விநாயக தாமோதர சாவர்க்கர் ஒரு புரட்சிகர தியாகி; இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். அவரது வாழ்க்கையே தொடர் போராட்டத்தின் அடையாளம். அந்தப் போராட்டங்களில் முதலாவதாக இருப்பது இந்த நாட்டின் பண்பாட்டுக்கும் பாரம்பரியத்திற்கும் புத்துயிரூட்ட அவர் நடத்திய போராட்டம். அடுத்ததாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற நடத்திய போராட்டம். மூன்றாவதாக, சுயநல அரசியலுக்காக தனது சக இந்தியர்கள் செய்த கேலியையும் எதிர்ப்பையும் தாங்கி நின்றது.