ஹிந்துத்துவம் –  ஒரு நூல் அறிமுகம்

ஹிந்துத்துவம் என்றால் என்ன? நான்கு குருடர்கள் யானையை தடவிப் பார்த்த கதையாக இருக்கிறது, தமிழகத்தில் உள்ள முற்போக்கு அறிவுஜீவிகளின் இது தொடர்பான புரிதல். அவர்களுக்காகவே வெளியாகியுள்ள சிறிய நூல் இது…

மக்கள் தலைவர் வ.உ.சி.: நூல் அறிவிப்பு.

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தமிழகத்தில் சுதேசி நெருப்பைப் பற்றவைத்த தீரர் பெரியவர் வ.உ.சி. அவர்கள் குறித்த சிறிய நூலை வெளியிடும் அளப்பரும் முயற்சி குறித்த தகவல் இது... இந்நூலை வாங்கிப் பயனடைவோம்!

சிங்கப்பாதை- நூல் அறிமுகம்

சும்மா வரவில்லை சுதந்திரம்.. அஹிம்ஸைப் போராட்டம் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய போராட்டமும் தான் நமது சுந்தந்திரத்திற்குக் காரணம் என்ற உண்மையை விளக்குகிறது இந்நூல்...

ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

அமரர் ரகமி எழுதிய வீரவாஞ்சி நூல் குறித்த திரு. ஜடாயு அவர்களின் அறிமுகக் கட்டுரை இது...

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? – நூல் அறிமுகம்

அறிவுலகில் நீலகண்ட சாஸ்திரியும் (சோழர்கள்), பொதுவெளியில் கல்கி வார இதழில் தொடராக கிருஷ்ணமூர்த்தியும் (பொன்னியின் செல்வன்), அண்மையில் திரைப்படமாக மணிரத்னமும் (PS I & II),  சோழ வரலாற்றைப் பற்றி தமிழர்களிடையே  கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில் உண்மை எது கற்பனை எது என்பதையும், இக்கால நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாஸ்திரி காலத்தின் போதாமைகளை  நீக்கியும், தெளிவைக் கொண்டு வரும் வரலாற்று ஆய்வைச் செய்துள்ளார் ஜெயஸ்ரீ ஸாரநாதன். 

சங்கப்பணியில் சமர்ப்பணமான சுந்தர.ஜோதிஜி- முன்னுரை

விஜயபாரதம் முன்னாள் ஆசிரியர் அமரர் சுந்தர.ஜோதி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் அண்மையில் வெளியாகி இருக்கிறது. இந்நூலை, ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகர் திரு. சா.சீனிவாசன் அழகாகத் தொகுத்திருக்கிறார். அந்நூலின் அறிமுகமாக, அவரது முன்னுரை இடம் பெறுகிறது...

அந்த 15 நாட்கள் – நூல் அறிமுகம்

திரு. பிரசாந்த் போலே எழுதிய அந்த 15 நாட்கள் என்னும் இந்த நூல், நாடு விடுதலை அடைவதற்கு முந்தைய 15 நாட்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை தொகுத்திருக்கிறது.இந்நூலின் முன்னுரை இங்கு நூல் அறிமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது...

தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர் – நூல் அறிமுகம்

ஒவ்வொரு பாடலுக்கும், பதவுரை, விளக்கவுரை ஆகியவற்றுடன், ஆழ்வார்கள் வாக்கு என்ற ஒப்பீடுப் பகுதியையும் இணைத்து, முப்பரிமாணத்தில் நூலைத் தொகுத்திருப்பது மிகவும் சிறப்பு. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நூலாசிரியரின் தேர்ச்சி ஒப்பீடுகளில் வெளிப்படுகிறது. அந்த வகையில்,  ‘தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர்’ என்ற இந்நூல், ஆழ்வார்களின் பாசுரங்களின் துணையுடன் மிளிர்கிறது.

கோமதி சதரத்ன மாலை- நூல் அறிமுகம்

சங்கரன்கோவில் திருத்தலத்தில் உறையும் தேவி  கோமதி அம்மன். சைவ - வைணவ ஒற்றுமைக்குப் பாலமாகத் திகழும் இத்தலத்து அம்மையை தமது செந்தமிழால் பாடிப் பரவுகிறார், சென்ற நூற்றாண்டின் மையத்தில் சைவத்தமிழ் வளர்த்த சைவ சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளையவர்கள். கோமதி அம்மனின் பெருமைகளை விவரிக்கும் இந்த நூறு பாடல்களும் ரத்தினம் போல மிளிர்கின்றன.

பேராபுரி மஹாத்ம்யம்- நூல் அறிமுகம்

தென்திருப்பேரை தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்த தலம். இத்தலத்து இறைவனான மகரநெடுங்குழைக்காதரை அவர்கள் பலரும் பாடி மகிழ்ந்திருக்கின்றனர். அவ்வாறு  எழுதப்பட்ட பல தமிழ் இலக்கியங்களையும் மிகவும் கடினமாக உழைத்து, ஒன்றுசேர்த்து, அரிய, புனிதமான படையலாக அளித்திருக்கிறார் திருவாளர் மகர சடகோபன்.

சங்க செயல்முறையின் வளர்ச்சி – நூல் அறிமுகம்

சங்கம்- அமைப்பு; ஸ்வயம்சேவகர் - உறுப்பினர்; ஷாகா - அடிப்படை செயல்முறை. இந்த சங்க திட்டம் படிப்படியாக வளர்ந்து கொண்டே செல்வதை இந்நூலில் காணும் போது மகிழ்கிறோம். ஒரு மொட்டு  பூவாக மலர்வது போல,  ஒரு சிசு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வது போல, சங்க செயல்முறை இயல்பாக வளர்ந்தது. இதனை விவரிக்கிறது இந்நூல். ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில், இந்த நூல் வெளிவருவது மிகவும் சிறப்பு.

நூற்றெட்டு திருப்பதி களஞ்சியம்- நூல் அறிமுகம்

வைணவர்கள் போற்றி வழிபடும் தலங்களில் பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டவை (மங்களா சாசனம் செய்யப்பட்டவை) 108 திவ்ய தேசங்களாகும். இந்த 108 திருப்பதிகளுக்கும் சென்று வழிபடுவது ஒவ்வொரு வைணவரின் லட்சியக் கனவாகும். இந்த தலங்கள் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நூல், அவற்றிலிருந்து வேறுபட்டது. 108 திவ்ய தேசங்கள் குறித்த இலக்கியப் பதிவுகள் அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்திருக்கும் அற்புத முயற்சி இது.

வந்தே பாரத் வரலாறு- நூல் அறிமுகம்

வந்தே பாரத் ரயிலின் சிற்பியான சுதாஷு மணி எழுதிய நூல் இது. இதனை சிறப்புற தமிழாக்கம் செய்துள்ள திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதிய அறிமுக உரை இது…

தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்: நூல் அறிமுகம்

இந்நூலில் 15 அத்தியாயங்கள் இதில் உள்ளன. முதல் அத்தியாயம் முருக வழிபாடு கௌமார சமயமாக - முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது - தனித்து விளங்கியதையும் பின்னர் பகவத் பாதரால் அது இன்றைய ஹிந்து மதத்தின் ஒரு அங்கமாக ஆனதையும் சொல்கிறது. மற்ற அத்தியாயங்கள் 14 முருக பக்தர்களைப் பற்றியும் அவர்கள் இயற்றிய நூல்களையும் கூறுகின்றன.

ரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை

வரலாற்றை மறந்தவனும் அறியாதவனும் நிகழ்காலத்தில் தவறிழைத்து எதிர்காலத்தை இழந்து விடுகிறார்கள். எனவேதான் வரலாறு முக்கியமானதாகிறது. ஆனால், நாம் பயிலும் வரலாறு உண்மையானதா? வரலாறு என்ற பெயரில் நமது கல்வி நிறுவனங்களில் புகுத்தப்படும் பல பொய்மைகளைத் தோலுரிக்கிறது, திரு. பி.பிரகாஷ் எழுதிய ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ என்ற இந்த நூல். இதுகுறித்து எழுத்தாளர் திரு. ஆமருவி தேவநாதன் தனது வலைப்பக்கத்தில் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது....