சில ஆண்டுகளுக்கு முன்பு இச்சட்டம் குறித்து பாஜக (முன்னாள்) எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விளக்கிப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பதாவது:
Category: தொடர்
இதயம் கூடவா இல்லை?
CAA, மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களை விரைவுக்கரம் நீட்டி ஆறுதல் தருகிறது. ஏனென்றால் மத ரீதியான துன்புறுத்தல், மானமுள்ள மனிதரின் கால்களில் தார் ஊற்றுவது போல. எங்கும் நகர விடாது, எதையும் விருப்பத்துக்கு செய்ய விடாது. அதற்கு ஆறுதல் தரும் மருந்து CAA.
சி.ஏ.ஏ.: மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை
சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது மற்றும் அதன்மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் தஞ்சமடைந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பே இல்லை.
நடைமுறைக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்!
குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 நாடு முழுவதும் 2024 மார்ச் 11ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலமாக, மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு அகதிகளாக இந்தியா வந்தபோதும், பல்லாண்டுகளாக இந்தியக் குடியுரிமை பெற முடியாமல் ஏங்கித் தவித்த லட்சக் கணக்கான மக்கள் பயன் பெற வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சநாதன தர்மம் வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு- மேலும் இரு செய்திகள்
சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக உளறிய திமுகவின் இளவரசர் உதயநிதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இது தொடர்பான மேலும் இரு செய்திகள் இங்கே…
சநாதன விவகாரம்: உதயநிதிக்கு நீதிமன்றங்கள் குட்டு
சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக உளறிய திமுகவின் இளவரசர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் குட்டு வைத்துள்ளன. இது தொடர்பான இரு செய்திகள் இங்கே…
நந்தனார் சரிதம் – 6
எம்பெருமான் வந்துவிட்டார். கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இருந்து இரண்டு பக்கமிருந்தும் நான்கு கரங்கள் முளைத்து நந்தனைத் தூக்கிப்பிடித்தன. நந்தனுக்குள் ஒரு புது உத்வேகம் எழுந்தது. ஊராரின் பஞ்சாட்சர கோஷம் அவனுக்குள் ஆவேசத்தைத் தூண்டியது. நிமிர்ந்து பார்த்தபோது தென்பட்ட திரிசூல மின்னல் அவன் கண்கள் வழி பாய்ந்ததுபோல நிலை குத்திய கண்களுடன் நிமிர்ந்து நிற்கிறான். அவனுடைய உடல் இப்போது விறைத்து எழுந்திருந்தது. கால் நடுக்கம் மறைந்திருந்தது. ஒவ்வொரு அடியாக அவன் அழுந்த எடுத்து வைக்க வைக்க நெருப்புப் பொறிகள் பறக்கின்றன.
நந்தனார் சரிதம் – 5
அகல்விளக்குகள் அருகில் கொண்டு செல்லப்பட்டபோது காற்றின் அசைவினால் ஆடிய சுடரொளியில் சிலை உயிர்பெற்று ஆடியது போன்ற பிரமை! பிரமையா நிஜமா...? வீசும் காற்றும் அவனருளால்... எரியும் சுடரும் அவனருளால்... சிற்பியும் அவனருளால்... சிற்பி வடித்த சிலையும் அவனருளால்... அவனருளாலே அவன்தாள் பணிந்து உருவாக்கிய அவனது சிலை! உயிர்கொடுத்து உயிர்பெற்று அம்பலத்தில் ஆடும் ஆடலரசன்... சர்வேஸ்வரன்... தில்லையம்பதி!
நந்தனார் சரிதம் – 4
“ஆரம்பத்தில் மாமிசமும் மதுவும் எதனால் சாப்பிட்டோம் என்பது தெரியாது. ஒரு உயிரைக் கொல்வது பாவம் என்ற எண்ணம், ஒரு தாயின் மனதில் என்றைக்கோ உருவாகியிருக்க வேண்டும். அன்றிலிருந்து அந்தக் குற்ற உணர்ச்சி அரிக்க ஆரம்பித்திருக்கும். கடவுளுக்குப் படைக்கிறேன் என்று சொல்லிப் படைக்க ஆரம்பித்து, அந்தப் பிரசாதம் சாப்பிடுகிறேன் என்று குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொண்டுவிட்டீர்கள். நமக்குப் பிடிப்பவைதானே நம் தெய்வத்துக்கும் பிடிக்கும் என்று நம்பினீர்கள். அதன் பின் அதுவே பழக்கமாகியும்விட்டது. ஆனால், அவ்வப்போது குற்ற உணர்ச்சி வாட்டுகிறது. ஆக, மாமிசம் சாப்பிடாமல் இருக்கவும் முடியவில்லை. சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை. அப்படித்தானே?”
நந்தனார் சரிதம் – 3
“பழகிக் கொண்டவர்களை விடுங்கள். இப்படிப் பழக்கியவர்களைப் பற்றிச் சொல்லுங்கள். எந்த மன்னரேனும் ஏதேனும் ஒரு இழிதொழிலையேனும் மாற்ற முயற்சி எடுத்தாரா? எந்த ஐயரேனும் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருத்துவரின் கஷ்டத்தைப் போக்கினாரா? வாந்தியையும் மலத்தையும் ரத்தத்தையும் நிணத்தையும் கையால் தொட்டு சுத்தம் செய்தாக வேண்டிய கொடுமையில் இருந்து விடுவித்தாரா? எந்த வணிகராவது தீட்டுத் துணி துவைக்கும் வண்ணாருக்கு அதில் இருந்து தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தாரா? எந்தப் பண்ணையாராவது தொழில் குலத்தினராவது இறந்த அழுகிய விலங்கை அப்புறப்படுத்த வழி கண்டுபிடித்துக் கொடுத்தனரா… நம்மவர்களுக்குக் கால காலமாக இதைத் தானே செய்துவர வேண்டியிருந்தது? சின்னஞ்சிறு வயதிலேயே இந்த இழிவுக்குப் பழக்கப்படும் குழந்தைகள் அதைப் பழகிக் கொண்டு வாழ்ந்து மடிவதென்பது எவ்வளவு கேவலம்… கொடுமை. யாரேனும் ஒருவர் இதை மாற்றியிருக்கலாமே…?”
நந்தனார் சரிதம் – 2
“ஐயா… நீவிர் எத்தனைதான் குளம் வெட்டினாலும், அதில் நீவிர் குளிக்க முடியாது. என்னதான் கல் சுமந்து கோயில் கட்டினாலும் அதில் நீவிர் கால் பதிக்க முடியாது. குறுக்கே நிற்கும் நந்திகள் உம்மை எங்குமே கும்பிட விடாது.” “ஆமாம்… இந்தப் பிறவியில் அது முடியாது. அதனாலென்ன?”
நந்தனார் சரிதம் – 1
திருநாளைப்போவார் புராணத்தை புதிய நடையில் வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். கற்பனை மிகுந்த இனிய வர்ணனைகளும், நீதி உணர்ச்சி மிகுந்த மனதின் தர்க்கங்களும் நிறைந்த இந்த குறும்புதினம், சமூக ஒருமைப்பாட்டுக்கான புதிய முயற்சி…
அயோத்தியாயணம்- 11
500 வருட ரணம், இன்று ஆறியிருக்கிறது. கோடி கோடி பக்தர்களின் மனங்களில் ஆட்சி செய்த ராமபிரான், தான் பிறந்த இடத்தில் ஒரு குடிசையில் இருந்து வந்தது விதியின் பிழையா? மனித மதியின் பிழையா? எது எப்படியிருப்பினும் நம் ராமன் திரும்பினான்.
அயோத்தியாயணம்- 10
பிரிந்த கன்றைப் பார்த்த தாயாருக்கு எவ்வளவு மகிழ்ச்சி வருமோ அவ்வளவு மகிழ்ச்சி, ராமனை மீண்டும் பார்த்ததில். மாயையால் பிரிந்தவர்க்கு, ராமனைப் பார்த்த மாத்திரத்தில் பரப்பிரம்மத்தைக் கண்டது போல இருந்தது.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
கோவை சிறையில் 'வால்மேடு' பகுதியில் ஒரு வளாகத்தில் திறந்தவெளி சிறைக்கூடங்களில் நாங்கள் அடைக்கப்பட்டோம். உறங்க மட்டுமே சிறை அறைகளை தஞ்சம் புகுவோம். சிறைக்குள் தரக்குறைவான உணவு, சுகாதாரமற்ற சூழல் (கழிப்பறைகளை உபயோகப்படுத்தவே முடியாது), சிறைப்படுத்தப்பட்ட உணர்வு ஆகியவற்றை மீறி, தொண்டர்களின் ஒருங்கிணைந்த பயிற்சி முகாமாக அந்த நாட்கள் மாற்றப்பட்டன. தினமும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பாடல்கள், அளவளாவல்கள், யோகாசனம், உடற்பயிற்சிகள், சிறைக்குளேயே ஷாகா என்று, சிறை நாட்கள் கழிந்தன.