ஆலய வழிபாட்டின் அருமை பெருமை உணர்ந்தவர்களுக்கு அர்ச்சகக் குடியின் சிரமங்கள் தெரியும்; அர்ச்சகர்களுக்கு அவர்களும் உடனிருந்து உதவுவார்கள். அதற்கு பழனி ஈசான சிவாசாரியார் போன்றவர்களின் சரிதங்கள் இன்றைய தலைமுறைக்கு சொல்லப்பட வேண்டும். இவரைப் போன்றவர்களின் அரும் முயற்சியால்தான் அர்ச்சகக் குடிகளுக்குத் தேவையான சிவாகமப் பயிற்சியும் அதற்குத் தேவையான அச்சிட்ட நூல்களும் வாழையடி வாழையாகத் தொடர்கின்றன.
Month: April 2024
உருவகங்களின் ஊர்வலம் – 3
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #3
உருவகங்களின் ஊர்வலம் -2
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #2
உருவகங்களின் ஊர்வலம் -1
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன....
ரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை
வரலாற்றை மறந்தவனும் அறியாதவனும் நிகழ்காலத்தில் தவறிழைத்து எதிர்காலத்தை இழந்து விடுகிறார்கள். எனவேதான் வரலாறு முக்கியமானதாகிறது. ஆனால், நாம் பயிலும் வரலாறு உண்மையானதா? வரலாறு என்ற பெயரில் நமது கல்வி நிறுவனங்களில் புகுத்தப்படும் பல பொய்மைகளைத் தோலுரிக்கிறது, திரு. பி.பிரகாஷ் எழுதிய ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ என்ற இந்த நூல். இதுகுறித்து எழுத்தாளர் திரு. ஆமருவி தேவநாதன் தனது வலைப்பக்கத்தில் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது....
திருப்பதி திருமலை பெருமாள் கோயிலே!
சைவர்கள்- வைணவர்களிடையே பூசலை நிகழ்த்த விரும்பிய சிலரால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளுள் ஒன்று, திருப்பதி கோயில் முற்காலத்தில் முருகன் கோயிலாக இருந்தது என்பதாகும். இன்று சைவமும் வைணவமும் ஹிந்து என்ற பெருமதத்தின் கிளைகளாகிவிட்ட காலத்திலும், அவ்வப்போது இந்தப் பூசல் பெரிதுபடுத்தப்படுகிறது. இதற்கு, தெரிந்தோ தெரியாமலோ சைவர்கள் சிலரும் உணர்ச்சிவசப்பட்டு ஆதரவளித்து விடுகின்றனர். அவர்களுக்காகவே, நமது தொன்மையான தமிழ் இலக்கியங்களின் துணைகொண்டு, இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்ற பெயரில் எழுதிவரும் திரு. பி.பிரகாஷ். ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ என்ற நூலின்மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்த இவரது முகநூல் பதிவு, இங்கு மீள்பதிவாகிறது…
குருமணியின் தாள் போற்றி!
கொல்கத்தா, பேலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் இயக்கத்தின் தலைமையகத்தில், அதன் 17வது அகில பாரத தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும், பூஜ்யஸ்ரீ சுவாமி கௌதமானந்த மஹராஜ் (95) அவர்களுக்கு இசைக்கவி அவர்களின் வாழ்த்துப்பா இது...
பாரதியின் கருத்துப்படங்கள்- அற்புதமான அரிய ஆவணம்
மகாகவி பாரதியின் படைப்புகளில் மிகவும் முக்கியமான தொகுப்பு, பாரதியின் கருத்துப் படங்கள் என்ற இந்த அற்புதமான தொகுப்பாகும். ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி அறிமுகம் செய்த கருத்துப்படங்கள் குறித்த விவரங்களுடன், அரிதின் முயன்று சேகரித்த கருத்துப்படங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.
கருணைமிகு திருக்கருவையம்பதி- இனிய தொகுப்பு
கரிவலம்வந்தநல்லூரின் தலப்பெருமைகள், இத்தலம் குறித்து எழுதப்பட்ட இலக்கியங்கள் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ள இனிய நூல், ‘கருணைமிகு திருக்கருவையம்பதி’. திருக்கருவையம்பதி என்பது கரிவலம்வந்தநல்லூரின் இலக்கியப் பெயர். தங்கள் ஊர் சிவன் கோயிலின் பாரம்பரிய வரலாற்றையும் தற்போதைய நடைமுறைகளையும் சீராகத் தொகுத்து அளித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு!
பலரும் ஜெகதீசரைப் பற்றி அறியாதபோது அவரைப் பற்றி வெளிநாடுகளிலும் பாரதத்தின் சென்னை, மும்பை, தில்லி, காசி போன்ற பகுதிகளிலும் சகோதரி நிவேதிதை அவரைப் பற்றி உரை நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டும், செய்திதாள்களில் எழுதியும் அவரை முன்னிலைப்படுத்தினார்.
தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்
ஆர்.எஸ்.எஸ்.ஸினால் முழுமையாக வடிவமைக்கப்பட்டது தேவரஸின் ஆளுமை. அதேபோல ஆர்.எஸ்.எஸ்ஸின் முகத்தை மாற்றி அமைத்தவர் பாளாசாகேப் தேவரஸ். ஆர்.எஸ்.எஸ். என்றால் சீருடை அணிந்து ‘லெஃப்ட், ரைட்’ என்று சீராக அணிவகுத்துச் செல்பவர்கள் மட்டுமே என்ற எண்ணத்தை மாற்றி, ஆர்.எஸ்.எஸ். என்றால் தன்னலமற்ற சேவைக்குத் தயாரானவர்கள். Ready for Selfless Service என்று சர்வோதயத் தலைவரான திரு. பிரபாகர் ராவ் பாராட்டும் படியாக ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றத்தை, வெளிப்பாட்டை மாற்றியமைத்தவர் பாளாசாகேப் தேவரஸ்.
தேர்தலில் செலுத்தப்படும் வாக்கு… தேசத்தை வலிமைப்படுத்தும் ஆயுதம்!
தற்போது, கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்கிறது. இந்த ஆட்சியை சீர்தூக்கிப் பார்த்து மீண்டும் ஆட்சி தொடர வாக்களிப்பதா, அல்லது, மாற்று ஆட்சியை எதிர்க்கட்சிகளாகச் செயல்படும் இண்டியா கூட்டணியிடம் ஒப்படைப்பதா என்ற கேள்வி இப்போது நம் முன் இருக்கிறது.
எழுத்தாளர்கள் பத்மன், அருட்செல்வப்பேரரசனுக்கு பாரதி விருது!
சென்னையில் நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரத்தின் ஆண்டு விழாவில், தமிழ் எழுத்தாளர்கள் பத்மன் (எ) நா.அனந்தபதமநாபன், செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்பட்டது.
மீண்டும் 2012-24ஆ, அல்லது 1989-98ஆ?
பிரபல பத்திரிகையாளர் திரு. எஸ். குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி இது…
ஜனநாயகத்தாலும் முடியும்: மேற்குலகிற்கு மோடியின் செய்தி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பிரபல பத்திரிகையாளரும் ‘துகள்க்’ ஆசிரியருமான திரு. எஸ்.குருமூர்த்தி எழுதிய, இரு பாகங்கள் கொண்ட ஆங்கிலக் கட்டுரை, திரு. திருநின்றவூர் ரவிகுமார் அவர்களின் தமிழாக்கத்தில் நமது தளத்தில் மீள்பதிவாகிறது...