாரதியாரும் விவேகாநந்தரும்

புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ் மொழியைப் புகழில் ஏற்றி வைத்த கவியரசர் பாரதியார்; பாரதத் திருநாட்டின் பழம்பெரும் புகழை, அதன் பெருமையைப் பாரெல்லாம் பரவச் செய்த வீரத் துறவி விவேகாநந்தர். இவ்விருவரையும் பற்றி ‘ஓம் சக்தி’ மாத இதழில் பேராசிரியர் திரு. இரா.மோகன் எழுதிய கட்டுரை இது...

தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட துறவி

ஆங்கில நாளிதழான ‘தி பயனீர்’ 10.02.2013 தேதியிட்ட இதழில் பத்திரிகையாளர் திரு. உத்பல்குமார் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

கண்ணன் குழல்

சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தனின் சினனஞ்சிறு சிறுகதை இது. ஆனால் உட்பொருள் சிறியதல்ல...

கோபாலய்யங்காரின் மனைவி

இறந்தகாலத்தை உயிர்ப்பிக்க வல்லவன்; நிகழ்காலத்தின் எல்லையைக் கடந்தவன்; எதிர்காலத்தை எழுத்தில் வடிப்பவனே உண்மையான எழுத்தாளன். இதோ, மகாகவி பாரதி எழுதிய, முடிவு பெறாத ‘சந்திரிகையின் கதை’ நாவலின் ஒரு திவலையை தனது எழுத்தென்னும் உருப்பெருக்கியால் மீள் உருவாக்கம் செய்கிறார் சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தன்...

அகமும் புறமும் – 8 (ஆ)

கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே தோன்றினர் தமிழர்; பிற நாட்டார் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றினர் இம்மண்ணில். அந்நாட்டார்கள் சாதாரண நாகரிகம் அடையு முன்னரே தமிழர் மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டனர். இவர் பேசும் மொழியும் இவரைப் போல் தொன்மை வாய்ந்தது; எனவே, இவருடைய வாழ்வும் பண்பாடும், எண்ணமும், கருத்தும் மிகு பழமையானவை. புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை) சிறந்து விளங்கினர் என்பது சொல்லாமலே விளங்கும்.

அகமும் புறமும் – 8அ

கடமை நிறைவேற்றத்தில் உயிர் போவதாயினும் அதனை மகிழ்வுடன் ஏற்பவன் அவன் கடமையைச் செய்யாமலோ, தவறான வழியில் நடந்தாலோ, அதனால் பெருலாபம் வருவதாயினும் அதனைச் செய்ய மாட்டான். பழி வருகின்ற செயலைப் பெரியோர்கள் செய்ய மாட்டார்கள். இனி அவன் இவ்வுலகில் செய்யும் பெரிய முயற்சிகள் அனைத்தும் தனக்கு என்றில்லாமல், பிறர் பொருட்டே அமையுமாம். அத்தகையவர்கள் உள்ளமையினாலேதான் இவ்வுலகம் வாழ்கிறது என்கிறான் புலவன்....

அவதாரம்

அவதாரம் என்றால் மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். இக்கதையில், ஒருவன் கீழிருந்து மேலே செல்கிறான். மனித வாழ்வின் புரிபடாத சிக்கல்களையும் தவிப்புகளையும் பூடகமாகச் சொல்லிச் செல்லும் எழுத்தாளர், இங்கே இசக்கிமுத்துவின் மனமும் உருவமும் சிறிது சிறிதாக மாறி வருவதை அவதாரத்திற்கு முந்தைய கணங்களாக முன்வைக்கிறார். ஆன்மிக வேட்கை கொண்ட இக்கதையை புதுமைப்பித்தன் எழுதிய ஆண்டு 1947...

ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்

மானிடப் பிறப்பில் உயர்வு- தாழ்வு இல்லை. அது அவனது குனத்தில் தான் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக நிறுவுகிறது சிறுகதை வேந்தர் ஜெயகாந்தன் அவர்களின் இக்கதை. எல்லோரும் அம்மாசியாகிவிட முடியாது தான். ஆனால், மனிதம் என்ற கனவை நோக்கிய பயணத்தில் பாசஞ்சர் வண்டிகள் வந்துகொண்டே இருக்கும்.

அகமும் புறமும் – 7

நாட்டை ஆளும் மன்னன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று வரையறுத்த நம் முன்னோர், மன்னனுக்கு உறுதுணை புரியும் அமைச்சனுக்கும் உயர் இலக்கணம் வரைந்துள்ளனர். ஒரு நல்லமைச்சன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இயல்புகளை தமிழின் பழமையான இலக்கியங்கள் வழியே இங்கு முன்வைக்கிறார் அமரர் பேரா. அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்.