பகவத் கீதை- பனிரெண்டாம் அத்தியாயம்

இதுவரையிலான அத்தியாயங்களில் வில்விஜயனை சிறுகச் சிறுகச் செதுக்கிவந்த பரந்தாமன், இந்த அத்தியாயத்தில் பக்தி யோகத்தை மட்டுமே நாடுமாறு அறிவுறுத்துகிறான். “எப்போதும் மகிழ்ச்சியுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய் என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து என் தொண்டனாகிய யோகி எனக்கினியவன்” என்று வழிகாட்டுகிறான்…

பகவத் கீதை- பதினொன்றாம் அத்தியாயம்

விபூதி யோகத்தில் இறைவனின் அம்சங்களை விவரித்த கண்ன்ன், இந்த அத்தியாயத்தில் தனது விஸ்வரூப தரிசனம் காட்டி, தனது அன்புத் தோழனை பரவசம் அடையச் செய்கிறான். அப்போது, “ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள். நான் இவர்களை ஏற்கனவே கொன்றாகி விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக்காரணமாக மட்டும் நின்று தொழில் செய்” என்று விஜயனை வழிநடத்துகிறான் பரந்தாமன்…

பகவத் கீதை- பத்தாம் அத்தியாயம்

பகவத் கீதை பத்தாவது அத்தியாயம், இறைவனின் பெருமையை வியக்கும் வகையில் இறைவனே உரைப்பதாக அமைந்திருக்கிறது. ”ஒளிகளில் ஞாயிறு... ருத்திரர்களில் நான் சங்கரன்... வீரர்களுள் ராமன்... எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான்” என்கிறார் கண்ணன். இறைவனின் புகழ் பாடும் யோகம் இது…

பகவத் கீதை- ஒன்பதாம் அத்தியாயம்

“நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா! உள்ளதும் யான்; இல்லதும் யான்” என்று இந்த ஒன்பதாவது அத்தியாயத்தில் கண்ணன் கூறுகிறார். “நீ எது செய்யினும், குந்தி மகனே! கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்” என்றும் கூறுகிறார்….

பகவத் கீதை- எட்டாம் அத்தியாயம்

பிறவி, மறுபிறவி குறித்து எட்டாம் அத்தியாயத்தில் விவரிக்கும் கண்ணன் “என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை” என்று உறுதி அளிக்கிறார். அதாவது தான் கூறியபடி, பலனை இறைவனுக்கு அர்ப்பணித்து கடமையைச் செய் என்பதே இதன் உட்பொருள்....

பகவத் கீதை- ஏழாம் அத்தியாயம்

“நீரினில் சுவை நான்; தீயினில் சுடர் நான்; வேதங்களில் பிரணவம் நான்; நானே உலகம் முழுமைக்கும் ஆக்கமும் அழிவும் ஆவேன்” என்று இந்த அத்தியாயத்தில் அர்ஜுனனிடம் கூறுகிறான் கண்ணன். தனது விற்போர் திறமை மீது கொண்ட அகந்தையால் போர்க்களம் வந்த விஜயன், போர்முனையில் குழப்ப மாயையில் தவிக்கும்போது, பார்த்தசாரதி, தனது மெய்யான சொரூபத்தைக் காட்டத் தயாராகிறார். “பலன் கருதாமல் கடமையைச் செய்” என்று முந்தைய அத்தியாயங்களில் கூறியவர், இந்த அத்தியாயத்தில், ”நானே உலகின் ஆக்கமும் அழிவும் ஆவேன்” என்று கூறி அவனது அகந்தையை உடைக்கிறார்.

பகவத் கீதை- ஆறாம் ஆத்தியாயம்

முந்தைய அத்தியாயங்களில் ஞான யோகம், கர்ம யோகம், துறவு ஆகியவை குறித்து விளக்கிய பார்த்தசாரதி, இந்த அத்தியாயத்தில் ராஜயோகமான தியானத்தின் சிறப்பை விளக்குகிறார்; “யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்” என்கிறார்....

பகவத் கீதை – ஐந்தாம் அத்தியாயம்

செயலைச் செய்யாமல் துறப்பதை விட, செயலின் பலன்களைத் துறந்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதே பிறவி நோக்கம் என்கிறார் பார்த்தசாரதி, ஐந்தாம் அத்தியாயத்தில். இன்பம் - துன்பம் என்ற இருமையை நீங்கியவனே சந்நியாசி. அத்தகையவன் “விரும்பிய பொருளைப் பெறும்போது களி கொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்” என்கிறான் கண்ணன்.

பகவத் கீதை- நான்காம் அத்தியாயம்

ஞான யோகம், கர்ம யோகம் குறித்து கூறிய கண்ணன் இவ்விரண்டின் பலன்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது (சந்நியாசம்) குறித்து நான்காம் அத்தியாயத்தில் பேசுகிறான். “நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்” என்ற அமுதச் சொல் இந்த அத்தியாயத்தில் தான் முழங்குகிறது. “குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்” என்ற, தமிழகத்தில் பலரால் தவறாக விளக்கம் அளிக்கப்படும் அமுதச் சொல்லும் இந்த அத்தியாயத்தில் தான் வருகிறது....

பகவத் கீதை – மூன்றாம் அத்தியாயம்

இரண்டாம் அத்தியாயமான ஸாங்கிய யோகத்தில் ஞான (புத்தி) யோக மார்க்கத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்த கண்ணன், மூன்றாவது அத்தியாயமான கர்ம யோகத்தில், “தொழில் செய்வது மட்டுமே உன் கடமை” என்று நினைவூட்டி, போர்த்தொழில் புரியுமாறு ஏவுகிறார். இதனை  “கர்மங்களைச் செய்யும்போது, ‘இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும் ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடைய பிரீதிக்காகவே செய்கிறோம்’  என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்” என்று மகாகவி பாரதி உரைவிளக்கத்தின் உள்ளடக்கத்தில் கூறுகிறார்…

பகவத் கீதை – இரண்டாம் அத்தியாயம்

போர்க்களத்தே சஞ்சலமுடையவனாகத் தளர்ந்து அமர்ந்த தோழன் அர்ஜுனனுக்கு சாரதியாக வந்த இறைவன் அறிவுரை கூறி, அவனை போருக்கு ஆயத்தப்படுத்துகிறான். இதுவே கீதையின் தோற்ற விளக்கம். இதில் மனித இயல்பின் போராட்டங்களை விளக்கும் கண்ணனின் உபதேசம், இந்நூலை ஞான இலக்கியமாக்குகிறது. கீதையின் இரண்டாவது அத்தியாயம் ஞானம் தொடர்பான சாங்கிய யோகமாக (சாங்கியம் = ஞானம்) இயல்கிறது. மகாகவி பாரதி தனது கீதை உரைக்கு முன்னதாக சுருக்கமான விளக்கம் அளித்திருப்பதும் கவனித்தற்பாலது…

பகவத் கீதை- முதல் அத்தியாயம்

போர்க்களத்தே வில்விஜயனுக்கு மெய்ஞானம் உரைத்த கண்ணனின் உபதேசமே பகவத் கீதை. இது, மகாபாரதம் காப்பியத்தின் ஒரு பகுதியாக வருகிறது. போரின் முதல்நாள் இருதரப்பின் அணிவகுப்பை அடுத்து போ தொடங்குவதற்கு முன்னதாக, எதிர்த்தரப்பில் நிற்கும் பாட்டனார், சகோதரர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் ஆகியோரைக் கண்டு சஞ்சலமடையும் பாண்டவர் அணியின் தளபதியான பார்த்தன், ‘போர் தேவையா?’ என்று மனம் குழம்புகிறான்; தனது உற்ற தோழனும் சாரதியுமான கண்ணனிடம் வினவுகிறான். இதுவே  ‘அர்ஜுன விஷாத யோகம்’ என்ற இந்த முதல் அத்தியாயத்தின் உள்ளடக்கம் ஆகும். கீதையில் எவ்வாறு உள்ளதோ, அவ்வாறே தமிழிலும் சுலோகவாரியாக மகாகவி பாரதி, மொழிபெயர்த்துச் செல்கிறார்....

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 13)

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தை கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது....

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 11-12)

‘அஹிம்ஸா பரமோ தர்ம’: ‘கொல்லாமையே முக்கிய தர்மம்’ என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 10)

மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு - ஒரே சத்துரு - அவனுடைய சொந்த மனமேயாம். ‘தன்னைத்தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.