தமிழ் இலக்கியத்தின் பொன்முடி கம்ப ராமாயணம். வால்மீகி ரமாயணத்தை முதல்நூலாகக் கொண்டு தமிழில் கம்பர் (பொ.யு. 1180- 1250) இயற்றிய ’ராமாவதாரம்’ தனது இலக்கிய வன்மையால் கம்ப ராமாயணம் என்று சிறப்புப் பெயர் பெற்றுவிட்டது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 113 படலங்களையும், 10569 பாடல்களையும் கொண்ட அற்புதமான இலக்கியம் இது. இந்நூலில் தேர்ந்த திரு. ச.சண்முகநாதன் எழுதியுள்ள இனிய கட்டுரை இது...
Day: April 2, 2023
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 7)
குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருபையால் சாசுவதமல்ல... ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடைய கொள்கை. இதுவே பகவத் கீதையின் நூற்பயன்.
அகமும் புறமும் – 3இ
நெய்தல் நிலக் கருப்பொருள் என்று கூறத்தக்கவை பனை, புன்னை முதலிய மரங்களும், நாரை, சுறா முதலிய பறவை விலங்குகளும், மீன் முதலிய உணவுகளும் ஆகும். இந்நிலத்தில் வாழும் மக்கள் ‘பரதவர்’ என்று குறிக்கப் படுவர். தலைவன் ‘துறைவன்’ என்றும் ‘சேர்ப்பன்’ என்றும் வழங்கப்படுவான். உரிப் பொருள் என்று கூறத்தக்கது, தலைவி தலைவனைப் பிரிந்து ஆற்றாமையால் அரற்றும் நிலைமைதான்....
விவேகானந்தர் கண்ட விவசாயம்
பூஜ்யஸ்ரீ சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி. சென்னை- மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளராக இருந்தவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது…