வள்ளலாரின் இருநூறாவது ஆண்டு கொண்டாடப்படும் இந்த ஆண்டில், தமிழகத்தில் வள்ளலாருக்கு திராவிட முத்திரை குத்திட அரசாலும், ஆன்மிகத்துக்கு எதிரான சிலராலும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வள்ளலார் என்னும் சூரியனை சிறு குமிழில் அடைக்க முடியாது. ஆயுள் முழுவதும் ஆன்மிக நெறியாளராக வாழ்ந்த வள்ளலார் உண்மையில் சனாதனம் காக்க உதித்த அருட்செல்வரே என்கிறார் எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன்....
Author: vamumurali
அன்பே தளிகையாய்…
தமிழை உருகி உருகிக் காதலிக்கிறார்கள் வைஷ்ணவர்கள். பொதுவாக தமிழை உயிர்ப்புடன் வைத்திருப்பது பக்தி இலக்கியங்களே என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம்.... எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதனின் அனுபவக் கட்டுரை...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 21
காலந்தோறும் நமது தாய்மொழி எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கான நிகழ் சாட்சியமாகவே, நமது ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ என்ற தேடலைக் கூற முடியும். நாட்டு மக்கள் நலம் பெற உதவும் மன்னரின் செங்கோலுக்கு நமது இலக்கியங்கள் சுமார் 2,500 ஆண்டுகளாக அளித்த முக்கியத்துவம் கடந்துபோன அத்தியாயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் நிறைவாக, நல்லாட்சி, செங்கோல் குறித்து, தமிழ்த்தாயின் தவப்புதல்வர் மகாகவி பாரதியின் கருத்து என்னவாக இருந்தது என்று அறிவோம்.
அனைவரையும் அறவோர் ஆக்குவோம்!
திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேரா. இளங்கோ ராமானுஜம், சுவாமி சித்பவானந்தரின் வழியில் ஆன்மிக சிந்தனைகளைப் பரப்பி வருபவர். அன்னாரது பொருள் பொதிந்த கட்டுரை இது…
ஜே.டி.சாலிங்கர், லியோ டால்ஸ்டாய் மற்றும் சுவாமிஜி
தில்லியில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு. சௌமிக், சுவாமி விவேகானந்தரின் வெளிநாட்டு அன்பர்கள் குறித்து 2013-இல் எழுதிய கட்டுரை இது...
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 20
தமிழ் இலக்கிய- இலக்கணங்களில் செங்கோலைத் தேடும் நமது இலக்கிய யாத்திரையின் நிறைவுப் பகுதி மகாகவி பாரதியே. எனினும் அவருக்கு முன்னோடியாக விளங்கியவர், தமிழகத்தின் தவச்செம்மல், சநாதனம் காக்க உதித்த அறச்செம்மலான வள்ளலாரே.
இரண்டு உலகங்கள்
‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது பழமொழி. அதுபோலவே தான், மனித உணர்வுகள் அற்ற அறிவியலும் இலக்கியமும் வாழ்வின் இனிமைக்கு உதவாது என்கிறாரோ புதுமைப்பித்தன்?
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 19
நமது நாட்டில், நல்லரசன் ஆளும் நாட்டில் மாதம் மும்மாரி பொழியும் என்ற நம்பிக்கை பாரம்பரியமாக நிலவுகிறது. செங்கோலாட்சியின் அடையாளமே மாதம் மும்மாரி மழை தான் என்கிறது ‘விவேக சிந்தாமணி’ என்னும் பிற்கால நீதிநூல்....
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 18
தமிழ் இலக்கியத்தின் என்றுமுள சீரிளமைக்கு அடையாளமான இனிய பாசுரங்கள் வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் காணப்படுகின்றன. அவற்றில் செங்கோல் ஏந்தி வரும் பாசுரங்கள் சிலவற்றை இங்கே நாம் காணலாம்...
நீதியின் அடையாளம் செங்கோல்!
செங்கோலின் சிறப்புகள் குறித்து பத்திரிகையாளர் கோதை ஜோதிலட்சுமி எழுதி ‘தினமணி’ நாளிதழில் வெளியான இனிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.
தவறுகள், குற்றங்கள் அல்ல…!
தவறி விழுவது குற்றமல்ல, அதையே வாடிக்கையாகக் கொள்ளும்போது அதுவே குற்றமாகிறது. வீழ்வது தவறு என்பதை மனசாட்சிப்படி உணர்பவன் தவறிழைத்தாலும், குற்றமிழைக்க மாட்டான். தவறிழைப்பதற்கான தூண்டுதல் எங்கேனும் இருந்து வந்துகொண்டே தான் இருக்கும்; நமது மனம் தவறிழைக்கத் தயாராகாத வரை அதனால் குற்றமில்லை- என்றெல்லாம் தோன்றுகிறது, திரு. ஜெயகாந்தன் அவர்களின் இச்சிறுகதையைப் படிக்கும்போது…
தமிழ் மரபில் செங்கோலுக்கு தனி இடம்!
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்; மருத்துவர்; சிறந்த பேச்சாளர்; பாரதி ஆர்வலர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஜி20 இருக்கை பேராசிரியரான, டாக்டர் சுதா சேஷய்யன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது…
தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -17
நமது தமிழ் மொழியின் வனப்பை மெருகேற்றிய இனிய பாடல்களை சைவர்களின் பன்னிரு திருமுறையும், வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தமும் அளித்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனைப் போற்றுவதுடன், அக்கால மக்களின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கொண்டுள்ளன. இவற்றில் பன்னிரு திருமுறைகள் குறித்தும், அதில் செங்கோல், நல்லாட்சி தொடர்பான செய்திகள் பயிலும் சில பாடல்களையும் முதலில் காண்போம்.
நினைவு முடிச்சு
போருக்குச் செல்லும் வீரனின் கரங்களில் கட்டப்படும் காப்புக்கயிறு போல, நம் வாழ்விலும் சில நினைவு முடிச்சுகள் தேவைப்படுகின்றன. இதோ நமது வாழ்வை வளப்படுத்தும் இனிய வழிகாட்டுதல் கட்டுரை. இதனை வழங்கி இருப்பவர், பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள்...
ஆற்றங்கரைப் பிள்ளையார்
சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தனின் அற்புதமான உருவகக் கதை இது... 1934ஆம் ஆண்டு ‘மணிக்கொடி’ இதழில் வெளியான இக்கதை சொல்ல வருவது என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா?