தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 16

அகப்பாடல்களிலும் கூட செங்கோலையும், செங்கோன்மையையும் வலியுறுத்தும் தமிழ்ப் புலவர்களின் பாங்கு எண்ணி மகிழத் தக்கதாகும். மூவேந்தரைப் புகழும் வகையில் அமைந்த, இலக்கியச் சுவை மிகுந்த சில முத்தொள்ளாயிரம் அகப்பாடல்கள் இங்கே...

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 15

பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகையில் அடங்கிய 11 நீதிநூல்களில் அரசு அறநெறிச் செய்திகள் 9 நூல்களிற் காணப்படுகின்றன. இவற்றில் திருக்குறள் தொடர்பான விரிவான செய்திகளை முதல் இரு அத்தியாயங்களில் பார்த்தோம். பிற 8 நீதி நூல்களின் செங்கோன்மைக் கருத்துகளை இங்கே காண்போம்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 14

மன்னரின் அணிகலன்களான மணிமகுடமும், கூர்மையான வாளும், வெண்கொற்றக்குடையும், செங்கோலும் பொருள் பெறுவது அவர்களின் நடுநிலைமை தவறாத, கோல் கோணாத, மக்களைப் புரக்கும் அருளாட்சியால் தான். இதனை அவர்களின் கரத்தில் ஏந்தி இருக்கும் செங்கோல் அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 13

இந்த பரந்த பாரத தேசத்தின் நில எல்லையைத் தீர்மானமாகக் கூறும் புறநானூற்றின் 17ஆம் பாடல், மிகவும் கவனத்திற்குரியது. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நம் நாடு ஒன்றுபட்டு இருந்ததன் அடையாளம் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளதன் ஆதாரம் இது.

பாரதியின் தராசு – உரையாடும் உற்ற நண்பன்

பத்தி எழுதுபவர் எதைப் பற்றி வேண்டுமாயினும், விரிவாகவும், ஆழமாகவும் ஆய்ந்து எழுதுவார்; சில நேரங்களில் நாட்டு நடப்பை போகிற போக்கில் சொல்லிச் செல்வார்; சில நேரங்களில் நகைச்சுவைத் தோரணமாகவும் அந்தப் பத்தி எழுத்து இருப்பதுண்டு. இவை அனைத்திற்கும் முன்னோடியாக பாரதியின் ‘தராசு’ கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 12

தமிழ் இலக்கியங்களில் அக்கால வரலாற்றை மன்னர் கொடிவழியுடன் பதிவு செய்துள்ள ஒரே நூல், பதிற்றுப்பத்து. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பாடல் இலக்கியமான இந்நூல், சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி, பத்து புலவர்கள் பாடிய பத்துப் பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலில் நல்லாட்சி, செங்கோல் குறித்துப் பயின்றுவரும் பாடல்களைக் காண்போம்...

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 11

நமக்குக் கிடைத்திருக்கும் 22 பரிபாடல்கள், மாலவன், முருகன், வைகை ஆறு ஆகியவை பற்றிய பாடல்களே. இதில் மாலவனின் அறக்கோலாக செங்கோல் இடம் பெறும் கருத்து பரிபாடல்-3இல் வருகிறது.... அறத்திற்கு ஆதியாக விளங்குவது மன்னவனின் செங்கோல்; அந்த மன்னவனுக்கும் ஆதியாக நிற்பது கார்மேகவண்ணனின் அறக்கோல்.

‘தந்தை பெரியார்’ வாழ்க!

இந்திய விடுதலைக்காக உழைத்த உத்தமர்; எதிர்கால இந்தியா எந்த அடிப்படையில் அமைய வேண்டும் என்று கனவு கண்ட சிந்தனையாளர்; சமூகம் உயர சீர்த்திருத்தங்களை முன்னெடுத்த முன்னோடி; கல்வியே முன்னேற்றும் என்று அறிந்து பல்கலைக்கழகம் அமைத்த பெருமகன்; அறிவுத் திறத்தால் ஆங்கிலேயரையும் வசப்படுத்திய இதழாளர்- பண்டித மதன்மோகன் மாளவியாவை ’தந்தை பெரியார்’ என்று கட்டுரையாளர் திரு. டி.எஸ்.தியாகராஜன் போற்றுகிறார். ஏன்? படியுங்கள், விடை கிடைக்கும்....

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 10

எட்டுத்தொகை நூல்களில் அகப்பாடல்கள் கொண்ட ஐந்து நூல்களில் (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு) பயின்று வரும் செங்கோல் குறித்த செய்திகளைக் காணலாம்…

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 9

பத்துப்பாட்டு இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்களில் இடம்பெற்ற செங்கோல் தொடர்பான செய்திகளை சென்ற அத்தியாயத்தில் கண்டோம். அவை தவிர்த்த பிற பத்துப்பாட்டு நூல்கள் குறித்தும், அவற்றில் பயின்று வரும் செங்கோல் கருத்துகள் குறித்தும் இங்கு காண்போம்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 8

பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்து, ஆற்றுப்படை நூல்கள். அவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை ஆகியவை. இந்த ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படையிலும், மலைபடுகடாமிலும் மன்னரின் / நாட்டின் சிறப்புகள் குறித்த செய்திகள் இருந்தாலும், செங்கோல் தொடர்பான நேரடியான குறிப்புகள் இல்லை. பிற மூன்று ஆற்றுப்படை நூல்களிலும் காணப்படும் செங்கோல் குறித்த பாடல்களை இங்கு காண்போம்...

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -7

உலகியல் இன்பங்களை விட உயர்ந்தது துறவு என்று கூறுவதற்காக திருத்தக்க தேவரால் இயற்றப்பட்ட காப்பியமான சீவக சிந்தாமணி, அக்கால மன்னரின் முறை வழுவா ஆட்சியின் சின்னமாக செங்கோலை முன்னிறுத்தும் செய்யுள்களைக் கொண்டு இலங்குகிறது....

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 6

பழந் தமிழ் இலக்கணமான தொல்காப்பியம்,  ‘படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பது பொருட்களும் வேந்தர்க்கு உரியவை’ என்று கூறுகிறது. இவை  அனைத்திற்கும் மேலானதாக செங்கோல் மன்னனின் அடையாளம் என்கிறது தொல்காப்பியம்....

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 5

இளமை நிலையாமை, யாக்கை (உடல்) நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் மணிமேகலை காப்பியம் அழுத்தமாகக் கூறுகிறது. பௌத்த சமயத்தின் ஆணிவேரான துறவையும் தொண்டையும் போற்றிப் பரவுகிறது இக்காப்பியம். என்றபோதும் மன்னனின் செங்கோல் உயர்வை காப்பியம் ஆங்காங்கே முன்வைப்பது, செங்கோல் வீழின் துறவும் நிலையாது என்பதால் தான்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 4

‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ ஆகிய மூன்று அறவுரைகளை முன்னிறுத்தி, கற்பின் கனலி கண்ணகியின் கதையைக் காப்பியமாக்கி இருக்கிறார் இளங்கோ அடிகள். இக்காப்பியத்தில் ஆங்காங்கே, செங்கோல் குறித்தும், நல்லாட்சி குறித்தும் இனிய செய்திகள் தொடர்ந்து பயின்று வருகின்றன. அவற்றை இங்கு காண்போம்…