கடவுளுக்கு நம்மிடம் உள்ளதைக் காணிக்கையாகத் தருவதைவிட, நமது உள்ளத்தையே காணிக்கை ஆக்குவதே மிகச் சிறந்தது. கடவுளுக்கு நாம் பொருளைப் படைத்தால், அந்தப் பொருள் அவன் படைத்ததுதானே? நாம் உழைத்துச் சேர்த்த பொருள், ஆதலால் நமது என்று கருதலாமே என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால்கூட, சகல ஐஸ்வர்யங்களையும் வைத்திருக்கும் பரமேஸ்வரன் முன் இது மாத்திரம்?
Category: தொடர்
சிவகளிப் பேரலை- 26
இறைவனின் திருவடிகளே இன்பத்தின் எல்லை. பக்தனுக்கு பகவான் பாத சேவையே பரமானந்தம். பேரருளாளனைச் சரண் புகுந்தபின் பேரின்ப மயந்தானே! எதிரிகளால் சுண்ணாம்புக் காளவாயில் இடப்பட்ட சமயத்தில்கூட, “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டுறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே” என்று பாடினார் அப்பர் பெருமான். அதனால் எதிரிகளின் கொடுமைகளால் வெந்துபோகாமல் வெளிவந்தார் அவர். அப்பேர்பட்ட மகிமை வாய்ந்தவை சிவபெருமானின் திருப்பாதங்கள்....
சிவகளிப் பேரலை- 25
சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூறு நூலுக்குக் கடவுள்வாழ்த்து பாடிய பெருந்தேவனார், “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்று சிவசக்தி ஐக்கியக் காட்சியைக் கூறுகிறார். நீல மேனியையும், ஒளிவீசும் நகைகளையும் கொண்ட அம்பிகையை ஒருபுறத்தில் கொண்டவர் சிவபெருமான் என்பது இதற்குப் பொருள்.
காற்றிடைச் சாளரம்- 8
அழுக்குத் தலையணைக்கு வெளுத்த உறை- என்றால் என்னவென்று புரிகிறதா? இந்தக் கவிதைகளைப் படியுங்கள்... கவித்துவத்தில் கிறங்குங்கள்!
சிவகளிப் பேரலை – 24
சிவபெருமான் காமனை மட்டுமல்ல, காலனையும் வென்றவர். ஆகையால் அவர் காலாதீதன் (கால அதீதன்), அதாவது காலத்தைக் கடந்து நிற்பவர். அப்படிப்பட்ட சிவபெருமான் இயற்கை வனப்பு மிகுந்த கயிலாய மலை மீது நமக்காகக் காட்சி தருகிறார். பக்திப் பெருக்கால் காரைக்கால் அம்மையார், சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார் போன்றோர் இத் தெய்வீகத் திருக்காட்சியைக் கண்டிருக்கிறார்கள்.....
சிவகளிப் பேரலை- 23
மகாவிஷ்ணு பன்றி ரூபம் எடுத்து பூமியைத் துளைத்துக்கொண்டு அந்தச் சோதி லிங்கத்தின் அடியைக் காணவும், பிரம்மன் அன்னப் பறவை வடிவெடுத்து ஆகாய மார்க்கமாய் சோதி லிங்கத்தின் முடியைக் காணவும் முயன்று தோற்றுப் போனார்கள். கல்விக் கடவுள் சரஸ்வதியின் நாதன் பிரும்மா, செல்வக் கடவுள் திருமகளின் நாயகன் விஷ்ணு. கல்விச் செருக்கால் தலை ஆகாயத்தில் மிதக்கும். செல்வச் செருக்கால் பணம் பாதாளம் வரை பாயும். ஆயினும் செல்வச் செருக்காலோ, கல்விச் செருக்காலோ பரம்பொருளைப் பார்த்தறிய இயலாது, எளிமையான பக்தியே அதனைச் சாதிக்கும் என்பதே இப் புராணக் கதையின் மையக்கருத்து....
சிவகளிப் பேரலை- 22
ஆண்டவன் என்பவன் ஒருசாராருக்கு மட்டும் அருள்பாலிப்பவன் அல்லன், அனைத்துத் தரப்பினரையும் அரவணைப்பவன். கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவனே கடவுள். நமது பார்வையில் கெட்டவர்களாகத் தெரிபவர்கள்கூட ஆண்டவனை வணங்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மீதும் அருள்பார்வை வீசி, தேவையான நேரத்தில் நற்பாதையில் திருப்புகிறான் ஆண்டவன். சிவபெருமான், மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் மட்டுமல்ல, அரக்கர்களுக்கும்கூட அருள் பொழிந்துள்ளதை பல புராணக் கதைகள் மூலம் தெரிந்துகொண்டிருக்கிறோம். மனிதர்களிலும் பாகுபாடின்றி திருடர்கள், கள்வர்களுக்குக்கூட அவர் கடவுளாயிருக்கிறார். நமது மனத்தை நமக்குத் தெரியாமலே கொள்ளையடிப்பவர் அல்லவா அவர்?
இன்றைய இந்தியாவின் முகங்கள் – 8
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது மாணவர்களுடன் கலந்துரையாடி, கேள்விகள் கேட்டு, அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படி ஒரு முறை (2006இல்) ஆந்திராவில் ஒரு பள்ளியில் மாணவர்களிடையே 'நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?' என்ற கேள்வியைக் கேட்டார். ஒரு மாணவர் எழுந்து நின்று 'இந்தியாவின் முதல் பார்வையற்ற ஜனாதிபதியாக விரும்புகிறேன்' என்று பதிலளித்தான். அவரது பெயர் ஸ்ரீகாந்த் பொல்லா. பிறவியிலேயே கண் பார்வையற்றவர்.....
எனது முற்றத்தில் – 6
பார்த்துப் பார்த்து பிள்ளைகளுக்கு பெற்றோர் பெயர் சூட்டுகிறார்கள். தாத்தாவின் பெயர் தாங்குகிற பேரனுக்குப் பெயரன் என்பதே சரியான பெயராம். மரியாதையால் தாத்தா பெயர் சொல்வதைத் தவிர்த்து, பெயர் சொல்லி அழைப்பதற்காகவே குழந்தைகளுக்கு செல்லப் பெயர் சூட்டுகிறார்கள். மக்கள் பெயர் வைப்பதில் வீட்டு அளவு காரணம் மட்டுமல்ல, நாட்டு அளவு காரணமும் பெரும் பங்கு வகிக்கிறது.....
சிவகளிப் பேரலை- 21
மனக்குரங்கை சிவபெருமான் கரங்களில் ஒப்படைத்துவிட்டால், பிறகு அந்த மனம் சிவபெருமான் தங்குகிற கூடாரமாக, மாளிகையாக மாறிவிடும். அந்த மாளிகை எப்படி இருக்கும்? சிவபெருமான் காமனைப் பொசுக்கியவன், அழித்தவன். (காம + அரி = காமாரி). ஆகையால், அவனிருக்கும் இடத்தில் தீயாசைகளுக்கு இடமில்லை.
சிவகளிப் பேரலை- 20
“மனம் ஒரு குரங்கு” என்பது உண்மைதான். காட்டுக்குள்ளே குரங்கு தாவிக் குதிப்பதைப்போல, மதி மயக்கத்தை ஏற்படுத்தும் மோகமாகிய வனத்துக்குள்ளே மனம் அங்குமிங்கும் ஓடுகிறது. மலைகளில் குரங்கு கூத்தாடுவதைப்போல, இந்த மனமும் பெண்களின் களியாட்டமாகிய மலைகளை நாடுகிறது. மரங்களில் உள்ள கிளைகள் மீது குரங்கு மாறி மாறிக் குதித்துக் கும்மாளமிடுவதைப்போல், இந்த மனக் குரங்கும் பல்வேறு ஆசைகளாகிய கிளைகளில் மாறி மாறி ஏறி நின்று குதிக்கிறது.
சிவகளிப் பேரலை- 19
இந்தப் பிறவியானது எப்படி இருக்கிறது? தீய ஆசைகள் சூழ்ந்ததாக இருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக தீயோர்களை அண்டி நின்று அவர்களுக்காகப் பணியாற்றுவதாய் இருக்கிறது. இதன் காரணமாக நமக்குத் தீய முடிவைத் தருவதாகவும், கெட்ட பழியை ஏற்படுத்துவதாகவும் மிகுந்த துன்பமயமாகவும் பிறவிச்சுழல் அமைந்துவிடுகிறது. நமது வினைகளால் நமக்கு ஏற்படும் இந்த அனுபவங்களைத்தான் விதி என்றும், பிரம்மன் எழுதிய தலையெழுத்து என்றும் கூறுகிறோம். ....
சிவகளிப் பேரலை- 18
வேண்டிக் கொள்பவர்களுக்கு நிறைவான பலனைத் தரவல்லவர் சிவபெருமான் ஒருவர் மட்டுமே என்கிறார் ஆதிசங்கரர். மற்ற தெய்வ வடிவங்கள் தரும் வரங்களில் எல்லாம் விட்ட குறை, தொட்ட குறை இருக்கத்தான் செய்யும். ஆனால், நிறைவான இறைவடிவான சிவபெருமானின் அருளும் நிறைவாகவே இருக்கும். ....
காற்றிடைச் சாளரம் – 7
நதியொரு சிற்பி
கூருடைத்த உருளைக் கற்கள்.
நதியொரு பாடகர்
விடியலுக்கு முன் கேளுங்கள்.
நதியொரு கலைஞன்
சும்மாயிருப்பதில்லை.
நதியொரு ஞான யோகி
தன்னியல்பில் தானானது.
சிவகளிப் பேரலை- 17
இறைவனது திருவடி தரிசனம், எல்லாவித பாவங்களையும் போக்கி நம்மை உய்விக்க வல்லது. இதைத்தான் திருவள்ளுவர், “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” என்கிறார். எங்கும் நிறைந்திருக்கக்கூடிய இறைவனின் திருவடி தரிசனம், புண்ணியத்தின் பலன் காரணமாகவோ அல்லது, இறைவனது பெருங்கருணையாகிய பேறு காரணமாகவோ, பக்தனுக்குக் கிடைக்கப் பெறுகிறது. அவ்விதம் சிவபெருமானே, எனக்கு நீ தரிசனம் கொடுத்தாலும்கூட, எனது பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்குத் தோணி போன்ற உனது திருவடிகளை என்னால் காண இயலுமா?