சிவகளிப் பேரலை- 21

மனக்குரங்கை சிவபெருமான் கரங்களில் ஒப்படைத்துவிட்டால், பிறகு அந்த மனம் சிவபெருமான் தங்குகிற கூடாரமாக, மாளிகையாக மாறிவிடும். அந்த மாளிகை எப்படி இருக்கும்? சிவபெருமான் காமனைப் பொசுக்கியவன், அழித்தவன். (காம + அரி = காமாரி). ஆகையால், அவனிருக்கும் இடத்தில் தீயாசைகளுக்கு இடமில்லை.

சிவகளிப் பேரலை- 20

“மனம் ஒரு குரங்கு” என்பது உண்மைதான். காட்டுக்குள்ளே குரங்கு தாவிக் குதிப்பதைப்போல, மதி மயக்கத்தை ஏற்படுத்தும் மோகமாகிய வனத்துக்குள்ளே மனம் அங்குமிங்கும் ஓடுகிறது. மலைகளில் குரங்கு கூத்தாடுவதைப்போல, இந்த மனமும் பெண்களின் களியாட்டமாகிய மலைகளை நாடுகிறது. மரங்களில் உள்ள கிளைகள் மீது குரங்கு மாறி மாறிக் குதித்துக் கும்மாளமிடுவதைப்போல், இந்த மனக் குரங்கும் பல்வேறு ஆசைகளாகிய கிளைகளில் மாறி மாறி ஏறி நின்று குதிக்கிறது.

சிவகளிப் பேரலை- 19

இந்தப் பிறவியானது எப்படி இருக்கிறது? தீய ஆசைகள் சூழ்ந்ததாக இருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக தீயோர்களை அண்டி நின்று அவர்களுக்காகப் பணியாற்றுவதாய் இருக்கிறது. இதன் காரணமாக நமக்குத் தீய முடிவைத் தருவதாகவும், கெட்ட பழியை ஏற்படுத்துவதாகவும் மிகுந்த துன்பமயமாகவும் பிறவிச்சுழல் அமைந்துவிடுகிறது. நமது வினைகளால் நமக்கு ஏற்படும் இந்த அனுபவங்களைத்தான் விதி என்றும், பிரம்மன் எழுதிய தலையெழுத்து என்றும் கூறுகிறோம். ....

சிவகளிப் பேரலை- 18

வேண்டிக் கொள்பவர்களுக்கு நிறைவான பலனைத் தரவல்லவர் சிவபெருமான் ஒருவர் மட்டுமே என்கிறார் ஆதிசங்கரர். மற்ற தெய்வ வடிவங்கள் தரும் வரங்களில் எல்லாம் விட்ட குறை, தொட்ட குறை இருக்கத்தான் செய்யும். ஆனால், நிறைவான இறைவடிவான சிவபெருமானின் அருளும் நிறைவாகவே இருக்கும். ....

காற்றிடைச் சாளரம் – 7

நதியொரு சிற்பி
கூருடைத்த உருளைக் கற்கள்.

நதியொரு பாடகர்
விடியலுக்கு முன் கேளுங்கள்.

நதியொரு கலைஞன்
சும்மாயிருப்பதில்லை.

 நதியொரு ஞான யோகி
தன்னியல்பில் தானானது.

... மேலும்... மேலும்...

சிவகளிப் பேரலை- 17

இறைவனது திருவடி தரிசனம், எல்லாவித பாவங்களையும் போக்கி நம்மை உய்விக்க வல்லது. இதைத்தான் திருவள்ளுவர்,  “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது”  என்கிறார். எங்கும் நிறைந்திருக்கக்கூடிய இறைவனின் திருவடி தரிசனம், புண்ணியத்தின் பலன் காரணமாகவோ அல்லது, இறைவனது பெருங்கருணையாகிய பேறு காரணமாகவோ, பக்தனுக்குக் கிடைக்கப் பெறுகிறது. அவ்விதம் சிவபெருமானே, எனக்கு நீ தரிசனம் கொடுத்தாலும்கூட, எனது பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்குத் தோணி போன்ற உனது திருவடிகளை என்னால் காண இயலுமா?

சிவகளிப் பேரலை- 16

“விதியையும் விதித்தென்னை விதித்திட்ட மதியையும் விதித்து அம்மதி மாயையிற் பதியவைத்த பசுபதி நின்னருட் கதியை எப்படிக் கண்டு களிப்பதே” என்று தாயுமானவர் வினவியுள்ளார். அதற்கு பதில் அளிப்பதைப் போல, சிவனின் கடாட்சம் (கடைக்கண்) பட்டால் போதும் அவரோடு இணைகினற அருட்கதியைக் கண்டுகளிக்கலாம் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை- 15

     உயிர்களின் தலைவனாகிய பசுபதியே, உனக்கு என் மீது என்ன வெறுப்பு? அவ்விதம் வெறுப்பு இல்லையென்றால், என்னைக் காப்பாற்றும் விஷயத்தில் ஏனிப்படி பாராமுகமாய் இருக்கிறாய்? கெட்ட ஆசைகள் நிறைந்ததாயும், உன்னைத் தொழுது நற்கதி அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் எனது மனது உழல்கின்றதே? இவ்வாறான மனது எனக்குக் கிடைக்கும்படியாகச் செய்த பிரம்மன் எழுதிய தலையெழுத்தை நீ ஏனய்யா போக்கவில்லை?

இன்றைய இந்தியாவின் முகங்கள்- 7

18 ஆயிரம் அடி உயரத்தில் எதிரி. அங்கிருந்து ஆளுக்கொரு தோட்டா என்று துல்லியமாகக் கொல்ல முடிந்தது. அந்தக் கடினமான சூழ்நிலையில் உயிரைப் பணயம் வைத்து மலை மீதேறி எதிரிகளை வேட்டையாடிய இந்திய வீரர்களின் அபாரமான செயலைக் கண்டு உலகமே வியந்தது. இது நடந்தது 1999-இல் கார்கிலில்.  அந்தப் போரை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியவர் இந்திய ராணுவ தளபதியான ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக். அதன் பிறகு பல நாடுகளில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் ‘கார்கில் விஜயம்’ ஓர் அங்கமாக மாறியது....

சிவகளிப் பேரலை- 14

உலக உயிர்களின் (பசுக்களின்) தலைவனாக (பதியாக) இருப்பவர் சிவபெருமான். அவரே நம்மை ஆளும் பிரபு. அந்தப் பிரபு, எளியவர்களாகிய பக்தர்களுக்கு மிகச் சிறந்த உறவினர். ஆகையால், அந்தச் சிவபெருமானிடம், நீ உறவு கொள்ளத்தக்க மிகவும் எளியவன் நான் என்று நமக்காகக் கூறுகிறார் ஆதிசங்கரர். நமது உறவு, விளக்கிக் கூற இயலாதது, உரைகளில் அடங்காதது என்றும் கூறுகிறார்....

எனது முற்றத்தில் – 5

மதுரை வட்டாரத்தில் மக்களின் குல சாமி மதுரைவீரன். மதுரையை  அடுத்த மேலூரில் உள்ள மதுரைவீரன் கோயில்,  சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஊர் மக்கள் ஒன்றுகூடி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்கள். கோயிலைத் தொடாமல் சாலை விரிவாக்கம் நிறைவேற வேண்டுமானால் நூறு வீடுகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.  மக்கள் துளிக்கூட தயங்காமல் தங்கள் வீடுகளை இடித்து சாலைக்கு வழி விடுவதாக அறிவித்ததோடு நில்லாமல் தங்கள் வீடுகளை இடிக்கவும் தொடங்கினார்கள். தங்களுடைய குல சாமி கோயில் மீது யாரும் கைவைக்கக் கூடாது என்பது அந்த தியாக மூர்த்திகளின் திட உறுதி....

சிவகளிப் பேரலை- 13

தோன்றி மறையக் கூடிய இந்த வாழ்க்கையை நிலையானது என்றும் நிஜமானது என்றும் நினைத்துக்கொண்டு குருட்டுத்தனமாகச் செயல்படுவதால், பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட குருடர்களில் ஒருவனான என் மீது சிவபெருமானே உனது கருணையைப் பொழிந்துவிடு என்று நமக்காக வேண்டுகிறார் ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை- 12

பக்தி செய்வதற்கு எது உகந்த இடம்? குகையா? வீடா? இல்லையேல் காடா? மலையா? எது சிறந்த இடம்? ஆழமான நீர்நிலையில் நின்று கொண்டோ, தன்னைச் சுற்றி தீயை வளர்த்துக்கொண்டோ கடுமையாகத் தவம் புரிவது சிறந்ததா? இல்லையில்லை. பக்தி இல்லாமல் இவ்வாறு செய்வதால் எந்தப் பயனுமில்லை.

சிவகளிப் பேரலை – 11

ஒரு பக்தன் எந்த நிலையில் இருந்தாலும், சிவன் மீதான பக்தி ஒன்று போதும், பிறவிச் சுமையில் இருந்து எளிதில் விடுபடுவான். பிறவித் தளையில் இருந்து விடுபட இந்த ஆசிரமம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை. உண்மையான பக்தி ஒன்று போதும்...

சிவகளிப் பேரலை- 10

மனிதப் பிறவியோ, அதனைவிட மேலான தேவப் பிறவியோ, அல்லது மலை மற்றும் காடுகளில் உழல்கின்ற மிருகப் பிறவியோ, மிகச் சிறிய கொசு வடிவோ, வீட்டு விலங்கோ, புழுவோ, பறவை முதலிய பிறவியோ எந்தப் பிறவி வேண்டுமானாலும் கிடைக்கட்டும். எப்படிப்பட்ட பிறவி எடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, எந்தப் பிறவியானாலும் எந்தை சிவபெருமானை மறவாத மதி வேண்டும் என்பதே முக்கியம்....