ஆயிரம் ஆண்டுகள் கடந்த கங்கை கொண்ட சோழபுரம்

தமிழகத்தின் பாரம்பரியச் சின்னமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட  ‘கங்கை கொண்ட சோழபுரம்’ அமைக்கப்பட்டு (1023) ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்கோயில் நகரம் குறித்து அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் தனது ’பாரதி பயிலகம்’ வலைப்பூவில் எழுதிய கட்டுரை இது…

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்       

ம.பொ.சி. - இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்ப, தமிழ்நாட்டு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி, இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை.

தியாகராஜ சுவாமிகள் வரலாறு

திருவையாறு தியாராஜ சுவாமிகளின் இனிய சரிதத்தை ஆக்கிச் சென்றிருக்கிறார், தஞ்சை பாரதி இலக்கியப் பயிலரங்கின் நிறுவன இயக்குநரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவருமான அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா. அக்கட்டுரை இது....

வீரமுரசு சுப்ரமணிய சிவா   

இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகள் வரிசையில் தமிழகத்தில் முதன்மை வகித்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார் ஆகியோர் காலத்தில் வ.உ.சி. அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடி, சிறை சென்று, தொழுநோயுடன் வெளிவந்து, அந்த நிலையிலும் கடைசி மூச்சு வரை தேசத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மகான் சுப்ரமணிய சிவா.

மகாகவி புதுவைக்குப் போனது ஏன்?

மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, அவர் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த நிகழ்ச்சி. அங்குதான் அவருக்கு அரவிந்தர், வ.வெ.சு.ஐயர் போன்ற பெரியோர்களின் தொடர்பு கிடைத்தது. அங்குதான் அவருடைய முப்பெரும் பாடல்கள் உள்ளிட்ட பல அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் உருவாயின. அங்குதான் பாரதியின் பெருமை உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது. அவர் உயிர் காத்த குவளைக் கண்ணனின் தொடர்பும் அங்குதான் கிடைத்தது.

கோபாலகிருஷ்ண பாரதி – ஓர் அறிமுகம்

இளமையிலேயே தமிழில் மேதைமை மிகுந்தவர்களுக்கு ‘பாரதி’ பட்டம் அளிக்கப்படுவது தமிழகத்தில் நிலவி இருக்கிறது. அந்த வகையில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு முன்னதாகவே ‘பாரதி’ பட்டம் பெற்றவர் கோபாலகிருஷ்ண பாரதி. அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இது.

பாரதியின் தேசியம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற கருத்துரை  (2020) நிகழ்வில் ‘பாரதியின் தேசியம்’ என்ற தலைப்பில், அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா ஆற்றிய உரையின் (அவரே தொகுத்தளித்த) கட்டுரை வடிவம் இது…

மகாகவி பாரதியின் சொல்லாட்சி

ஒரு மொழி உயிர்ப்போடு சிலிர்த்தெழ வேண்டுமானால் புதுப்புதுச் சொற்கள், புதிய புதிய இலக்கியங்கள், பிற மொழியிலிருந்து பெயர்த்துக் கொணர்ந்த புத்தம் புதிய மொழியாக்கங்கள் - இவற்றைக் கொண்டு நாளுக்கு நாள் மொழியின் கட்டமைப்பை இளமைத் துடிப்போடு வைத்திருக்க வேண்டும். அந்தப் பணியைத் தொடங்கி வைத்த பெருமை நம் மகாகவிக்கே உரித்தானது.

தமிழகத்தின் தியாகத் திலகம்!

தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றிவைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். தியாகம் என்ற சொல்லுக்குப் பொருளானவர் வ.உ.சி.

புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா

வெளிநாட்டு உதவியுடன் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை பெறத் துடித்த புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா. அவரைப் பற்றிய அமரர் தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் கட்டுரை இது....

பாரதியின் பாஞ்சாலி

வியாச முனிவரின் மூலநூலான பாரதத்தை அடியொற்றி, அதன் ஒரு பகுதியான பாஞ்சாலியின் சபதத்தை மகாகவி பாரதி கவிதையில் வடித்துத் தந்திருக்கிறான். இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டது;  எழுபத்து மூன்று தலைப்புகளைக் கொண்டது; முன்னூற்றியெட்டு பாடல்களை உள்ளடக்கியது. பாஞ்சாலியைத் தன் கதையின் நாயகியாக பாரதி தேர்ந்தெடுத்தது ஏன்? அவளை அடிமைப்பட்ட பாரத தேசத்தின் உருவகமாக, பாரத தேவியாக பாவித்ததன் விளைவா? அல்லது அடிமைப் பட்டுக் கிடந்த பெண் இனத்தை விடுவிக்க வந்த எழுச்சிக் குரலா?

ஸ்வதந்திர கர்ஜனை- 2(30)

நாமக்கல்லார் பாடியபடி  ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றி இது. இங்கு இந்த ‘கத்தியின்றி ரத்தமின்றி’ எனும் இந்தச் சொற்றொடரின் பொருள் வேறு.   நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின் மீது கத்தி வீசாமலும், அவர்களது ரத்தத்தைச் சிந்தாமலும், நம்மை வருத்தி இந்திய தேசபக்தர்களின் ரத்தத்தின் மீது கட்டப்பட்ட சுதந்திர மாளிகை இது....

ஸ்வதந்திர கர்ஜனை- 2(29)

1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு தில்லி மாநகரில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் மூவண்ண சுதந்திரக் கொடி ஏற்றப்படுகிறது. அரசியல் சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. தலைமைப் பீடத்தில் பாபு ராஜேந்திர பிரசாத். சரியாக 12 மணிக்கு ஜவஹர்லால் நேரு எழுந்து நாட்டு மக்களுக்கு ஓர்  உரையாற்றுகிறார்.   மிகப் பிரபலமான அவரது உரையின் தமிழக்கத்தை இப்போது பார்ப்போம்....

ஸ்வதந்திர கர்ஜனை -2(28)

அசாம் பிரதேசத்தை வங்காளத்துடன் இணைக்க வற்புறுத்தி முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கியது. அப்போது அசாம் பிரதேசத்தை ஆண்டுவந்த லீக் அல்லாத கட்சியின் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது....

ஸ்வதந்திர கர்ஜனை – 2(27)

ஒரு கூட்டத்தில் மகாத்மா காந்தி சொன்னார் “நமக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தவனுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் கொடுப்பதில் ஒன்றும் பெருமையில்லை; தீமை செய்தவனுக்கும் நன்மை செய்வதே அவனுக்குப் பெருமை. அதைத் தான் நான் விரும்புகிறேன்” என்றார் அவர்.