திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 9

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -9)
சிக்கந்தர் தர்கா

காண்க: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 9

தீபத் தூண் தர்காவுக்கு சொந்தமாம்!

வக்பு வாரியம் வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் சிக்​கந்​தர் தர்கா​வுக்கு சொந்​த​மானது என்று வக்பு வாரி​ய வழக்கறிஞர், உயர் நீதி​மன்​ற மதுரை அமர்வில் வாதாடினார்.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​மாறு நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக தமிழக அரசு, அறநிலை​யத் துறை, கோயில் நிர்​வாகம், தர்கா நிர்​வாகம் உட்பட 20 மேல்​முறை​யீட்டு மனுக்​களும், நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக 6 மேல்​முறை​யீடு மனுக்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை நீதிப​தி​கள் ஜி.ஜெய​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் டிச. 16ஆம் தேதி நடை​பெற்​றது. வக்பு வாரிய வழக்​கறிஞர் முபின் வாதிடும்​போது, “மலை உச்​சி​யில் உள்ள தூணில் தீபமேற்​றும் பழக்​கம் இருந்​த​தில்​லை. நெல்​லித்​தோப்பு மற்​றும் அது சார்ந்த பாதைகள், அவ்​விடத்​துக்குச் செல்​லும் படிக்​கட்​டு​கள் தர்கா நிலங்​கள் முஸ்​லிம்​களுக்​குச் சொந்​த​மானவை என நீதி​மன்ற உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தொல்​லியல் துறை​யிடம் தனி நீதிபதி கருத்து கேட்​க​வில்​லை” என்​றார்.

இதையடுத்து நீதிப​தி​கள், தர்கா​வுக்கு சொந்​த​மான நிலங்​கள் தொடர்​பான ஆவணங்​களை தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டனர்.

மதுரை ஆட்​சி​யர், காவல் ஆணையர் தரப்பு வழக்​கறிஞர் விகாஸ்​ சிங் வாதிடும்​போது கூறியது:

“தனி நீதிபதி தீர்ப்​பால் திருப்​பரங்​குன்​றத்​தில் பதற்​ற​மான சூழல் ஏற்​பட்டுள்ளது. 1862, 1960  ஆண்​டு​களில் பிரச்​சினை எழுந்​த​போது, தீபம் ஏற்ற அனு​மதி கொடுக்​க​வில்​லை. தர்கா அரு​கில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று புதி​தாக உத்​தர​விட்​டு, அதற்கு போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும் என உத்​தர​விடு​வது ஏற்​புடையதல்ல. தர்கா​வுக்​குச் சொந்​த​மான பாதை வழி​யாக சென்​று​தான் தீபம் ஏற்ற முடி​யும். இதனால், சட்​டம்​-ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும்.

தனி நீதிப​திக்கு மதம் சார்ந்த விவ​காரங்​களில் முடி​வெடுக்க அதி​காரம் இல்​லை. அவரது உத்​தர​வால் பொது அமைதி பாதிக்​கப்​படும் சூழல் உரு​வாகி​யுள்​ளது. தனி நீதிப​தி, தான் எடுத்​துக்​கொண்ட சத்​தியப் பிர​மாணத்​துக்கு எதி​ராக செயல்​பட்​டுள்​ளார். அவருக்கு வரும் தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்​கான வாய்ப்​புள்​ளது” என்​றார்.

இதற்கு மனு​தா​ரர் தரப்​பில் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது.

மனு​தா​ரர்​கள் வழக்​கறிஞர்​கள் வாதிடும்​போது, “தனி நீதிபதி ஆய்வு செய்த பின்​னரே தீபம் ஏற்ற உத்​தர​விட்​டுள்​ளார். தர்​கா​வில் இருந்து 15 மீட்​டருக்கு அப்​பால்​தான் தூண் உள்​ளது” என்​றார்.

அப்​போது நீதிப​தி​கள், “தூண் எவ்​வளவு தொலை​வில் உள்​ளது என்​பதை முதலில் தெளிவுபடுத்​துங்​கள். மலை உச்​சிக்குச் செல்ல எத்​தனை பாதைகள் உள்​ளன. அவற்​றில் பயன்​பாட்​டில் உள்​ளவை எத்​தனை, அரசு மற்றும் இந்து சமய அறநிலை​யத் துறை தரப்​பில், அது சர்வே தூண் என்​றும், சமணர் கால கல் தூண் என்​றும் கூறப்​படு​கிறது. அரசு, அறநிலை​யத் துறை, தர்​கா, காவல் துறை​யின் ஆட்​சேபங்​களை தனி நீதிபதி கருத்​தில் கொண்​டா​ரா, 1994 தீர்ப்​பில் மலை உச்​சி​யில் உள்ள தூண் எனக் குறிப்​பிடப்​பட்​டுள்​ள​தா, மாற்று இடத்​தைப் பரிசீலிக்​கத்​தானே கூறப்​பட்​டுள்​ளது? பிறகு தீபத்​தூணில் தீபமேற்ற வேண்​டும் என கோர முடி​யு​மா?” என்று கேள்வி எழுப்​பினர்.

மனு​தா​ரர்​கள் தரப்​பில், “தனி நீதிப​தி​யின் உத்​தரவை நிறைவேற்ற வேண்​டியது காவல் துறை​யின் கடமை. வழக்கை விரை​வில் விசா​ரித்து முடிக்க வேண்​டும்” என்று கூறப்​பட்​டது.

இதையடுத்​து, விசா​ரணையை டிச. 17-ம் தேதிக்கு  தள்​ளி​வைத்து நீதிப​தி​கள் உத்​தரவிட்​டனர்.

தலைமைச் செயலர், ஏடிஜிபிக்கு விலக்கு அளிக்க மறுப்பு: 

திருப்பரங்குன்றம் தீப வழக்கு உத்தரவை நிறைவேற்றாததால் மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, விசாரணையை டிச. 17-க்கு   தள்ளி வைத்த தனி நீதிபதி, தாமாக முன்வந்து மத்திய உள்துறைச் செயலரை எதிர் மனுதாரராகச் சேர்த்தும், தமிழக தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகவும் உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர் நீதிமன்ற அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள், “தற்போதைய சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை 17ஆம் தேதி தொடரும்” என்று உத்தரவிட்டனர்.

(ஆதாரம்: இந்து தமிழ் திசை- 17.12.2025)

$$$

நீதிமன்ற உத்தரவை அரசு நிர்வாகம் மீறுவதை ஏற்க முடியாது

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திட்டவட்டம்

மதுரை: ‘‘நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக காட்டுவதை மன்னிக்க முடியாது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கவும் வழிவகுக்கும்’’ என்று திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு டிச. 17-இல் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீண் குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராயினர்.

தமிழக அரசு தலைமைச் செயலர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொளி வாயிலாக ஆஜராயினர்.

(தினமலர்- 18.12.2025)

அப்போது நீதிபதி, ‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் மீறியுள்ளனர், அவமதித்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் 144 தடை ஆணை பிறப்பித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும். நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேனா என்று, இரு நீதிபதிகள் அமர்வில் ஆட்சியர், காவல் ஆணையருக்காக ஆஜரான வழக்கறிஞர் ஏன் கூறினார்?’’ என்று தலைமைச் செயலரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு தலைமைச் செயலர் பதில் அளிக்கையில், ‘‘எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்ற கருத்து இல்லை. அந்த உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாமல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அவர்களாகவே 144 தடை ஆணை பிறப்பித்தார்களா? அல்லது அறிவுறுத்தல்களின் பேரில் உத்தரவு பிறப்பித்தார்களா என காணொளியில் ஆஜரான தலைமைச் செயலரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தலைமைச் செயலரிடம், திண்டுக்கல் மாவட்டம்- ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி ஒரு சட்டவிரோத தேவாலயக் கட்டுமானத்துக்கு எதிராக வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியதும் சுட்டிக்காட்டப்பட்டது. அங்கு பிரிக்கப்படாத குடும்பச் சொத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாமல் ஒரு தேவாலயம் கட்டப்படுகிறது. அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிச. 18இல் விசாரணைக்கு வருகிறது. ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் காரணமாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

சட்டப்படி அந்த தேவாலயத்தின் கட்டுமானம் சட்டவிரோதமானது. அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்தக் கட்டிடத்தை தொடக்கூட அதிகாரிகள் தயங்குவது போலத் தெரிகிறது. சட்டம் ஒழுங்கை வசதியான போலி காரணமாகப் பயன்படுத்துவது தெரிகிறது.

இவற்றைப் பார்த்து நான் சோர்வடைந்து விட்டேன். எத்தனை வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்ற அவமதிப்புக்காக நான் அழைக்க வேண்டும்? இன்றும், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஓர் உரையைப் படித்த தலைமைச் செயலர், நீதித்துறை மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தும் போது சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதை ஏற்க முடியாது.

ஒரு நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தால், உயர் நீதிமன்றத்தால் அதற்குத் தடை விதிக்கப்படாமலோ அல்லது அது ரத்து செய்யப்படாமலோ இருந்தால், அதற்கு கீழ்ப்படிய வேண்டும். நீதித்துறை உத்தரவைச் செயல்படுத்த முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சட்டம் ஒழுங்கு என்பது நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்கான ஒரு காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாதது. அது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுக்கும். அது அரசியலமைப்பு இயந்திரம் முடங்க வழிவகுக்கும்.

எனவே, இந்த நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தலைமைச் செயலர் பதிலளிக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஜன.9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பு செய்தவர்கள் அன்றைய தினம் ஆஜராக வேண்டும்.

-இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

  • நன்றி: இந்து தமிழ் திசை (18.12.2025)

$$$

2 thoughts on “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 9

Leave a comment