பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும், அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடிய வரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்?
Month: December 2023
சர்தார் படேல்- சில தகவல்கள்
அனைவராலும் 'சர்தார்' படேல் என்று அன்போடு அழைக்கப்படும் வல்லபபாய் படேல் 1950 டிசம்பர் 15 நாள் மும்பையில் மாரடைப்பால் காலமானார். அவரைப் பற்றிய சில தகவல்கள்...
ரத்னமாலை
“பல தேசத்து ஞானிகளின் வசனங்களை ‘ஆர்ய’ பத்திரிகையில் ‘போல் ரிஷார்’ ‘Paul Richard’ என்ற பிரான்ஸ் நாட்டு வித்வான் தொகுத்தெழுதிவரும் கோவையிலிருந்து ‘காளிதாஸன்’ மொழி பெயர்த்தது” - என்ற குறிப்புடன் சுதேசமித்திரனில் வெளியான பொன்மொழிகள் இவை....
டிண்டிம சாஸ்திரியின் கதை
கதை சொல்வது போல சரித்திர நிகழ்வுகளையும் சமூக அவலங்களையும் வாசகர் மனதில் பதிய வைப்பது மகாகவி பாரதிக்கு கைவந்த கலை. அவரது தராசுக் கடை, வேதபுரத்து அனுபவங்கள் போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்கள். இதோ, வேதபுரக் கதையாக ஒரு செய்தி அனுபவம்...
மகாகவியும் ஆன்மிகமும்
அரவிந்தரைப் பெரிதும் ஆன்மிகவாதியாக மட்டுமே பலரும் அறிந்துள்ளார்கள். பாரதியைப் பெரிதும் இலக்கியவாதியாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஸ்ரீஅரவிந்தருக்கு இணையான ஆன்மிகவாதி மகாகவி பாரதி என்பதை பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளும் அவரது கவிதைகளும் நமக்கு உணர்த்துகின்றன.
கடமையைச் செய்! – நூல் பதிப்புரை
மகாகவி பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் ‘கடமையைச் செய்!’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பிரசுரத்தால் நூலாக வெளியிடப்படுகிறது. இந்த நூலில் இடம் பெறும் பதிப்புரை இது....
தமிழின் நிலை
தெலுங்கர், மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ்நாட்டிற்கு விளையவில்லை.
மகாகவி பாரதியின் சொல்லாட்சி
ஒரு மொழி உயிர்ப்போடு சிலிர்த்தெழ வேண்டுமானால் புதுப்புதுச் சொற்கள், புதிய புதிய இலக்கியங்கள், பிற மொழியிலிருந்து பெயர்த்துக் கொணர்ந்த புத்தம் புதிய மொழியாக்கங்கள் - இவற்றைக் கொண்டு நாளுக்கு நாள் மொழியின் கட்டமைப்பை இளமைத் துடிப்போடு வைத்திருக்க வேண்டும். அந்தப் பணியைத் தொடங்கி வைத்த பெருமை நம் மகாகவிக்கே உரித்தானது.
தமிழ்நாட்டின் விழிப்பு
ஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும்.
கடமையைச் செய்வதே பிறவிப் பயன்!
பொருள் புதிது தளத்தில் வெளியான, மகாகவி பாரதியின் பகவத் கீதை தமிழாக்க உரை, தற்போது விஜயபாரதம் பிரசுரத்தாரால் ‘கடமையைச் செய்’ என்ற தலைப்பில் அழகிய நூலாக வெளியாக உள்ளது. இந்நூலின் தொகுப்பாசிரியர் சேக்கிழான் எழுதிய தொகுப்பாசிரியர் உரையே இங்கு பதிவாகிறது....
பஞ்சாங்கம்
கால நிலையை ஹிந்துக்கள் பலவிதத்திலே மறந்திருக்கிறார்கள். உடனே செம்மைப்படுத்திக் கொள்ளும் திறமையை நமக்குத் தேவர்களும் ரிஷிகளும் அருள் செய்க.
திருந்துமா திமுக?
அன்றாட அரசியலில் பொருள்புதிது தளத்திற்கு ஆர்வம் இல்லை. ஆனால், தமிழ்ச் சமுதாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு கருத்தாக்கம் குறித்தும் நாம் கவலைப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் முட்டாள்தனமாக உளறிய தர்மபுரி எம்.பி. செந்தில்குமாரின் அசூயையான ஹிந்து வெறுப்புணர்வுப் பேச்சு அதற்கான எதிர்வினையைப் பெற்று, அவரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். இனி திமுக என்ன செய்யப் போகிறது? பிரம்மரிஷியாரின் அற்புதமான கருத்தோட்டம் இதோ…
சென்னை வெள்ளம்: சில சிந்தனைகள்-2
‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று நான்கு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசுக்காகக் காத்திருப்பதால் பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன…. (பகுதி-2)
தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்
நம்முடைய தேசத்தில் நெடுங்காலமாக நடைபெற்றுவரும் அனுஷ்டானப்படி நூலாசிரியரும் உபாத்தியாயரும் தலைமை வர்ணம். அரசர் அதற்கடுத்தபடி. முதலாளிகள் எனப்படும் வைசியர் மூன்றாம் ஜாதி. சரீரபலத்தால் மாத்திரமே செய்வதற்குரிய தொழில்களைச் செய்வோர் நான்காம் வர்ணம். மற்ற தேசங்களில் நமது நாட்டைப்போல் இந்த வகுப்புக்குக் குறிப்பிட்ட நாமங்களும் விதிகளும் இல்லையெனினும், உலக முழுமையிலும் ஒருவாறு இந்த சாதுர்வர்ணயம் (அதாவது, நான்கு வர்ணங்களென்ற வகுப்பு) நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது.
சென்னை வெள்ளம்: சில சிந்தனைகள்
‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று இரண்டு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு காக்க வரும் என்று காத்திருந்து பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன….