விதமாக, எழுத்தாளர் திரு. சேக்கிழான் எழுதிய நூல், ‘குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்’ . இந்நூலின் பகுதிகள் இங்கே தொடராக வெளியாகின்றன...
Author: vamumurali
இருக்கு ஆனா இல்லை
நாம் ஆன்மா, அதனைப் போர்த்தியிருக்கும் ஆடைதான் உடல் என்பதை உணர்வதுதான் ஞானம். இந்த ஆன்மா ‘ஏக இறைவனின் பிரதிபிம்பம்’ என்பதை அறிந்துகொள்வதுதான் பரிபூரண ஞானம்.
வாட்ராப்பும் வைத்தமாநிதியும்- 2
சரி பீடிகை போதும்… தலைப்பின் பொருளுக்கு (subject matter) வருவோம். ஆங்கிலேயனுக்கு வாட்ராப் watrap - உள்ளூருக்கு வத்திராப்பு - கற்றவனுக்கு வற்றாயிருப்பு. இப்படியாக ஒரு ஊருக்கு பல பெயர்கள் சொல் வழக்காக இருக்கலாம். பொருள் புரிந்து கொள்வோம். வாருங்கள்.
மூவர் முலையும் மூவாத் தமிழும்
தன் அரசனான கம்சனைக் கொல்லப் பிறந்தவன் கண்ணன் என்பதால் அவன் மீது கோபம் கொண்டவள் பூதனை. அதனால் கண்ணனைக் கொல்ல வேண்டும் என்ற வஞ்சனையை தன் உள்ளமெல்லாம் கொண்டவள். உடலெல்லாம் விஷத்தைப் பூசிக்கொண்டு, அழகிய தாயாக வடிவம் கொண்டு கோகுலம் வந்தாள். கண்ணனை அழைத்து முலையூட்டினாள். அவனும் பால் அருந்துவது போல் அவள் உயிரை உறிஞ்சி விட்டான்.
புத்தகக் காட்சியில்…
சென்னை புத்தகக் காட்சி நாளை (ஜன. 3) தொடங்கி, ஜனவரி 21 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து புத்தகக் காட்சிகளைப் பார்த்து வரும் இது குறித்த எழுத்தாளரின் தனிப்பட்ட பார்வை இது...
பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி
‘இலக்கிய வட்டம்’ இதழ்த் தொகுப்பில் மகாகவி பாரதி குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும், மறைந்த இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான திரு. க.நா.சு. எழுதிய கட்டுரை இது. அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்…
மாலை-2
கூடிய வரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.
மலையாளம்- 2
“தமிழ்நாட்டிலேயும் இதுபோலவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக” என்று சாஸ்திரி சொன்னார்.
மலையாளம்-1
ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு, ‘பெயரென்ன?’ என்று கேட்டார். ‘என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்’ என்று நாராயணஸ்வாமி சொன்னார். ’தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?’ என்று நம்பூரி கேட்டார். ‘ஆம்’ என்று ஸ்வாமி சொன்னார். ‘பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?’ என்று நம்பூரி கேட்டார். அதற்கு நாராயணஸ்வாமி:- ‘பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப்பட வேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை’ என்றார்.
ராகவ சாஸ்திரியின் கதை
அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:- “நான், மலையாளி என்று குப்பு சாஸ்திரியிடம் சொன்னேன். ஸம்ஸ்கிருதம் பேசுவதிலிருந்து நம்பூரி பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்று குப்பு சாஸ்திரி தாமாகவே ஊகித்துக் கொண்டார் போலும். நான் ஜாதியில் தீயன். மலையாளத்தில் தீயரென்றால் தமிழ் நாட்டில் பள்ளர் பறையரைப் போலேயாம். தீயன் சமீபத்தில் வந்தால் பிராமணர் அங்கே ஸ்நாநம் செய்து பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்” என்றார்.
தியானங்களும் மந்திரங்களும் (விடுதலைக்கு வழி)
நான் கடவுள், ஆதலால் சாக மாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.
அடல்ஜி: பாரத ரத்னம்
அடல் பிகாரி வாஜ்பாய் சிறந்த பிரதமராக மட்டுமல்ல, எடுத்துக்காட்டான எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இன்றைய எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவரது மேன்மையும் இவர்களது கீழ்மையும் தெளிவாகத் தெரிகின்றன...
வாட்ராப்பும் வைத்தமாநிதியும் -1
நடுங்கும் குளிரில், தரையில் அமர்த்தி சூடான இலவச உணவு. தங்குவதற்கு தகரக் கொட்டாய். படுக்கப் பாயாக கோணிப்பை. போர்த்திக்கொள்ள கோணிப் பையால் கோர்த்த போர்வை. ஊளையிடும் வாடைக்காற்று. உண்ட களைப்பில் உடல் கொண்ட உறக்கம் சொர்க்கானுபவம். வந்த அதிதிகளுக்கு அன்னமிட்டு, தங்க இடமளித்து அன்பு உபசரிப்பு செய்த அந்த அன்னமிட்ட கைகளுக்கு அவசியம் உண்டு சிவானுபூதி…
நெல்லிக்காய்க் கதை
ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசார்யாருக்கு ஸமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக் குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியன் முதுகிலே சுமந்து கொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.
பூந்தேனில் கலந்து… பொன் வண்டு எழுந்து…
இசையமைப்பாளர் திரு. கே.வி.மகாதேவன் அவர்களின் இறுதிக் காலத்தில் இசை அமைத்த பாடம் ‘ஏணிப்படிகள்’. அதில் இடம் பெறும், ஒரே மெட்டில் அமைந்த, ஒரே பல்லவியுடன், இரு வகையான சரணங்களுடன் கூடிய இரு பாடல்கள் இங்கே…திரைக்கதையின் போக்கிற்கு ஏற்பவும், கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையிலும், ஆண்- பெண் ஆகியோரின் இருவேறு மனக் கற்பனைகளில் கவியரசர் எழுதிய வண்ண வரிகள் இதோ…