மகாகவி பாரதியின் படைப்புகளில் மிகவும் முக்கியமான தொகுப்பு, பாரதியின் கருத்துப் படங்கள் என்ற இந்த அற்புதமான தொகுப்பாகும். ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி அறிமுகம் செய்த கருத்துப்படங்கள் குறித்த விவரங்களுடன், அரிதின் முயன்று சேகரித்த கருத்துப்படங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.
Tag: சேக்கிழான்
கருணைமிகு திருக்கருவையம்பதி- இனிய தொகுப்பு
கரிவலம்வந்தநல்லூரின் தலப்பெருமைகள், இத்தலம் குறித்து எழுதப்பட்ட இலக்கியங்கள் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ள இனிய நூல், ‘கருணைமிகு திருக்கருவையம்பதி’. திருக்கருவையம்பதி என்பது கரிவலம்வந்தநல்லூரின் இலக்கியப் பெயர். தங்கள் ஊர் சிவன் கோயிலின் பாரம்பரிய வரலாற்றையும் தற்போதைய நடைமுறைகளையும் சீராகத் தொகுத்து அளித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
தேர்தலில் செலுத்தப்படும் வாக்கு… தேசத்தை வலிமைப்படுத்தும் ஆயுதம்!
தற்போது, கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்கிறது. இந்த ஆட்சியை சீர்தூக்கிப் பார்த்து மீண்டும் ஆட்சி தொடர வாக்களிப்பதா, அல்லது, மாற்று ஆட்சியை எதிர்க்கட்சிகளாகச் செயல்படும் இண்டியா கூட்டணியிடம் ஒப்படைப்பதா என்ற கேள்வி இப்போது நம் முன் இருக்கிறது.
அறிவுப்பயணம் தொடர்கிறது…
‘விஜயபாரதம் பிரசுரம்’ வரும் புத்தாண்டன்று சென்னையில் இன்று (14.04.2024) நடத்தவுள்ள ஆண்டுவிழா- பாரதி விருது வழங்கும் விழாவில் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது...
பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை
சந்தனம் தன்னைத் தேய்த்து நறுமணம் வழங்குவது போன்றது சகோதரி நிவேதிதையின் தியாக வாழ்க்கை. பெயருக்கு ஏற்றபடியே, பாரதத்தின் எழுச்சிக்காக அவர் நிவேதனமானார். இன்று நாடு நாடுவதும் நிவேதிதை போன்ற இளம் பெண் சிங்கங்களையே!
ஒருபொருட் பன்மொழியும் சோறும்
திருமண விருந்து பந்திகளிலும் உணவகங்களிலும், மிகவும் சாதாரணமாக “ஒயிட் ரைஸ் கொண்டாருங்கள்” என்ற சொல்லாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதென்ன ஒயிட் ரைஸ்? வெள்ளை அரிசி? வேகவைக்கப்பட்ட அரிசியைத் தான் நாம் நாகரிகமாக (?) குறிப்பிடுகிறோம். உண்மையில் இதற்கு அழகான தமிழ்ப் பெயர் இருக்கிறது.
ஈ.வெ.ரா. குறித்த நேருவின் கடிதம்
“ஈ.வெ.ரா.வை பைத்தியகார விடுதியில் வைத்து (மனநல மருத்துவமனை) சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்று முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவே அன்றைய தமிழக முதல்வர் காமராஜருக்கு கடிதம் எழுதி இருப்பதை இன்றைய காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் அறிந்துள்ளனரா என்பதும் சந்தேகமே. அவர்கள் (இந்தியா கூட்டணிக் கட்சிகள்) அறிவதற்காகவே, முதல் பிரதமர் திரு. நேருவின் கடிதம் இங்கு பதிவிடப்படுகிறது....
சநாதன தர்மம்: ஒரு நுண்ணிய பார்வை
மேலாண்மைத் துறையில் பல நூல்களை எழுதியுள்ள பேரா. பா.மஹாதேவன், இந்திய கலாச்சாரம், சநாதன தர்மம், பகவத் கீதை போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்து, குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி இருக்கிறார். சநாதனம் குறித்த இவரது அறிமுக நூல், படிப்படியாக, சநாதனத்தின் அம்சங்களையும் சிறப்புகளையும் விளக்குவதுடன், அது குறித்த விமர்சனங்களுக்குத் தெளிவான பதில்களையும் அளிக்கிறது.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 7
இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பிவந்த அகதிகளின் மறுவாழ்வுக்காக நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருப்பதுதான் 2019ஆம் வருடத்திய குடியுரிமை திருத்தச் சட்டம். அந்த அகதிகள் கோருவது சுயமரியாதையுடன் வாழ்வதற்கான குடியுரிமை மட்டுமே. அவர்கள் நமது பூர்வீக குடிமக்களும் கூட. அவர்களுக்கான உரிமையை அளிக்கிறது நாட்டு மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசு. அதனைத் தடுக்கவோ, குறை கூறவோ, கண்டிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 6
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா-2019க்கு டிச. 12இல் ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அதையடுத்து அன்றே இந்த சட்டம் (CAA) அமலாகி விட்டது. தற்போது, இந்தச் சட்டமானது, மக்களால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகிவிட்டது. இதை மீறுவதும், விமர்சிப்பதும் ஜனநாயகத்தையே அவமதிப்பதாகும்.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 5
பிரிக்கப்படாத பாரதத்தில் அன்று நாடு முழுவதும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சார பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. அந்த நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், இந்தியாவில் இருந்த கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. எனவே, முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கலாம் என்றும், இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்றும் இந்திய அரசு அறிவித்தது....
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 4
இதுவரை ஆறுமுறை திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது இந்திய குடியுரிமை சட்டம். ஆறாவது திருத்தம் தான் மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பி வந்த அகதிகளின் நிலைக்காக வருந்தி இருக்கிறது. இதனை மதச்சார்பின்மை பேசும் சிலரால் ஏற்க முடியவில்லை. அவர்கள், இதனை சட்டப்பூர்வமானதல்ல என்றும், மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள். உண்மை என்ன?
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 3ஆ
நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 15வது மக்கள்தொகை கனக்கெடுப்பு (2010-11) எடுக்கப்பட்டது. அப்போது சில தகவல்களையும் கூடுதலாக அரசு திரட்டியது. அதன் அடிப்படையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2010இல் உருவாக்கப்பட்டது. National Population Register- NPR என்பதே இந்தப் பதிவேடு ஆகும். அதாவது இந்தப் பதிவேடு இந்நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாக வசிக்கும், அடுத்த 6 மாதங்கள் வசிக்கப் போகிற மக்களின் பட்டியலாகும். 2015இல் இப்பதிவேடு புதுப்பிக்கப்பட்டது.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 3அ
இதுவரை நமது உண்மையான குடிமகன்களின் எந்த விவரமும் அரசிடம் தெளிவாக இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே அரசின் ஆதாரமாக உள்ளது. இதுவரையிலான பிழைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், இனியேனும் தே.கு.பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். இப்போது ஏதேனும் ஒரு அடையாள அட்டை உள்ள அனைவரும் இதில் சேர முடியும். இனிவரும் நாட்களில், புதிய பதிவேடு தயாரான பிறகு மக்களைக் கண்காணிப்பதும், அவர்களுக்கான நலத் திட்டங்களைத் தீட்டுவதும் அரசுக்கு சுலபமாக இருக்கும்.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 2
‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், அண்மையில் (டிசம்பர் 2019) நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்திய கலவரங்கள் காட்டுகின்றன....