பொய்யோ மெய்யோ?

நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்குமாம். இவற்றைத் தரும்படி தத்தம் குல தெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லாத் தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்று மூன்றிலும் தெய்வ ஒளி காண வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும். ..

ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்- 2

சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய  ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி.  அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. அந்தத் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது...

ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்-1

சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய  ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி.  அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. எனினும், இந்த இரு அத்தியாயங்களில் சுவாமிஜி குறித்த மகாகவியின் துல்லியமான பார்வையும் தெளிவான கண்ணோட்டமும் புலப்படுகின்றன. அந்தப் பகுதிகள் இங்கே, அவரது நடையிலேயே….

லால்- பால்- பால்

மகாகவி பாரதி நம்முடைய நாட்டின் பெருமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட பல பெரியோர்கள் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறார். நாம் ஏன் பண்டைய பெரியோர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அவர் ஒரு விளக்கத்தையும் தருகிறார். அது .... “அறிவுடையோரையும், லோகோபகாரிகளையும், வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப் போகும்”.

மாலை-2

கூடிய வரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.                    

மலையாளம்- 2

“தமிழ்நாட்டிலேயும் இதுபோலவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக” என்று சாஸ்திரி சொன்னார்.

மலையாளம்-1

ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு, ‘பெயரென்ன?’  என்று கேட்டார்.  ‘என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்’ என்று நாராயணஸ்வாமி சொன்னார். ’தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?’  என்று நம்பூரி கேட்டார்.  ‘ஆம்’ என்று ஸ்வாமி சொன்னார்.  ‘பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?’ என்று நம்பூரி கேட்டார். அதற்கு நாராயணஸ்வாமி:-   ‘பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப்பட வேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை’ என்றார்.    

ராகவ சாஸ்திரியின் கதை

அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:-  “நான், மலையாளி என்று குப்பு சாஸ்திரியிடம் சொன்னேன். ஸம்ஸ்கிருதம் பேசுவதிலிருந்து நம்பூரி பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்று குப்பு சாஸ்திரி தாமாகவே ஊகித்துக் கொண்டார் போலும். நான் ஜாதியில் தீயன். மலையாளத்தில் தீயரென்றால் தமிழ் நாட்டில் பள்ளர் பறையரைப் போலேயாம். தீயன் சமீபத்தில் வந்தால் பிராமணர் அங்கே ஸ்நாநம் செய்து பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்” என்றார்.      

தியானங்களும் மந்திரங்களும் (விடுதலைக்கு வழி)

நான் கடவுள், ஆதலால் சாக மாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.

நெல்லிக்காய்க் கதை    

ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசார்யாருக்கு ஸமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக் குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியன் முதுகிலே சுமந்து கொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.  

இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)

மகாகவி பாரதி ‘கலைகள்’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையைக் கீழே கொடுத்திருக்கிறோம். நாம் பல யாகசாலைகளுக்குச் சென்றிருக்கிறோம். அங்கு நடக்கும் யாகங்களைக் கண்டிருக்கின்றோம். அங்கு தீயில் ஆஹூதியிட்டு மந்திரங்கள் சொல்லி, பூர்ணாஹூதி செய்து தீபாராதனை முடியும் வரை இருந்து கண்டு மனம் மகிழ்ந்து வருகின்றோம். இங்கு பாரதி ஒரு யாகத்தைச் செய்கிறார். கண்களை மூடி அவர் இங்கு செய்யும் யாகமொன்றை மனக்கண்ணால் காண்கிறீர்கள். யாக குண்டம் வைத்து, அதில் அக்னியை மூட்டி, கணபதியை வணங்கிப் பின்னர் பஞ்ச பூதங்களை வேண்டி, அந்தத் தீயில் தேன் முதலான பண்டங்களை இட்டு மந்திரங்களைச் சொல்லி நடைபெறும் அந்த யாகத்தில் என்ன வேண்டப்படுகிறது. அந்த மந்திரங்களின் பொருள் என்ன? சிந்தனையை ஓட்டுங்கள். பாரதியின் வாசகங்கள் மட்டும் காதில் விழுந்து கொண்டிருக்கட்டும். யாகத்தின் வேண்டுதல் என்ன? நமக்குப் புரியும் பைந்தமிழில்தான் அவனது வேண்டுதல்கள் இருக்கின்றன. அவற்றைப் படியுங்கள். இது குறித்து ஓர் அரிய செய்தி. பாரதி, மகான் அரவிந்தரிடம் ‘ரிக் வேதத்தில்’ பல ஸ்லோகங்களுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டவர் என்றும், ‘ரிக் வேதம்’ பழமையான வேதம் மட்டுமல்லாமல், இயற்கையை வணங்கும் பல ஸ்லோகங்களைக் கொண்டது என்றும் பெரியோர் சொல்வார்கள். ஆனால் கீழ்வரும் வசனங்கள் அந்த ரிக் வேத மந்திரங்களின் கருப்பொருளா என்பது நமக்குத் தெரியவில்லை. - இது பாரதி இலக்கிய பயிலரங்கின் நிறுவனர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் முன்னுரை....

சித்தக் கடல்

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆத்மா நீ! உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா? … தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் -  உன்னை எப்படிப் பாடுவேன்?

கவி, போத்தன்னா என்ற தெலுங்கக் கவிராயர், கம்பர், திருவள்ளுவர், இளங்கோ

பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும், அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடிய வரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்?        

டிண்டிம சாஸ்திரியின் கதை

கதை சொல்வது போல சரித்திர நிகழ்வுகளையும் சமூக அவலங்களையும் வாசகர் மனதில் பதிய வைப்பது மகாகவி பாரதிக்கு கைவந்த கலை. அவரது தராசுக் கடை, வேதபுரத்து அனுபவங்கள் போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்கள். இதோ, வேதபுரக் கதையாக ஒரு செய்தி அனுபவம்...

தமிழின் நிலை    

தெலுங்கர், மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ்நாட்டிற்கு விளையவில்லை.