புதுவையில் பூத்த யோக மலர்- 13

மனிதன் தன்னைப் பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பது அவரது யோக நெறியின் முதல் படி. பக்தி, கர்ம, ஞான யோகம் என்கின்ற வழக்கமான யோக மார்க்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படும் இதைப் பற்றி,  “எனது யோக நெறியில் குறுக்கு வழி இல்லை. ஆரம்ப நிலைகளைத் தவிர்த்து விட்டு கடைசியில் படியில் தாவி ஏற முடியாது. அது ஆபத்தானதும் கூட” என்று ஸ்ரீ அரவிந்தர் தனது ஒருங்கிணைந்த யோகத்தைப் பற்றி கூறியுள்ளார்.